தாத்தா அருகில் சென்று அவரை ஒரு இருக்கையில் அமர வைத்தவன், அவர் நடக்கும் காரணம் புரிந்து ,
“தாத்தா சென்னைலையே பெஸ்ட் கேட்டரிங் சர்வீஸ் கிட்ட அப்பா இந்தப் பொறுப்ப ஒப்படைச்சிருக்காங்க நீங்க ஓரமா இருந்து ரெஸ்ட் எடுங்க , நடந்துட்டே இருந்தா கால் வலிக்கும்…” என்றவனிடம் ,
“பேரா … இது சென்னைக் கிடையாதே , பத்து இருபது வகை சாப்பாட இலையில முதல்லயே போட்டு வச்சுட்டு போய் உக்காந்து சாப்பிடுறதுக்கு … இங்க அப்படி செய்ய முடியாது….வீட்டு ஆளுங்க போய் சாப்பிடுங்க , என்ன வேணும் எது வேணும்னு கேட்டு வைக்கும் போது அவங்க மனசும் நிறையும் … வயிறும் நிறையும் ….அங்க பாரு உங்கப்பனையும் சித்தப்பனையும் , அங்க கோட் சூட் போட்டு பை தூக்க ஒரு ஆளு , கதவு திறக்க ஒரு ஆளுனு இருந்தாலும் , இது நம்ம ஊரு நம்ம உறவுகள், நம்ம பொண்ணு கல்யாணம்னு வேட்டிய மடிச்சிக்கட்டிட்டு வந்தவங்கள உபசரிக்கிறாங்க … அது தான் நானும் பார்த்துட்டு இருக்கேன்.… ”
“தாத்தா நீங்க சொல்றது சரிதான் … நீங்க உக்கார்ந்து என்னைய கமன்ட் பண்ணுங்க… நான் என்ன செய்யணுமோ செய்றேன் …” என்றவன் , முழுக்கை சட்டையின் மணிக்கட்டு பட்டன்களை அவிழ்த்து மடித்து விட்டுக் கொண்டே தாத்தா சொன்னது போல் செய்துக் கொண்டிருந்தான்.
பந்தியில் அன்று அவனிடம் பேசிய திலீபனின் சித்தப்பாவைக் கண்டு உபசரிக்க ,
“என்ன மருமகனே நீங்க எவ்வளவு பெரிய ஆளு ..” என அவனிடம் பேச்சுக் கொடுக்க , அவரிடம் சிரித்துப் பேசி நகர்ந்து வந்தவன் ,
“ஐயோ இவர் கேட்கிற கேள்விக்கும் , விசாரிச்சு வச்சதுக்கும் என்னைய இப்பவே பொண்ணுக்கு தாலிக்கட்டுனு சொல்வாரு போலவே ….இப்போதைக்கு பின்னாடி சமையல் செய்ற இடத்துக்கிட்டயே நிற்போம் …” என முடிவெடுத்தவன் பின்பக்கம் சென்று நின்றுக் கொண்டான்.
அதே நேரம் சங்கீதாவிற்கு நலங்கு வைத்து முடித்ததும் வித்யா அருகில் நின்றுப் பேசிக் கொண்டிருந்த வருவிடம் வந்த அரவிந்த் ,
“பாப்பா இங்க வீட்டுப் பின்னாடி ஒரு மரத்துல ‘பயா நெஸ்ட் ( தூக்கணாங்குருவிக் கூடு )இருக்கு சொன்னியே மா … எங்க காட்டு … ” என வருவிடம் வாய் பேசினாலும் கண்கள் வித்யாவிடம் அங்கு வா என்பது போல் செய்தி சொல்ல ,
“அண்ணா வாங்க வாங்க .. வித்யா நீயும் வாடி .. நாம அன்னைக்குப் பார்த்தப்ப அதோட சிக் பறக்க ரெடியா இருந்தது .. ” என்று அதைப் பற்றிப் பேசியவாறே பின்புறம் அழைத்துச் செல்ல , அரவிந்த் கையில் கார் சாவியை எடுத்து தந்தவன் ,
“பாப்பா…. இங்க உன் ஃபிரண்ட்ஸ்க்குத் தர நிறைய கிஃப்ட் எடுத்துட்டு வந்தியேமா… அதையெல்லாம் கார்லருந்து எடுத்து கொடுக்கணும் சொன்ன …. எல்லாரும் கிளம்ப ஆரம்பிச்சிட்டாங்க நாளைக்கு நமக்கு நேரம் இருக்குமோ என்னவோ…..”
அவன் சொல்லவும் பரிசுப் பொருள் ஞாபகம் வர , ” ண்ணா …. மறந்தேப் போய்ட்டேன்… அம்மு நாளைக்கு கல்யாணம் முடிஞ்சதுமே கிளம்பிடுவாளாம்….இப்பவே போறேன் … வித்யா நீ அண்ணாவோடபோ … நான் இதோ வாறேன்….” என்றவாறே வீட்டினுள் நுழைந்தவள் ,
“விக்கிக்கு தர்றது ரூம்ல கொண்டு போய் அப்பவே வச்சிட்டேன் … இன்னைக்கு நைட் இங்க தான இருக்கப் போறேன் … எப்படியாவது பேசிக் கொடுத்துடணும்… இங்க உள்ள ஃபிரண்ட்ஸ் க்கு ஃபேர்வல் கிஃப்ட் இப்பவே கொடுத்துடலாம்… ” என யோசித்தவாறே போக , எதிரில் வெளியில் இருந்து பின்புறம் செல்ல உள்ளே வந்த விக்ரமை கவனிக்காது மோதிக் கொண்டு கீழே விழப் போக …. நினைவின் நாயகன் ,
“ஹேய்…. ” என்றவாறே அவளின் கைப்பிடித்து நிலைப்படுத்தவும் மகிழ்ச்சியில் ,
“விக்கி… ” எனப் புன்னகை முகமாக சொல்ல ,
“விக்கினு சொல்லாதனு சொல்லிருக்கேன்ல….” என்றவன் அங்கும் இங்கும் பார்த்து விட்டு , பின்புற வாசலில் நின்று பின்புறத் தோட்டத்தைப் பார்க்க , ஒரு புறம் சமையல் செய்ய பந்தல் போட்டு மறைக்கப்பட்டு விளக்குகள் ஒளிரஆட்கள் வேலை செய்துக் கொண்டிருக்க , மறுபுறம் தென்னைத் தோப்பு இருந்த இடம் இருளாக இருந்தது.
விக்ரம் அவ்வாறு பின்னால் பார்க்கும் நேரம் , அந்த இருளில் அரவிந்த் வித்யாவின் கையைப் பிடித்திருக்க , பயத்தில் வீட்டைப் பார்க்க விக்ரம் அங்கும் இங்கும் பார்வையைச் சுழற்றுவது தெரிய ,
“ஐயோ அண்ணாப் பார்க்கிறாங்க … ” என்றவளை , “ஷ்… இருட்டுல… நாம தெரிய மாட்டோம் …” என்றவாறு தோப்பினுள் கைப்பிடித்து இழுத்துச் சென்றான்.
அதே நேரம் அவன் பின் வந்து நின்ற வரு , “என்ன விக்கிப் பார்க்கிற … நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் … ” எனவும் ,
“நானும் உங்கிட்ட ஒன்னு சொல்லணும் … நீ அங்க … ” என்றவாறே திரும்ப , அங்கு அவனிடம் பேச்சுக் கொடுத்த மாமா வர ,வருவை கைப் பிடித்து பின்புறம் இருந்த தேங்காய் மட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று மறைவாக அமருமாறு சைகை செய்தவன் , எழுந்து நின்று அவர் அங்கேயே நின்று யாருடனோ பேசுவது தெரிந்ததும் மறுபடியும் குனிந்துக் கொள்ள , வருவிற்கு அவனது செய்கைகள் சிரிப்பைத் தர ,
“விக்கி இந்த பிளேஸ் நல்லா இருக்கு …. நாம விளையாடுறதும் ஹைட் அன்ட் சீக் போல நல்லா இருக்கு … ஆனா ஏன் …” நிஜமாகவே வரு சொன்ன விதம் அவனுக்கு புன்னகையோடு அவளை ரசிக்கவும் செய்து ,
மனதினுள் , ” இன்னும் பாப்பா வா தான் இருக்கா … எப்படித் தான் சமாளிக்கப் போறானோ ….”
“ஷ் …. உனக்கு விளையாட்டா இருக்கா … அங்க மாமா வாராங்க … பார்த்தா அவ்வளவுதான் … ”
“மாமாவா …. யார் .. ” என்றவாறே எழுந்து நின்றவளது கையை மறுபடி பிடித்து இழுத்தவனிடம் ,
“அப்… அப்பாதான் விக்கி … ” என பொத்தென அவனருகில் அமர்ந்தவள் கூற , அங்கு விக்ரமின் அந்த மாமா மட்டும் வரவில்லை , வருவின் தந்தையும் பின்னால் வந்துக் கொண்டிருந்தார். அவன் அதை கவனிக்கவில்லை.
“போச்சு உங்கப்பாவா அவரு … அப்போ இங்கேயே இரு … நம்ம ரெண்டு பேரையும் ஒன்னாப் பார்த்தா இன்னைக்கே கல்யாணம் பண்ணி வச்சுருவாரு….” என்பதைச் சத்தமாகச் சொல்லி ,
“கிரானைட் கம்பெனிகாரர் மகளையும் நல்லா பளபளனுதான் பெத்துருக்கார்…” என முனுமுனுக்க ….
” என்ன … என்ன சொல்ற … நான் இன்னும் லவ் பண்றத சொல்லவே இல்லயே … அப்படியே சொன்னாலும் உடனேலாம் கல்யாணம் பண்ண மாட்டாங்க….”
“நானே நீ சுத்தி சுத்தி வரதப்பார்த்து நீயும் விரும்புறனு தெரிஞ்சுக்கிட்டேன் … அவருக்கு தெரியாம போகுமா என்ன…. ” அவனது பதிலில் ,
“ஓ அப்படி சொல்றியா …சரி வா ஏன் இப்படி மறைவா இருக்கணும் … அப்பா காதல் வந்தா அவங்க கிட்ட சொல்ல சொல்லிருக்காங்க ….இப்ப லவ் மட்டும் தான் பண்ணனும் , படிச்சு முடிச்சு தான் கல்யாணம்லாம் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க…. அதனால வா போகலாம்….” என எழ முயல ,
” என்ன ….. நல்ல அப்பா … நல்ல பொண்ணு தான் போ…” எனச் சிரித்தவன் ,
” ஆனாலும் உங்கிட்ட எத்தனை தடவை சொல்றது … யாரும் தப்பா பேச வாய்ப்புத் தரக் கூடாதுனு …. நான் முதல்ல அங்கப் போய் அவன வரச் சொல்றேன்… நீ அவன் வந்ததும் பேசிட்டு வா…” எழுந்து போனவனிடம், குழப்பத்தோடு…
“யார் விக்கி … ”
“ம்…. உன் லவ்வர்தான்…. அவனுக்காகத் தானே எப்பவும் வெஸ்ட்ர்ன் அவுட் ஃபிட்ல இருந்த நீ .. இப்ப இந்த செந்தமிழ் நாட்டு தமிழச்சி அவதாரம் எடுத்துருக்க … ” என அவள் உடையை ஒரு கையால் மேலிருந்து கீழாக காட்டியவன் …” யாரும் இருக்கிறார்களா என்றுப் பார்த்துக் கொண்டே ,
” பட்… ஃப்ரண்டா என்னோட காம்ப்ளிமென்ட் …யு லுக் கார்ஜியஸ் இன் திஸ் அவுட் ஃபிட் … சரி வா… அப்ப நீங்க நடுக்கூடத்துல நின்னுக் கூடப் பேசலாம்…. இங்க எதுக்கு … ஆனா அவன் வெட்கப்படுவானே….” என்றவாறே யார் கண்ணிலும் படாமல் எழுந்து சென்றான்.
மனதினுள் , “அட அதுக்குள்ள பேச்சுவார்த்தை நடந்துருச்சுப் போல … சகல எங்கப் போன … ” பிரதாப்பைத் தேடிச் சென்றான். அவன் சொன்னதும் தன்னைக் குனிந்துப் பார்த்தவள் , வெட்கப் புன்னகையோடு …
“பாட்டிய காரணம் சொன்னாலும் என் காதலனுக்காகத்தான் இந்த அவதாரம் … ஆனா விக்கி நான் உன்னைத் தானே லவ் பண்றேன்…. நீ சொல்ற அவன் எவன் ….” என அவன் பின்னேயே செல்ல , கைகழுவி விட்டு திரும்பிக் கொண்டிருந்த அமுதாவின் அப்பாவிடம் சென்றுப் பேசிக் கொண்டிருந்தாள் வரு . விக்ரம் பார்த்ததும், அவன் எண்ணிக் கொண்டதும் என்னவென்றால் வருவின் தந்தையிடம் அவள் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதே .. எதிரில் வந்த பிரதாப்பைக் கண்டவன் ,
“சகல உன் ரூட்டு கிளியர் தான் போல… போடா வீட்லயும் பேசி வச்சுட்டாங்கனு நினைக்கிறேன்… என்ஜாய் பண்ணு …” என்று விட்டு நகர்ந்து விட்டான்.
அதே நேரம் வித்யாவை ஒரு தென்னை மரம் அருகில் நிற்க வைத்த அரவிந்த் , அவளது கலங்கியக் கண்களைப் பார்த்து ,
“என்னாச்சு … பயமா இருக்கா….” எனக் கேட்டது தான் தாமதம் … இந்த இரு நாட்களாக அவனை நேரில் பார்க்காமல் பேசாமல் இருந்தது மனதை அழுத்திக் கொண்டிருக்க … அவனைப் பார்த்த நாட்களாக தள்ளியே அமர்ந்து பேசுபவள் ….இப்போது இறுக்கமாக அவனைக் கட்டிக் கொண்டாள்.
நெஞ்சில் பூப்போல் மோதியவளை உணரவே அரவிந்துக்கு சிறிது நேரம் பிடித்தது…. பிடித்தவளோ …. அழுதுக் கொண்டே ,
“நீங்க பக்கத்துல இருக்கும் போது பயம் எப்படி வரும்…. என்னால இந்த ரெண்டு நாள் கூட உங்களப் பார்க்காம இருக்க முடியல … எ …. எப்படி அஞ்சு வருஷம் இருக்கப் போறேன் தெரியல….” என அழுக ,
காதலியின் முதல் அணைப்பு இளைஞனான அவனுள் ஏதேதோ மாற்றங்களைக் கொண்டு வர ,முயன்றுத் தன்னைக் கட்டுப்படுத்தியவன், அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு … ” கேண்டி …..” என அழைக்க , காதருகே கேட்டக் குரலில் திடுக்கிட்டவள் அழுகையை நிறுத்தி , தன் நிலை அறிந்து நாண முற்றவள் , பட்டென்று கையை எடுத்து விட்டு பின்னே செல்ல , தென்னை மரத்தில் மோதி நின்றாள்.
மெல்லியப் புன்னகையோடு அவளை நெருங்கி நின்றவன் , தன் கையிலிருந்த சிறிய நகை டப்பாவிலிருந்து ஆங்கில முதல் எழுத்தாலான ஒரு மோதிரத்தை அவள் விரலில் அணிவித்துக் கொண்டே ,
“இப்ப இதை நம்ம என்கேஜ்மன்ட் மோதிரமாவும் …நீ நினைச்சுக்கலாம் … இல்ல நாம கல்யாணமே பண்ணிக்கிட்டதாவும் நீ நினைச்சுக்கலாம் … நாம நேருக்கு நேர் பார்க்க முடியுமா தெரியாது … ஆனா இந்தா இந்த சிம் உனக்குத்தான் … காலேஜ் ஜாய்ன் பண்ணதும் ஃபோன் வாங்கினதும் இதையும் போட்டு எனக்கு ஃபோன் பண்ணு… காதலியப் பிரிஞ்சுக்கூட இருக்கலாம் …வொய்ஃப் பிரிஞ்சு இருக்க முடியுமா….ம்… நீ எங்க இருந்தாலும் உன்னைத் தொடர்ந்துட்டுத்தான் இருப்பேன் .. என்னையப் பார்க்கணும்னு தோணிச்சுனா உடனே வந்து நிற்பேன்…ஓகேயா என் பொண்டாட்டி …..”
பிரிவுகள் இனி ஏ..து…
பிறவியில் கிடையா..து…
நீ தானே நான் வந்து…
பூச்சூடும் மாது…
அந்த மோதிரத்தை தொட்டு ரசித்துக் கொண்டே அவன் பேச்சைக் கேட்டவள் ,
“அத்தான்…. வீட்ல இது யாரு தந்தது கேட்டா…”
“வரு தந்தா சொல்லு….அமிர்தவர்ஷினியோட முதல் எழுத்துனு சொல்லு…. என் தங்கச்சி எல்லாருக்கும் கிஃப்ட் வாங்கியிருக்கா…. அதனால பெருசா கேள்வி வராது…” புன்னகைத்தவள் ,
“நிஜமா நான் நினைச்சா வந்துடுவீங்களா..” என கண்களில் ஏக்கத்தை தேக்கி கேட்டவளை கட்டியணைக்க ஆவல் கொண்டாலும் , அவள் கைகளை இறுகப்பற்றியவன் …
“என்னை நம்புறதானே…. ” பதில் சொல்லாமல் பிடித்திருந்தவன் புறங்கையில் முத்தமிட,
அன்றாடம்…பூங்காற்று
உன் பேரை…
என் காதில் ஓதுது.
எப்போது…
நான் வேண்டும்…
அப்போது பூங்காற்றை…
தூது விடு…
முகத்தை அவனுக்கு காட்டாது திரும்பியவள் ,
“போ… போகலாம்…” என தடுமாற , அவள் முன் வந்து நின்றவன்…
“போகலாம் … அதுக்கு முன்ன இன்னொரு ஸ்பெஷல் கிஃப்ட் தந்துட்டுப் போறேன் …நீ என் பொண்டாட்டி தானே…. ஆமாவா இல்லையா…..” என முகம் நெருங்கி அவள் இதழ் நோக்கிக் கொண்டே கேட்க …
“ம்…” என்றவள் ,பின்னர் ” ம்ஹூம்” எனத் தலையசைக்க , அசையும் தலையை அசைய விடாமல் இரு கை கொண்டு கன்னம் பற்றியவன்….இதழ் நெருங்க ,
வித்யா இருந்த மனநிலையில் இதழ் நெருங்கட்டும் என்ற எண்ணம் இருந்தாலும் , கண்களை இறுக மூடிக் கொள்ள …. மூடியக் கண்களையும் …நெற்றியில் வியர்த்து அது கன்னம் வழிய …. அவள் போராட்டம் மட்டுமல்லாது … சிறு பெண்ணை சஞ்சலப்படுத்துகிறோமோ என்றும் உணர்ந்தவன் ,
வியர்வையில் குளித்த நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து ,
” கேண்டி …. ஊரறிய தாலி கட்டினதும் மொத்தமா சாப்பிட்டுக்குவேன்… போகலாம்…”
என்றவன் இருளில் கைப்பிடித்துக் கொண்டு வந்தாலும் …வெளிச்சத்தில் கையைவிட்டான்… காதலையே கை விடுவதாகவும் இருந்தான் அடுத்து வந்த நாட்களில்… அதன் பின்னான நான்கு வருடத்தில் அவள் நினைத்த போதெல்லாம் வந்து நின்றான் தான் ….அவளறியாமல் …..
ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்
தூவும் …..