தேன் துளி 34
“உன் குணம் கொஞ்சம் தெரிஞ்சதால சொல்றேன் ….இப்ப உனக்கு நடந்த இந்த விபத்த … எஸ் இது விபத்து தான் யாருகிட்டயும் சொல்லாதே … “அவள் பதில் ஏதும் சொல்லவில்லை.
“இதனால உன் லைஃபே ஸ்பாயில் ஆகிடும்… எனக்கு அவனுங்கள கொன்னுப் போடுற வெறி வந்தது …. ஏன் போலீஸ்ல சொல்லலாம்னு நினைச்சாக் கூட அந்த இடத்துல நீ இருக்க … கேள்விகள் உன்னைப் பார்த்து தான் வரும்….. நீ இதை ஒன்னும் இல்லை … சாக்கடைய மிதிச்சுட்டேன் கழுவிட்டு போறேன்னு நினைச்சாக் கூட இந்த சமுதாயம் உன்னைச் சும்மா விடாது ….
போலீஸ் கேட்கிற … பத்திரிக்கைக்காரங்க கேட்கிற… கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி…அப்ப என்னத் தோணும் தெரியுமா … இதுக்கு நான் சொல்லாமையே இருந்துருக்கலாம்னு தோணும்….” என்றவன் இப்போது அவள் புறம் திரும்பினாலும் முகத்தை வேறு புறமாக திருப்பி , இடுப்பில் கை வைத்து நின்றவன்,
“லட்சுமி நீ சின்னப் பொண்ணு … உனக்கு அம்மா இல்லனு வேற சொல்லியிருக்க …. நான் சொல்றத உங்கம்மா சொல்றதா நினைச்சுக்கோ …. அவங்க சொன்னா நீ கேட்பதானே…. ” என்றவன் அவளைப் பார்க்கவில்லைதான்….ஆனால் அம்மாவை நினைத்த அடுத்த நொடியே அவன் அப்படிச் சொல்லவும் …, கண்ணீர் பட்டும் எரியும் கன்னங்களை துணியால் மறைத்து ஒத்தடம் தருவது போல் வைத்துக் கொண்டே ,
” கே … கேட்பேன் விக்கி ….” என மெல்லச் சொல்ல ….
” இப்படி அழாத ப்ளீஸ் …. உன் இயல்பு மாறி அமைதியா இருக்கிறது என்னைய ரொம்பவே ஹர்ட் பண்ணுது. உனக்குத் தெரியுமா தெரியாது … சுனிதாகிருஷ்ணன்னு ஒரு பொண்ணு … தன்னோட பதினஞ்சாவது வயசுல எட்டு காமவெறி பிடிச்ச ராட்சசங்ககிட்ட மாட்டினா … அவனுங்களுக்கு தண்டனைக் கிடைச்சாலும் அந்த ஒரு சம்பவத்தால அவங்க சந்திச்ச அனுபவங்களும் அனுதாபங்களும் நிறைய … இப்ப அவங்க இது போல பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னேற்றத்துக்காக நிறைய செய்து இப்ப பெரிய அளவுல பேசப்படுறாங்க … ” இப்படித் தனக்குத் தெரிந்த சில சாதனைப் பெண்களின் பெயரைக் கூறியவன்… தன்னால் சிரித்துக் கொண்டே ,
“என்னடா இவன் நிறைய விஷயம் சொல்றேன்னு பார்க்கிறியா… இதெல்லாம் அமீர்கானோட ‘சத்யமேவ ஜெயதே’ புரோக்கிராம் புண்ணியம்…
இப்ப உன் மனநிலையில நீ கேட்கறியா இல்லையானுக் கூட எனக்குத் தெரியல … பட் சொல்ல வேண்டியது என் கடமை … அப்புறம் நான் இவங்கள எல்லாம் ஏன் சொன்னேன்னா , இப்படி நடந்திருச்சேனு நினைச்சு உன் எதிர்காலத்தை வீணாக்கிறாதே… இப்ப உனக்குத் தெரிஞ்சு எத்தனையோ பெண்கள் மீண்டு வந்ததப் பார்த்திருப்ப … ஏன்…மலாலவையே எடுத்துக்கோயன் … அந்தப் பொண்ண என்னப்பாடு படுத்தினாங்க … அதுவும் வன்கொடுமை தான் … அவ உணர்வுகளை சாகடிக்க நினைக்கிறாங்க … ஆனா அந்த பொண்ணு மீண்டு வந்து எத்தனை உதவிகள் செய்யுது….ப்ளீஸ்… நீ டாக்டர்க்கு படிக்க போறேன்னு சொன்னல்ல… நல்லா படி…. நீயும் நல்லா இருக்கணும் … உன்னாலயும் நிறைய பேர் நல்லா இருக்கணும் சரியா….. நிச்சியம் உனக்கு வரப்போறவன் உன்னைப் புரிஞ்சு நடந்துப்பான்…. எனக்கு அவனை நல்லாவேத் தெரியும் ….. கண்டிப்பா நீ இதை யாருகிட்டயும் ஷேர் பண்ணாத …. நீ நல்லா இருந்தா பொறாமைப்படுற உலகமும் … நீ நல்லா இல்லைனா சந்தோஷப்படுற உலகமும் இதுதான்…. ஒரு வார்த்தை வெளியப் போனாலும் அது பத்தா திரிக்கப்படுற உலகம்:..”
என்றவாறே கதவைத் தாழிட்டவன் , “வா உன்னை உங்க வீட்டுத் தெருமுனைல விடுறேன்…. வீடு வரை வர முடியாது … ” என அவளுக்கு இப்போது முன்புறம் கதவு திறந்து விட்டவன் , அவள் கையிலிருந்த இரு பைகளைப் பார்க்க , தன் இடக்கையில் இருந்ததைக் காட்டி “குப்பைல போட” எனவும் , கிழிந்த ஆடைகள் என்பதை புரிந்துக் கொண்டவன்.
“புடவை கட்டினதால தான் அப்படி நடந்ததுங்கிற நினைப்பை விட்டுறு… ஆறு அடி புடவை கட்டினாலும் , அரை அடி மிடி போட்டாலும் .. ஏன் முழுக்க மூடி பர்தா போட்ட பொண்ணுங்கனு எல்லாருக்குமே ஏதோ ஒரு வகைல பிரச்சினை இருக்கத்தான் செய்யும்…. உடலளவு … மனசளவு எந்த வகையிலும் இருக்கலாம் … அதுக்காக இது தான் காரணம்னு ஒதுக்கி வச்சுட்டு இருக்க முடியுமா …. விட்டுத் தள்ளு… இப்படி அமைதியா இருக்காத … “அந்த இருளில் காரைச் செலுத்தி ஒரு பெரிய மரத்தடியில் நிறுத்தியவன் .நேராகச் சாலையைப் பார்த்துக் கொண்டே ,
“லட்சுமி நீ ஒரு வார்த்தைக்கூட பதில் பேசாம இருக்கிறது ….. நான் இப்போ வெளிநாடு கிளம்புறேன் … நான் கேட்கிறேனோ இல்லையோ … அம்மாவும் பாட்டியும் எனக்கு ஊருல என்ன நடந்தாலும் சொல்வாங்க … திலீபன் தங்கச்சிங்க பத்தி எந்த மனக் கவலையும் வருகிற செய்தி எனக்கு வராது தானே … அப்படி வந்தா உயிரோடு இருந்தாலும் நான் வெறும் நடைப்பிணமா தான் இருப்பேன். அந்தப் பொண்ண இப்படி ஆக்கினவங்களுக்கு சரியான தண்டனை தரலயோ… சத்தியம்ங்கிறப் பேர்ல தப்பு பண்ணிட்டேனோனு என்னை ஃபீல் பண்ண வைக்க மாட்டியே ….. அதோட என்னைத் தவிர யார்க்கிட்டயும் இது பத்தி பேச மாட்டியே … நான் வந்து பேசினாக்கூட அதைப் பத்திப் பேசக்கூடாது ….அது மட்டும் எனக்காக செய்…”
அவன் பேச பேச அழுகைப் பொங்க , “என் விக்கிய எப்படி நான் அப்படி ஃபீல் பண்ண வைப்பேன்…. உன்னைத் தவிர யாருக்கிட்டயும் என்னால பேசவே முடியாது போலருக்கு விக்கி … கழுத்து … தலை எல்லாம் வலிக்குது விக்கி ….” அவளால் மனதினுள் மட்டுமே பேச முடிந்தது … வெளியே பேசவே முடியவில்லை தலைவலிக்க , குரல் எழும்ப மறுத்தாலும் , அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ,
“எ….ன..க்கு ஒன்னும் ஆகாது …. இது பிராமிஸ்… தே….தே …. தேங்க்ஸ் அத்தான்” என்றவள் வேகமாக கதவைத் திறந்து இறங்கினாள்.
அவன் ‘அத்தான் ‘சொல்லு எனும் போதெல்லாம் சொல்லாதவள் .. இப்போது அவள் சொன்னதும் மனதை வருத்தியது. மெதுவாக நடந்தவள், ஓரமாக இருந்த ஓடையில் கிழிந்த உள்ளாடைகளை மட்டும் போட்டாள். அந்த நிலையிலும் அந்த சேலையைப் போட மனமில்லை … விக்ரமை மனதுள்ளும் , அந்த புடவையையும் அவன் சட்டையையும் பரிசுப் பையுள்ளும் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
வீட்டு வாசலில் யாருமில்லை … திரும்பி விக்ரம் காரைப் பார்க்க , இவள் வீட்டுப் படியேறியதைப் பார்த்ததும் அவன் காரை யுடர்ன் எடுத்துச் சென்று விட்டான்.
“ம்மா நான் ஸ்கூலுக்குள்ள போறவரை நீங்க என்னையப் பார்த்துட்டே இருப்பீங்க .. விக்கியும் அப்படியே இருக்கான்… உனக்காக உயிரோட இருக்க ஆசைப்படுறேன் விக்கி.”கழுத்தைப் பிடித்துக் கொண்டே வீட்டுப் படியேறினாள்
கண்ணுக்குள்
ஜீவனைத் தேக்கி காலம்
கழித்திருப்பேன் உலகம்
அழிகின்ற போதும் உன்னை
நினைத்திருப்பேன் தேவனே
காத்திருப்பேன் தீயிலே
பூத்திருப்பேன் ஜென்மங்கள்
தொடர்ந்திருப்பேன்….
விக்ரம் திரும்ப வீட்டிற்குச் செல்ல , அவன் இருந்த மனநிலையில் மதுரை வரை கார் ஓட்ட முடியாது என்பதை உணர்ந்தவன், சண்முகத்திடம் சொல்லி , பொருட்கள் இருக்கும் மற்றொரு வண்டியை வேறு ஒருவரை எடுத்து வரச் சொல்லிவிட்டு அவரை ஓட்டச் சொல்லி சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.
சண்முகம் சாவியை அங்குத் தரநிறுத்த ,விக்ரமால் அவர்கள் வீட்டைப் பார்க்க முடியவில்லை … கண்களை மூடிக் கொண்டான்.
” பெரியம்மாவுக்கு திடீர்னு உடம்பு முடியல போல … எல்லாரும் உள்ளறைல இருக்காங்க … வெளியவே கொடுத்துட்டு வந்துட்டேன் சின்னய்யா .. ” எனப் பேசிக் கொண்டே காரோட்ட , பாலம் அருகில் சிறு கூட்டம் ,இறங்கிச் சென்ற சண்முகம் ,
“குடிச்சிட்டு என்ன வம்புக்கு போனானுகளோ பேச்சு மூச்சில்லாம இருக்கானுக … ” எனவும் ,
“சுந்தரவேல் மாமா கிட்ட சொல்லுங்க … இப்ப ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டாங்கனா நாம கிளம்பலாம்” என விக்ரம் கூற … அந்த ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுந்தவேலிற்கு தகவல் தெரிவித்து விட்டு விக்ரம் மதுரை கிளம்பி விட்டான்.
வித்யா வீட்டினரை வழியனுப்பி விட்டு உள்ளே வந்த அரவிந்திடம் விஸ்வனாதன் விடியலில் கோவைக் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்ல , அரவிந்தை நிறுத்தியக் கனிப் பாட்டி,
“விசு … என்ன அவசரம் … இன்னும் ரெண்டு நாளு இருந்துட்டுப் போலாம்…”
“ம்மா ஆஸ்பத்திரில நிறைய அப்பாய்ன்ட்மென்ட் கொடுத்து வச்சுருக்கேன் …நான் கிளம்பணும்மா… பாப்பாவுக்கு வேற கவுன்சிலிங் போக வேண்டியிருக்கு … டெல்லியில அவ ஸ்கூல் ரிசல்ட் வந்துருச்சு .. நல்ல மார்க்… மெரிட்ல சென்னைலயே நல்ல காலேஜ் கிடைச்சிரும்…. அதுக்கான வேலைகளப் பார்க்கணும்…”
“அது தான்….எம்பேத்தில நல்ல மார்க் தான் வாங்குவா … விசு கோவிச்சுக்காத … உன் தங்கச்சி மாலதிக்கு நம்ம பிள்ளை மேல ரொம்ப ஆசை …. சொத்து சுகத்துக்கு குறைச்சலில்ல… பேரனும் நல்லா படிச்சு அவுகப்பன் தொழில பார்க்குறான்…..”
“அதுக்கு ….” என விஸ்வனாதன் பேச …
“அது …..இப்ப கல்யாணாமெல்லாம் வேண்டாம் … ஆனா பூ வச்சு உறுதி பண்ணிக்குவோம் ….அவ படிச்சு முடிச்சு கல்யாணம் வச்சுக்கலாம் … ”
“ம்மா…. என்னப் பேசுறீங்க .. அதுக்கெல்லாம் நேரம் இருக்கு … இப்பதான் மா பதினெட்டு வயசு ஆகுது … அது மட்டுமில்ல அவ சந்தோஷம் எனக்கு முக்கியம் … அவ விருப்பம் இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன்…”
அதற்குள் வீட்டினுள் இருந்த அனைவரும் இவர்கள் பேச்சு சத்ததில் ஹாலுக்கு வர , கனிப் பாட்டி சத்தமாக,
” என்னலே அவ விருப்பம் அவ விருப்பம்னுட்டு… பெத்தவக சொல்றவனக் கட்டி குடும்பம் நடத்துற பொண்ணா இருந்தா நல்லது … இவளும் அவ அம்மா மாதிரி….”
“ம்மா … ஷர்மிய ஒன்னும் சொல்லாத ….”
“நான் அப்படித்தான் சொல்லுவேன் … உன்னைய எங்கிட்ட இருந்து பிரிச்சிக் கூட்டிட்டுப் போனாதான அந்த மேனாமினுக்கி … எப்ப பாரு ஆம்பிளை உடுப்பு உடுத்திட்டு ….. ”
“ம்மா ….உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…. உடுக்கிற உடைய வச்சு யாரையும் எதுவும் சொல்லதனு ….”