வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தியாயம் – 23
பாலாவும் வேலுவும் காயங்கள் எல்லாம் ஆறி நடக்க ஆரம்பித்ததில் இருந்து மீண்டும் மது, மாது என இருக்க கந்தப்பன் தோப்புவீட்டிற்கு சென்றதில் வேலுவுக்கு அவ்வளவு ஆத்திரம்.. தங்களின் ராஜ்ஜியமாக இருந்த வீட்டில் அவனா.. இருவரும் உல்லாசமாக இருக்க இடமில்லாமல் கந்தப்பன் மேல் கடுப்பில் திரிந்தவர்கள்..அடங்காமல் அன்று மதியமே மூச்சு முட்ட குடித்து தோப்புவீட்டிற்கு செல்ல கந்தப்பன் மில்லுக்கு சென்றிருந்தான்.. சுப்பையா வீட்டிலிருக்க கந்தப்பன் மனைவி சமைத்துக் கொண்டு இருந்தாள்.. வீட்டின் உள் செல்லாமல் தோப்புக்குள் நுழைந்து அங்கேயே ஒரு மரத்தடியில் படுத்துகிடந்தார்கள்.. ஏதோ வேலையாக வெளியில வந்த கந்தப்பன் மனைவியை பார்த்த பாலா, “டேய் வேலு உன் தம்பி பொண்டாட்டி கருப்பா இருந்தாலும் களையாத்தான்டா இருக்கா..!!”
“டேய் போடா.. பன்னி கூட பருவத்துல பளபளன்னுதான் இருக்கும் அவளெல்லாம் ஒரு ஆளா..??”
“டேய் உனக்கு வேணான்னா போ நானாச்சும் கரெக்ட் பண்றேன்..” தட்டுதடுமாறி அங்கு செல்ல சுப்பையா மறித்தபடி நின்றிருந்தார்..
“என்ன பாலா இங்க என்ன வேலை..?”
தடுமாறியவன் “ஒ..ஒன்னுமில்ல சித்தப்பா சும்மா தண்ணி கேட்கலாம்னு..!!”
தண்ணீரை கொண்டுவந்து கொடுத்தவர் அவனை அனுப்பி வைத்தார்..
“என்ன மாமா.. இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க அவங்களுக்கு போன்ல சொல்லவா..?”
“விடுத்தா சும்மாவே அண்ணனும் தம்பியும் அடிச்சிக்கிட்டுத்தான் கிடப்பானுக.. நீ இத வேற சொன்னா மேக்கொண்டு சண்டைப்போட்டுக்கிறாம விடு.. நான்தான் இருக்கேன்ல பார்த்துக்கிறேன்..”
மறுநாள் மாலை பாலா வேலுவை அழைத்துக் கொண்டு மீண்டும் தோப்பிற்கு வர கந்தப்பன் இன்று நேரம் கழித்துத்தான் வருவதாக சொல்லியிருந்தான்.. சுப்பையாவும் அப்படியே காலார நடந்து சென்றிருக்க, இருவரும் வந்து கதவை தட்டினார்கள்..
மாமனாரோ என அவள் கதவை திறக்க வெளியில் வேலுவை பார்க்கவும் ஒருநிமிடம் அதிர்ந்துவிட்டாள்..
“ஏய் இவனுக்கு முட்டை ஆம்லெட் வேணுமாம் போட்டுத்தா நாங்க அங்க இருக்கோம்.?”
அவர்கள் அங்கு செல்ல வேகமாக கதவை தாளிட்டவள் கந்தப்பனுக்கு போனில் தொடர்பு கொள்ள முயல ரைஸ்மில் சத்தத்தில் அவனுக்கு கேட்கவில்லை..இரண்டு மூன்று முறை முயன்றவள் முடியாமல் மாமனாருக்கு போனடிக்க அது வீட்டிற்குள்ளேயே அடித்தது.. இப்ப என்ன பண்றது.. அதற்குள் பாலா வந்து மீண்டும் கதவை தட்டி ஆம்லெட் ரெடியா.. கதவை விடாமல் தட்டிக் கொண்டிருக்க இதென்னடா இம்சை..
இரண்டுமூன்று முட்டைகளை ஆம்லெட் போட்டவள் இதை எப்படி கொடுப்பது அதற்குள் வெளியில் மாமனாரின் குரல் இப்போதுதான் அவளுக்கு சற்று நிம்மதி. லேசாக கதவை திறந்தவள் தட்டை நீட்ட தட்டோடு சேர்த்து அவள் கையையும் பிடித்து இழுத்திருந்தான்..
“ஐயோ என்ன பண்றிங்க?? விடுங்க… மாமா மாமா..”
“டேய் பாவி என்னடா பண்ற என்ர மருமகள.. விடுறா டேய் வேலு இங்கன வந்து பாருடா.. இந்த அநியாயத்த..??” அவர் கத்தி பாலாவோடு மல்லுக்கட்ட அவரை பிடித்து தள்ளியவன் அந்த பெண்ணை பிடிக்கவர அவனிடமிருந்து தப்பித்தவள் தோப்பை விட்டு வெளியில் ஓடத்துவங்கினாள்..
வேலுவோ “டேய் அறிவு கெட்டவனே பிடிடா அவள.. விட்டுட்டு வேடிக்கை பார்க்கிற.. ஊருக்குள்ள போய் நம்ம மானத்தை வாங்கவா.. கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னா கேட்கிறியா.. ??” இருவரும் அவளை விரட்டத்துவங்க அந்த பெண்ணோ பதட்டத்தில் ஊருக்குள் போகும் வழியில் செல்லாமல் காட்டுப்பாதையை நோக்கி ஓடத்துவங்கினாள்..
இங்கு கந்தப்பன் தன் மனைவியிடம் இருந்து போன் வந்திருக்கவும் என்னவென்று கேட்பதற்காக திரும்ப போன் செய்ய அப்படியே தட்டுத்தடுமாறி எழுந்த சுப்பையா தன் மகனிடம் விபத்தை சொன்னார்..
[the_ad id=”6605″]
“ஆட்டக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில என் வீட்டுக்கே வந்துட்டானுகளா அவனுகள இன்னைக்கு நான் கொல்லாம விடுறதா இல்ல.?” வேகமாக ஓடி வந்தவன் தன் வண்டியை கிளப்பியிருந்தான்..
சுந்தர் வண்டியை சுந்தரி சொன்ன திசையில் ஓட்டிக் கொண்டுவர நினைவெல்லாம் மனைவிதான்.. ஏண்டி இப்படி பண்ணின.. பாதி வழியிலேயே தன் மச்சானும் அந்த அடியாளும் அடிப்பட்டு கிடப்பதை கண்டவன் அதிலும் வள்ளியின் கணவர் மயக்கத்தில் இருக்க வண்டியை அப்படியே போட்டுவிட்டு அவர்களை நோக்கி ஓடினான்..
“மச்சான் மச்சான் என்னாச்சு..?” வள்ளி கணவரின் கன்னத்தை தட்ட..
சௌந்தரத்தின் கணவரோ “டேய் மாப்பிள்ள எங்களுக்கு எதுவும் இல்ல.. இப்ப இது முக்கியமில்ல.. எவனுகளோ தங்கச்சிய இந்த பக்கமா கடத்திட்டு போறானுக.. போய் நீ காப்பாத்து நான் அண்ணன பார்த்துக்கிறேன்.. நீ போ..” அவனை முதுகில் கைவைத்து தள்ள, தன் போனை எடுத்தவன் தந்தைக்கு போன் செய்து
“அப்பு நம்ம பக்கத்துவீட்டு அண்ணனுக்கு கார் ஓட்டத் தெரியும்.. நம்ம காரை எடுக்கச் சொல்லி அவர கூட்டிட்டு இந்த இடத்தை சொன்னவன் அங்கன வந்திருங்க.. மச்சானுகள ஆசுபத்திரியில சேர்த்திருங்க..” மற்ற விபரங்களை சொன்னவன் போனை பையில் போட்டபடி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அந்த சரிவில் சரசரவென இறங்க, இந்த காடுப்பாதை இவனுக்கு அத்துப்படி பத்தாவதுக்கு மேல் இங்கு பள்ளி இல்லாததால் இந்த காட்டுவழியாக சென்றுதான் பதினொன்றாவது பனிரெண்டாவது
படித்தான்..
இதில் இரண்டு வழியிருக்கிறது.. அவர்கள் எந்த வழியில் சென்றிருப்பார்கள் எப்படியும் பாதி தூரம் சென்றுதான் பாதை பிரியும் அதற்குள் நாம் சென்றுவிடலாம்.. தன் போனை எடுத்தவன் “ஸார் அவங்க இந்த காட்டுக்குள்ள புகுந்திட்டாங்க நீங்க ரெண்டு ஊர்லயும் ஆள நிறுத்திட்டு பாதிபேர் உள்ள வாங்க நான் இந்த பக்கம் வர்றேன் அப்படியே சுத்தி வளைச்சிரலாம்..” நடையை ஓட்டமாக மாற்றியிருந்தான்..
தர்ஷினி அவர்களோடு வரமாட்டேன் என முரண்டுபிடிக்க அந்த இருட்டில் தங்கள் செல்போன் டார்ச்சை வைத்து தடுமாறி சென்று கொண்டிருந்தவர்கள் தர்ஷினியை இழுத்துக் கொண்டு செல்ல அவர்கள் சென்ற பத்து நிமிடத்திற்குள் சுந்தர் பாதி தூரத்திற்கு மேல் வந்திருந்தான்… வேகம் வேகம் அவ்வளவு வேகமாக வந்தான்..அந்த பாதை பிரிவதற்குள் அவர்களை அடையவேண்டும் என்ற வெறி.. அங்கு கந்தப்பன் மனைவியும் அந்த காட்டிகுள் நுழைந்து அந்த பாழடைந்த கிணற்றை நோக்கி ஓடிவந்து கொண்டிருக்க வேலுவும் பாலாவும் விரட்டியபடி வந்து கொண்டிருந்தார்கள்..தந்தை சொன்ன திசையை வைத்து கந்தப்பனும் காட்டிற்குள் ஒரு பக்கத்தில் நுழைந்திருந்தான்..
வந்தவனில் ஒரு அடியாள் இயற்கை உபாதைக்காக சற்று ஒதுங்க வேகமாக வந்து சுந்தர் கையில் வசமாக மாட்டிக் கொண்டான்.. இரண்டே நிமிடம்தான் சுந்தருக்கு இருந்த வெறியில் அவனை இரு காட்டுகாட்ட அவன் மூர்ச்சையாகி கிடந்தான்.. அவனை ஓங்கி ஒரு உதைவைத்து தள்ளிவிட்டவன் காலடி சத்தம் வந்த திசையை நோக்கி தடதடவென ஓடி அவர்களை நெருங்கி கடைசியில் சென்று கொண்டிருக்க அடியாளின் வாயை தன்கைகளால் மூடி மறுகையால் அவன் கழுத்தை நெறித்திருந்தான்…
மூச்சுவிடமுடியாமல் அவன் உயிருக்கு போராட அவன் கையை பின்னால் வளைத்து அதை உடைத்தவன் அப்படியே பின்னங்காலில் ஒரு உதை.. அவனுக்கு அலறக்கூட வாய்ப்பளிக்காமல் அங்கிருந்த மரத்தில் அவன் மண்டையை மோத மண்டை உடைந்து ரத்தம் ஊற்ற ஆரம்பித்த்து.. அவன் கட்டியிருந்த வேட்டியை உருவி அந்த மரத்திலேயே கட்டிப் போட்டவன் “காலையில உயிரோட இருந்தா போலிஸ் உன்னை வந்து கூட்டிட்டு போகட்டும்..” மீண்டும் வந்து தாடையிலும் மூக்கிலும் இரு குத்து..
“ஸார் நம்ம பின்னாடி வந்த ரெண்டு பேர ஆளக்காணோம்..” அவர்களின் பேரை சொல்லி சத்தமாக கத்த.. தர்ஷினியை பிடித்திருந்தவனோ…
“ஹாஹாஹா கேம் நல்லா சூடுபிடிச்சிருச்சு போல.. உன் புருசன் வர்றானோ.. ??” தர்ஷினியின் கையை விட்டுவிட்டு தன் இரு கைகளால் பின்கழுத்தை இரு திருப்பு திருப்ப இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு தர்ஷினி ஓட ஆரம்பித்தாள்..
[the_ad id=”6605″]
“ஸார் அவ ஓடுறா..??”
“எங்க போயிட போறா.. இத்தன நாளா நான் இருந்ததெல்லாம் இந்த காட்டுக்குள்ளதான் அவ எங்க போனாலும் பிடிச்சிரலாம்.. போங்க நான் வர்றேன்..டேய்ய்ய்ய் சுந்தர் வாடா… உன்னை நேருக்கு நேரா பார்க்கத்தான் ஆவலா இருக்கேன் வா..வா..” அவன் சிரித்த சிரிப்பு அந்த நேரத்தில் அப்படியே கர்ணகொடூரமாக ஒலிக்க,
அங்கு கந்தப்பன் மனைவியோ ஒரு பெரிய மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள “டேய் வேலு எங்கடா போயிட்டா..ச்சே நமக்கு தண்ணி காட்டுறாளே..”
“டேய் நீ இந்த பக்கம் போ நான் அந்த பக்கம் போறேன்..” இருவரும் வேறு வேறு பக்கம் செல்ல கந்தப்பன் மனைவியோ வேறு திசையை நோக்கி ஓட ஆரம்பித்தாள்..
சுந்தர் அந்த பெரிய மரத்தில் கிளையில் மேல் ஏறி நின்றிருக்க மரத்திற்கு நேராக வந்த அந்த அடியாளை அந்த வேரின் கொடியாளே கழுத்தை சுற்றி அப்படியே அவனை மரத்தின் மேல் தூக்கியிருந்தான்.. சுந்தரின் கண்கள் அந்த இருட்டில் அப்படி பளபளக்க தன்கைகளால் அவன் கழுத்தை ஒரே திருப்பாக திருப்பியிருந்தான்.. ஹீக் எனும் சத்தத்தோடு அவன் தொய்ந்துவிழ அவனை அதிலேயே கட்டிப் போட்டவன் அடுத்து வெளிச்சம் வந்த திசையை நோக்கி ஓடினான்..
தர்ஷினி அவர்களிடம் இருந்து தப்பி ஓடியவளுக்கு சற்று நேரத்திலேயே முடியவில்லை.. அந்த இருட்டில் பாதையும் தெரியாமல் அதைவிட பயம் வேறு.. இவர்களிடம் மாட்டவே கூடாது.. தட்டுத்தடுமாறி ஓடிக் கொண்டிருக்க எதிரே பெரியமரங்கள் முற்செடிகள் அவளை கிழிக்க இருட்டில் தெரியாமல் ஒரு மரத்தில் மோதி கீழே விழுந்தவள் எழுந்திருக்க முடியாமல் அப்படியே கிடக்க அழுகை பொங்கியது.. மாமா எவ்வளவு படிச்சு படிச்சு சொன்னாங்க.. நான்தான் கேட்கல மாமா வந்திருங்க.. ப்ளிஸ்.. அவள் பின்னால் சரசரவென சத்தம் பாம்போ என்னவோ அப்படியே மூச்சடைத்து கிடந்தாள்..
அந்த சத்தம் மறுபக்கம் செல்ல மெல்ல மெல்ல எழுந்தவள் தன்னை சமன்படுத்தி மீண்டும் தன் காலை எடுத்து வைக்க யாரின் மீதோ மோதியிருந்தாள்..
அவளை இறுக்கி பிடித்தவன் “ஏய் எங்க ஓடுற எவ்வளவு நேரம் ஆட்டம் காட்டுவ.. செல்போனில் அவள் முகத்தை பார்க்க நீ..நீ.. நீ.. சுந்தர் பய பொண்டாட்டிதான..!!” அவனுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம், மகிழ்ச்சி.. வேலுதான் கந்தப்பன் மனைவி என நினைத்து தர்ஷினியை பிடித்திருந்தான்..
“டேய் விடுடா பொறுக்கி..??”
“பொறுக்கியா.. நான் பொறுக்கிதான்.. ஆனா இந்த பொறுக்கி உன்னை தொட்டதுக்குத்தான உன்புருசன் என் கையை உடைச்சான்.. இப்ப நீ இங்க எப்படி… எப்படியோ… என் கைக்கு வந்திட்ட.. டேய் வேலு… சத்தமாக கத்தியவன் டேய் வாடா…. அவ எங்க போக போறா.. ஒரு காக்காக்கு பதிலா மயிலே கிடைச்சிருக்கு வா..” அவளை இழுத்துக் கொண்டு வர, அவன் மேல் செல்போன் வெளிச்சம்…
இருவர் அவர்களை நோக்கி வர “டேய் யாருடா நீ தேவையில்லாம இப்ப இங்க வர்ற..?”
“யாருடா நீங்களெல்லாம் இங்க எப்படி..??”
“அட அட மறுபடி முதல்ல இருந்தா அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லா ஓடிரு … நான் இப்ப செம காண்டுல இருக்கேன்..”
“டேய் எங்க வந்து என்ன பேசுற..? மரியாதை ஓடிருங்க டேய் பாலா…. வாடா..”
“அட போங்கடா.. தர்ஷினியை தன்னை நோக்கி இழுத்தவன் கைகளில் புதிதாய் ஒரு கத்தி முளைத்திருந்தது.. இவளுக்கு எத்தனை பேர்தான் போட்டிக்கு வருவீங்கடா… அவ புருசனத்தான் முதல்ல போடலாம்ன்னு நினைச்சேன் இப்ப நீ வந்திருக்க..வாங்கிக்க..!!” மறுநிமிடம் அவன் வயிற்றில் அந்த கத்தி இறங்கியிருந்தது.. ஆஆஆஆஆவென அலறியவன் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்திருந்தான்..
“ அம்மாஆஆஆஆ… விடுடா..” தர்ஷினிக்கு அதிர்ச்சியில் மயக்கம் வந்திருக்க அப்படியே தொய்ந்து விழுந்தாள்..
வேலுவை காலால் உதைந்தவன் “ஏன்டா வான்டடா வந்து சாவ வாங்கிக்கிறிங்க.. நீயெல்லாம் என் லிஸ்ட்லயே இல்லையே..” இதையெல்லாம் ஒரு மரத்தின் பின்நின்று பார்த்துக் கொண்டிருந்த சுந்தர் இவன்கிட்ட இருந்து தர்ஷூவ எப்படி காப்பாத்துறது.. அந்த உருவத்தின் கண்களில் குரூரத்தை கண்டவன் இவன நாம சாதாரணமா எடை போடக்கூடாது..
தர்ஷினியின் கன்னத்தை தட்டிப்பார்த்தவன் அவள் விழிக்காமல் இருக்கவும் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவைத்தான்..லேசான மயக்கத்தில் இருந்தவளுக்கு இந்த அடி விழிப்பை தர மெல்ல மெல்ல சுயநினைவுக்கு வரபார்த்தாள்.. பார்த்திருந்த சுந்தர் பல்லை கடித்தாலும் நாம எதாச்சும் செய்ய போய் தர்ஷினிய ஏதும் செய்திருவானோ..
“ஸார் நம்மளோட வந்த அந்த இன்னொருத்தனும் மிஸ்ஸிங்..”
“ம்ம் வா..” இன்னும் கொஞ்சம் தூரம்தான் கத்தியை பின்னால் வைத்தவன் தர்ஷினி அருகில் செல்ல மரத்தில் இருந்தவனோ அந்த உருவத்தின் மீது பாய்ந்திருந்தான்.. சுந்தர் தனக்கிருந்த கோபத்தில் ஓங்கி அந்த உருவத்தின் முகத்தை தாக்கத்துவங்க இருவரும் கட்டிப்புரண்டு சண்டைப்போட்டனர்.. அவனும் சாதாரணமானவனாக தெரியவில்லை பலத்தில் இருவருமே சமமானவர்களாகத்தான் இருந்தார்கள்.. இருவரின் கையும் ஓங்கியிருக்க இப்போது அந்த அடியாளும் நெருங்கியிருந்தான்..சுந்தர் தனக்கிருந்த கோபத்தை அவன் மேல் காட்டிக் கொண்டிருக்க இப்போது அந்த அடியாள் சுந்தரிடம் மாட்டியிருந்தான்.. சுந்தரிடம இருந்த தன்னை பிரித்தவன் கோபத்துடன் இப்போது தர்ஷினியை நெருங்கியிருந்தான்..
“ டேய்ய்ய்ய் அடங்கு இல்ல…” காலை அவளை மிதிப்பது போல தூக்க…
மயக்கம் லேசாக தெளிந்தவள் கண்விழித்தபோது தன் வயிற்றுக்கு நேராக இருந்த காலை பார்த்து அலறி… அவனை கையெடுத்து கும்பிட்டு “ப்ளிஸ் அங்க பாப்பா இருக்கு அத எதுவும் பண்ணிறாத ப்ளிஸ்..” சற்று தள்ளிப் போனவள் தன் கணவனை பார்க்கவும் மாமா.. தாயை பார்த்த குழந்தையாய் அவனை நோக்கி ஓட முயல அவளின் கையை பிடித்து இழுத்தவன் கைகளை பின்னால் முறுக்கியிருந்தான்.. வலி தாங்காமல் மாமாவென ஒரே அழுகை..
சுந்தர் குழந்தையா நமக்கா அவளை பார்த்தவன் அவள் உடலெல்லாம் அடிபட்டு போட்டிருந்த உடையெல்லாம் கிழிந்து தலைகலைந்து பார்க்கவே பரிதாபமாக வலி தாங்காமல் கண்ணீரோடு தன் மனைவி.. நானெல்லாம் ஆம்பளையா.. இந்த நிலையை தானே வெறுத்தான்..
[the_ad id=”6605″]
“ஹாஹாஹாஹா குழந்தையா … டேய் எருமைமாடு என்ன பார்த்துட்டு இருக்க அவனை புடி..”
தர்ஷினி அவனிடம் மாட்டியிருக்க இப்போது சுந்தர் அமைதியாக நின்றான்..அந்த அடியாள் சுந்தரின் கைகளை பின்னால் சேர்த்து பிடிக்க…
தர்ஷினி மாமா மாமாவென ஒரே அழுகை..
“தர்ஷூ அழாத … உனக்கு ஒன்னும் ஆகாது..”
“ஆமா தர்ஷூ நீ அழாத உனக்கொன்னும் ஆகாது.. உன்புருசன்தான் மேல போகப் போறான்..”
“மாமா… அவள் மீண்டும் அழத்துவங்க அவளை ஒரு அறைவைத்தவன் மூச் சத்தம் வரக்கூடாது…” அவளை பின்னால் திருப்பியவன் அவள் கழுத்தை சேர்த்து கைவைத்து நெருக்க..
“டேய்ய்ய்ய் உண்மையான ஆம்பளையா இருந்த என்கிட்ட மோதுடா அதவிட்டுட்டு ஒரு பொண்ணுக்கிட்ட உன் வீரத்தை காட்டிட்டு இருக்க…??” கெட்ட வார்த்தையால் அவனை திட்ட..
“ப்ளிஸ் ராம் என்னை விட்ரு நான் என்ன தப்பு பண்ணினேன்.. ஏன் இந்த பாடு படுத்துற.!!”
“ஹாஹாஹாஹா நான் ராமா….???”
சுந்தரோ “இல்ல தர்ஷூ இவன் ராம் இல்ல அவனோட தம்பி ஜெய்.. ரெண்டுபேரும் டுவின்ஸ்..!!”
அதிர்ந்து போய் சுந்தரை பார்த்தவன் “அப்ப என்னை பத்தி உனக்கு தெரிஞ்சிருக்கு..??” அவளை இழுத்தபடி சென்றவன் அங்கிருந்த மரக்கிளையில் ஜம் செய்து ஏறி உட்கார்ந்தான்.. “இப்ப சொல்லு என்னென்ன கண்டுபிடிச்சிருக்க என்னைப்பத்தி..??”
ராமோட தம்பியா அவன் முகத்தையே இவள் விடாமல் பார்க்க “என்ன தர்ஷூ இப்படி பார்க்கிற .. உன்புருசன் சொல்றது உண்மைதான் நான் ராமோட தம்பிதான் உன் புருசனுக்கு இருக்கிற தெளிவு உனக்கும் இல்ல உன் குடும்பத்துக்கும் இல்ல பாரு..”
“என் குடும்பமா..??”
“ஆமா.. உன் குடும்பத்தை கூண்டோட கைலாசம் அனுப்பினது யாருன்னு நினைச்ச நான் தான்..!!”
“நீயாயாயாயா………???”
“ஹாஹாஹாஹா…”
தர்ஷினி தந்தையின் பார்ட்னர் வரதராஜன்.. தஞ்சையில் அருகில் ஒரு கிராமத்தில் பெரிய குடும்பத்தில் பிறந்தவர்.. அவர்கள் குடும்பமே பழமையில் ஊறியவர்கள் மட்டுமில்லை… ஜாதிவெறியும் பிடித்து திரிந்தவர்கள்.. அடிதடி, வெட்டுக்குத்து, ஆணவக்கொலை, கட்டப்பஞ்சாயத்து, என எதையும் அஞ்சாமல் செய்வார்கள்.. விவசாயம், வட்டிக்கு கொடுத்து வாங்குதல் என ஏதேதோ தொழில் செய்து ஊரின் பாதி சொத்தை வளைத்துப் போட்டிருந்தனர்.. ஏழெட்டு அண்ணன் தம்பியோடு பிறந்த இவருக்கு இவர்களின் செயல்கள் எப்போதும் பிடித்ததில்லை.. எப்போதுமே அமைதியான குணமாய் இருந்த இவர் தன் குடும்பத்தில் இருந்து விலகிதான் இருப்பார் .. ஹாஸ்டலில் தங்கியே தனது படிப்பை முடிக்க கல்லூரியில் படிக்கும்போதுதான் அவர் குணத்தை ஒத்த வேறு ஜாதி பெண் லெட்சுமியை விரும்ப ஆரம்பித்தார்.. அவரும் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்தான்..