வரம் வாங்கி வந்தவள் நான்
அத்தி
“சுந்தரு நம்மூர்காரவுக எல்லாரும் ஒன்னு சேர்ந்து மதுரை கல்யாணத்துக்கு போறதுக்கு வேன் பிடிச்சிருக்காங்களாம்.. நாமளும் அதுலயே போவோமாய்யா..??” ராமையா தன் மகனிடம் கேட்க,
“இல்லப்பு நீங்க எல்லாரும் முன்னாடி போங்க. எனக்கு இங்கன சொசைட்டியில கொஞ்சம் வேலையிருக்கு.. மேனேஜர் வரச் சொல்லியிருக்காரு.. அவரப்போய் ஒரு எட்டு பார்த்துட்டு நான் வண்டியிலயே வந்திருறேன்..”
சற்று யோசித்த ராமையா..” சுந்தரியும் தெய்வானையும் வேணா போகட்டும்… நீ வரவும் நாம சேர்ந்து போவோமா..?”
தன் பையில் இருந்த பணத்தை தந்தையிடம் கொடுத்தவன், “இல்லப்பு.. நீங்க சீக்கிரமா போனா ஆத்தா என்னமோ சீருக்கு வைக்க பித்தளை அண்டா வாங்கனும்னு சொன்னாக.. நீங்க விளக்கு தூணு, இல்லனா புதுமண்டபத்துக்கு கூட்டிட்டு போங்க.. அதோட இந்த சின்னக்குட்டியும் என்னன்னமோ வாங்கனும்னு லிஸ்ட் போட்டு வைச்சிருக்கா.. நீங்க போனாத்தான் அது சரிவரும். நீங்க முன்னாடி போங்க நான் வேலை முடியவும் வந்துருறேன்..” அவர்களை அனுப்பி வைத்தவனின் வேலை முடியவே மாலையாயிற்று..
மதுரைக்குள் நுழைய மணி எட்டிருக்கும்.. மதியம் சாப்பிடாதது சற்று களைப்பை தர அங்கிருந்த ஹோட்டலுக்குள் நுழைந்தவன் காப்பியை ஆர்டர் செய்தான்.. அவன் தந்தையும் போன் செய்திருந்தார்..
“தம்பி வந்துட்டியாய்யா..??”
“இப்பதான்ப்பு மதுரைக்குள்ள வந்திருக்கேன்..”
[the_ad id=”6605″]
“சரிய்யா சரிய்யா பார்த்து பதனமா வா.. இங்கன உன் தங்கச்சிக எல்லாரும்தான் உன்னை பார்க்கனும்னு சொல்லிட்டு இருக்காங்க.. கல்யாண மண்டபம் நல்லா பெருசா பிடிச்சிருக்காக.. முன்னாடியே ஹோட்டலும் இருக்கா அதான்..தங்குறதுக்கு ரூமுகளும் தனியா கொடுத்திருக்காக நம்மூட்டு பொம்பளைங்க எல்லாரும் ஒரே ரூம்ல இருக்காகளாம் ..
அதான் உனக்கும் எனக்கும் மட்டும் ஒரு ரூம் கொடுத்தாக.. ரூம பூட்டி இங்கன கீழே வர்றவுகிட்ட விவரம் கேட்டு எழுதுவாகள்ள ஒரு பொண்ணு (ரிசப்சன்லிஸ்ட்) அவுககிட்ட கொடுக்கேன்.. ரூம் நம்பரை சொன்னவர் அங்கன வந்து குளிச்சு நல்ல வேட்டி சட்டையா போட்டுக்கய்யா.. எனக்கு இங்கன சில கல்யாண பொறுப்பு கொடுத்திருக்காக நான் அத கவனிக்கேன்..”
“சரிப்பு.. ரொம்ப வேலைய இழுத்துக்காதிக.”. அவரோடு பேசியபடி போனை வைக்க பேரர் வந்து பில்லை தரவும் அதை பார்த்தவன் அதிர்ந்து விட்டான்.. 2000 ரூபாயா.. என்னங்கடா இது பகல் கொள்ளையா இருக்கு.. ஒரு காப்பி 2000மா… சட்டையை மடித்துவிட்டவன் எட்டி பேரரின் சட்டையை பிடித்து,
“டேய் என்னடா இது அநியாயமா இருக்கு..எவன்டா இங்க ஓனர்.. கூப்பிடுடா அவனை..??”
அந்த பையன் என்ன சொல்வதென தடுமாற..
“ஓனர் நான்தான் என்ன எதுக்கு தேடுறிங்க..? இதோ வந்திட்டேன்.. என்னை என்ன பண்ண போற..?” அவனுக்கு பின்னால் இருந்து குரல் கேட்கவும் கோபத்துடன் திரும்ப… அங்கோ. .கைகளை கட்டியபடி அவன் நண்பன் வெற்றி நின்று கொண்டிருந்தான்..
ஆச்சர்யத்தில் கண்ணை விரித்தவன் “டேய்…. வெற்றி…!!” எட்டி அவனை கட்டி அணைக்க, வெற்றியோ “சுந்தர்…!!”என அவனை தூக்கி இரண்டு சுற்று சுற்று இறக்கி விட்டான்.. முதலாளிக்கும் இவருக்கும் சண்டை வரப் போகிறதோ என பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் இருவரின் செயலை பார்த்து ஆஆஆவென வாய்பிளந்து நின்றார்கள்..
“டேய் ஓனர கூப்பிட்டா நீ வர்ற..??”
அவனை பார்த்து கண்ணை சிமிட்டியவன் “நான்தானே ஓனர்.. அப்ப நான்தான வரனும்..?”
“அடப்பாவி நீதான் முதலாளியா.. நம்ப முடியல…!!”
“ஹாஹாஹா எனக்கே சிலசமயம் நம்ம முடியாது.. அதவிடு நீ எப்ப ஆஸ்திரேலியாவில இருந்து வந்த.. வீட்ல அம்மா அப்பா உன் சிஸ்டர்ஸ் எல்லாரும் எப்படி இருக்காங்க..?”
“எல்லாருமே நல்லாயிருக்காங்கடா.. இருவருக்குமே சிரிப்பு தாங்கவில்லை.. எதிர்பாராத சந்திப்பு.. என்னை முதல்லயே பார்த்திட்டியா..??”
“இப்ப பில்ல போடும்போதுதான் பார்த்தேன்..”
“உங்க அண்ணா நல்லாயிருக்காங்களா..?”
“ரொம்ப சூப்பர்டா.. உன்னை இங்க பார்த்தில எனக்கு ரொம்ப ஹாப்பி.. அவனை கட்டி அணைத்தவன்.. ஸாரி சுந்தர் ஒரே ரூம்ல நாலைஞ்சு வருசம் ஒன்னா தங்கியிருந்தும் உன்னைப்பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம இருந்திட்டேன்டா.. இப்ப எத்தன சிஸ்டர்ஸ்க்கு மேரேஜ் முடிச்சிருக்க..? எத்தனை மாசம் லீவ்..? எப்ப ரிட்டேர்ன் ஆகுற..?” அவனுடன் பேசியபடி அவனுக்கென்று இருக்கும் தனியறைக்கு கூட்டிச் செல்ல சுந்தரும் அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டு கூடவே சென்றான்..
“வெரிகுட்.. மூனு சிஸ்டர்க்கு முடிச்சிட்டியா.. பரவால்ல சுந்தர் ரொம்ப நல்ல டிசிசன் இங்கயே தங்கனும்னு நீ நினைக்கிறது..”
[the_ad id=”6605″]
“அது பரவால்ல வெற்றி.. ஸாரி நீ ரொம்ப எதிர்பார்த்த டிரிப்.. நீ வர முடியாம நான் அப்ப போனது எனக்கு ரொம்ப ஹெல்பா இருந்திச்சு..அப்படி போகாட்டா இப்ப என்னால மூனு சிஸ்டர்க்கு எல்லாம் கல்யாணம் முடிச்சிருக்க முடியாதுடா.. அது ரொம்ப டைம்லி ஹெல்ப் எனக்கு.. சுயநலம்தான் இருந்தாலும் அன்னைக்கு அது எனக்கு தப்பா தெரியல.. இருந்தாலும் ஆழ்மனசுல உனக்கு தப்பு செஞ்சிட்டமோன்னு கொஞ்சம் கில்டியா பீல் பண்றேன்..”
“டேய் டேய் நீ என்னமோ எனக்கு வந்த வாய்ப்பை தட்டி பறிச்ச மாதிரி சொல்ற நான்தானே வரல.. ஆனா போயிருந்தா இப்ப என் வாழ்க்கையே மாறியிருக்கும்.. அத நினைச்சே பார்க்க முடியல..கெட்டு தருதலையா போயிருப்பேன்.. கடவுள்தான் அன்னைக்கு என்ன தடுத்து உன்னை அனுப்பி வைச்சிருக்காரு..” வெற்றி தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொல்ல கேட்க கேட்க சுந்தருக்கு அவ்வளவு ஆச்சர்யம்..
“அப்ப சிஸ்டர் பேர்லதான் இந்த ஹோட்டலா..??”
“ஆமா சுந்தர்.. இதுமாதிரி நிறைய கிளைகள் திறந்திருக்கோம்.. என்னோட வாழ்க்கையில நடந்த ரெண்டு முக்கியமான நல்ல விசயம் ஒன்னு என்னோட கல்யாணம், அப்புறம் நான் வெளிநாடு போகாம நீ போனது.. எனக்கு ரொம்ப ரொம்ப ஹாப்பி..”
“அப்ப குழந்தைங்க..??”
“ரெண்டு பசங்க இருக்காங்க..என்னைப்பத்தி இருக்கட்டும்.. உனக்கு எப்ப மேரேஜ்.. என் வயசுதான உனக்கும் …சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடு..?”
“சீக்கிரமே போட்டுருவேன்னு நினைக்கிறேன்.. பொண்ணு பார்க்கவும்தான் இங்க வந்திருக்கேன்..”
“வெரிகுட்.. உனக்கும் மனசுக்கு பிடிச்ச பொண்ணு அமையட்டும்.. கல்யாணத்துப்பறம் நம்ம வாழ்க்கையே மாறிருதுடா.. என் அம்மு வந்தவுடனதான் நான் வாழ்க்கையை வாழ துவங்கியிருக்கேன்..தன் மனைவியை நினைத்து பார்த்தவனுக்கு இன்னும் இன்னும் காதல் பெருகியது.. உனக்கும்பாரு உன்னை மட்டும் லவ் பண்ற உன்னை நல்லா புரிஞ்சுக்கிற பொண்ணு அமையும்..”
லவ் பண்ற பொண்ணா…!!! தன்னை அறியாமல் அவன் மனதில் தர்ஷினியின் உருவம்.. ‘டேய் சோனமுத்தாஆஆஆ உனக்கு இதெல்லாம் ஓவரா தெரியல.. ஏதோ சைட் அடிச்ச பேசாம போவியா.. உனக்குன்னு ஒரு தேன் மொழியோ கனிமெழியோ ஏதோ ஒரு பொண்ணு இருக்கும்டா.. அதவிட்டுட்டு தேவையில்லாம அந்த தேவதை பொண்ண பத்தி யோசிக்காத.. அதெல்லாம் நீ பார்க்க மட்டும்தான்..’
“என்னடா முகம் ரொம்ப பிரைட்டா இருக்கு..கல்யாணம் பண்ணப்போற பொண்ணப்பத்தி யோசிக்கிறியா..?”
“ஹாஹாஹா அதவிடுடா உன் பிசனஸ் எல்லாம் எப்படி இருக்கு.. ஐடி கம்பெனியில வேலைப்பார்த்தவன் இப்ப ஓட்டல் அதிபரா மாறிட்ட..?”
“ஆமா இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கேன்..இது எனக்கும் ரொம்ப பிடிச்ச தொழிலாயிருச்சு.. நீயும் விவசாயத்தை மட்டு நம்பி இருக்காம கூடவே எதாவது ஒரு அடிசனல் பிசினஸ் வைச்சுக்கோ.. மழை முன்ன மாதிரி விவசாயிகளுக்கு ஹெல்ப் செய்ய மாட்டேங்கிது..?”
“கண்டிப்பாடா.. ரெண்டு மூனு பிசினஸ் யோசிச்சு இருக்கேன்.. பேங்க் லோனுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன்.. அதோட வீட்டையும் கொஞ்சம் பெரிசாக்கனும்… கொஞ்ச வேலைகள் எல்லாம் இருக்கு..”
“போடா லூசு பேங்க் லோனா..நான் எதுக்கு இருக்கேன்.. எவ்வளவு வேணுமோ நான் தர்றேன்..?”
[the_ad id=”6605″]
“இல்ல வெற்றி பிரண்ட்ஸ் வேற… இந்த மாதிரி பணம் வாங்குறது வேற.. இது நம்ம நட்பை பாதிக்கும்டா..”
“அடி வாங்கப்போறா பாரு. டேய் எவனோ முகம் தெரியாதவன்கிட்ட வாங்கலாம் நான் தரக்கூடாதா.. இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.. நீ என்கிட்டத்தான் வாங்குற..”
“ப்ளிஸ் வெற்றி அதெல்லாம் சரிவராது..?”
“ம்கூம் அந்த பேச்சுக்கே இடமில்ல…என்கிட்டதான் வாங்கிக்கிற அந்த பேச்ச விடு ..!!” தங்களோடு தங்கிருந்த மற்ற ரூம்மேட்களின் பேச்சை ஆரம்பிக்க இருவரும் பேச்சு சுவாரஸ்யத்தில் மணியையே பார்க்கவில்லை.. மணி 9.30 ஆகவும் மறுபடி ராமையா போன் செய்ய,
“ரொம்ப வருசம் கழிச்சு என்னோட நெருங்கின சினேகிதன பார்த்திருக்கேன்ப்பு.. இன்னும் கொஞ்சநேரத்தில கிளம்பிருவேன்..”
“சரிய்யா நான் இங்கன உள்ளவங்ககிட்ட சொல்லிருறேன்.. முத்த மருமகன்தான் ரொம்ப நேரமா உன்னை கேட்டுட்டே இருந்தாங்க.. நீ வந்தா சாப்பிட்டு படுத்துக்கோ.. நான் வர கொஞ்சம் தாமதமாகும் போல கதவை அடைக்க வேணாப்பு.. நான் 12 மணிக்கா வந்து படுத்துக்கிறேன்.. இங்கன ஆட்ட உறிச்சிட்டு இருக்காக.. அந்த வேலையத்தான் நான் மேற்பார்வை பார்த்துட்டு இருக்கேன்.. வைக்கவாய்யா..??”
போன் பேசி முடிக்கவும் வெற்றியை பார்த்தவன்,” நான் கிளம்புறேன்டா…?”
“டேய் இரு என்ன அவசரம் ரொம்ப வருசங்கள் கழிச்சு பார்த்திருக்கோம்.. கண்டிப்பா ஒரு பார்ட்டி உண்டு..?”
ரூம் மேட்ஸ்களாக இருந்தபோது இருவரும் வார இறுதியில் தண்ணியடித்ததுண்டு… ஆஸ்திரேலியா சென்றதிலிருந்து சுந்தர் அதை மறந்திருக்க வெற்றியும் அந்த பக்கம் அடியெடுத்து வைக்கவில்லை.. இப்போது மறுபடி சுந்தரை சந்திக்க அந்த நியாபகங்கள்.. இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தார்கள்..
“டேய் சிஸ்டர் ஒன்னும் சொல்லமாட்டாங்களா..??”
போனை எடுத்தவன் துள்ளலுடன் “இதுவரைக்கும் அவளுக்கு தெரியாம குடிச்சதில்லை.. இரு அம்முட்ட கேட்டுட்டு வர்றேன்.. போனில் அந்த பக்கம் டேய் அம்மு..!!” பேசியபடி வெளியில் செல்ல,
வெற்றியின் முகத்தை பார்க்கையில் சுந்தருக்கு மகிழ்ச்சிதான்.. அதுவும் அவன் மனைவியை பற்றி பேசும்போது அவன் முகத்தில் வரும் மென்மை.. காதல் அது அப்பட்டமாக தெரிந்தது.. தனக்கும் அப்படி ஒரு வரம் கிடைக்குமா.. ஒரு இளைஞனாக அவனுக்கும் நிறைய ஆசைகள் உண்டு.. தன் குடும்பத்திற்காக அதை எல்லாம் அடக்கி வைத்திருக்க மெல்ல மெல்ல அந்த ஆசைகள் வெளிவர ஆரம்பித்தது.. காதலோடு ஒரு மனைவி.. தனக்கு கிடைக்குமா..!!