Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அடுத்த பதிவோட பிளாஷ்பேக் முடிஞ்சிரும் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 13 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

எபி 12 தேடுறேன்..... அப்புறம் தான் 00 நியாபகம் வருது.......

இது சொந்தமா கண்ணன் பேசுறானா :oops::oops::oops:
இல்லை பூவி சப்போர்ட்டர்ஸ் வகுந்துருவாங்கன்னு கனைக்குறானா உத்ராக்கா னு :unsure::unsure::unsure:
நம்ம சரண் ஹீரோஸ் இவ்ளோ சத்தமா பேசமாட்டாங்களே :p:p:p

மனுஷனாடா நீ :p:p:p அப்படியே அந்த கண்ணா வேற :LOL::LOL::LOL:
ஓஹ் இப்பபோ அவளுக்கு பரிஞ்சு பேசிகிட்டு அவள் மனைவியானதும் அவள் பதில் பேசுறது குத்தமா போய்டுச்சு போல.......
நல்ல இருக்குய்யா உன் டீலிங்கு.......

இந்த உத்ராக்கு எவ்ளோ கொழுப்பு...... அதுவும் கூட மாமியாரை கூட்டிக்கிட்டு.......
பொம்பளைங்களா ரெண்டு பேரும்....... சனியன் மூதேவிங்க.......
அப்போ கலெக்டரானதும் நிச்சயம் பண்ணின பொண்ணை விட்டுட்டு போறதும் பணம் காசு வந்ததும் கட்டுன பொண்டாட்டியை விட்டுட்டு போறதும் இவங்க 2 பேர் பாஷையில் சகஜம் போல.......
இந்த வேலவன் தான் ரெண்டு பொம்பளைங்களுக்கும் பாடம் படிச்சி குடுக்கணும்.........

நிஷா தவிர எல்லாமே வேஸ்ட் :mad:
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

யப்பா
மாமியாருக்கும் மருமகளுக்கும் இருப்பது வாயா இல்லை சுண்ணாம்பு காளவாயா?
கூவத்தை விட இப்படி நாறுது

அந்த மண்டை உடைஞ்சு அக்காக்காரி போய் சேர்ந்திருக்கலாம்
வேலவனுக்கு வேற ஒரு நல்ல பொண்டாட்டி கிடைத்திருப்பாள்

வீணாப் போன சிவசுந்தரமும் அவன் பொண்டாட்டியும் அட்டர் வேஸ்ட்
இந்த நாய்ங்க உத்ராவோடு குழந்தையை நிறுத்தியிருக்கலாம்

கல்யாணத்துக்கு முன்னாடிதான் மகளைப் பேச விட்டு வேடிக்கை பார்த்த ருக்மணி அதுக்கப்புறமும் மருமகளை உத்ரா பேசும் பொழுதும் செத்த பிணம் போலே சும்மா இருந்தது ரொம்ப தப்பு

அட நாசமாப் போற பணப் பேய்களா?
பணத்துக்காகவா இப்படி ஒரு அக்கிரமத்தை செஞ்சீங்க?

ஆரம்பத்திலேயிருந்தே பணப் பேய் உத்ராவுக்கு பூவிதயாவை பிடிக்கலை
அதான் சேற்றை வாரி இறைத்து விட்டாள்
இனி இவள் இருக்கும் திசைக்கு கூட இதயா திரும்ப மாட்டாள்

இவர்கள் ஒன்று சேர்ந்தாலும் இனி கலெக்டர் பாடு கொஞ்சம் கஷ்டம்தான்
அக்காவா?
பொண்டாட்டியா?
யாராவது ஒருத்தர்தான் கலெக்டர் கண்ணனுக்கு
அது யாரு, கண்ணா?
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.கல்யாணம் நிச்சயமாகி பத்திரிகை எல்லாம் கொடுத்த பின் கல்யாணத்தை நிறுத்தனும்னு சொல்றாங்களே பொம்பளைங்களா இவளுங்க???.உத்ரா பேச்ச கேட்டு சிவசுந்தரமும் ஆடறார்???.

ருக்மணி கல்யாணத்தை நிறுத்த சொல்ற உத்ராவ ஒன்னும் சொல்லாம,கண்ணனை தான் அமைதியா இருக்க சொல்லுது????.உத்ராவை அடக்க வேலவன் இல்லாதது ரொம்ப வசதியா போச்சு ஓவரா ஆட்டம் போடறா???.காஞ்சனா மருமகளுக்கு ஜால்ரா போடுது??.

நெனச்சதும் கலெக்டர் ஆக அதென்ன கடலமிட்டாயா என கிண்டல் பண்ண காஞ்சனா,தன்னோட ஆதாயத்துக்காக (கடைய எழுதி தர்றேன்னு எம்.எல்.ஏ சொல்லியிருப்பாரா) மருமகளோட ஜோடி சேர்ந்துட்டு எம்.எல்.ஏ பொண்ண கட்டிக்க சொல்லுதே பணப்பேய்ங்க????.

தள்ளி விடாமலேயே தள்ளி விட்டதா ஊரை கூட்டி காஞ்சனா பேசுனதுக்கு கண்ணன் அவளை தள்ளியே விட்டிருக்கலாம்???.இதயாவ கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே போயிடுவேன் என சொன்னதை போல போயிருந்தால் இந்த பிரிவு நேர்ந்திருக்காது???.

இத்தனை பிரச்சனை நடந்திருக்க அதை இதயாவிடம் சொல்லாதது தான் தவறாக போனது???. கல்யாணத்துக்கு முன்னாடி இதயாவுக்காக குடும்பத்தை எதிர்த்து நின்னவன்,கல்யாணம் முடிந்து என்ன நடந்தது என இதயாவிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல்,அவன் அக்கா,குடும்பத்துக்காக
நிதானம் தவறியதில்,அவனை வெறுத்து போக வைத்து விட்டான்???.
 
Last edited:
Top