என்னைக்குமே எத்தனை துரோகங்களை கடந்தாலும் ஒரு அம்மாவா ஒரு பெண் தன் கடமையை செவ்வனே செய்ய வேண்டும் என்று சாலா தன் நடவடிக்கையால் உணர்த்தறா. சாலாவோட characterization படி அவள் இப்படி சிந்திக்கறதுல ஒன்னும் வியப்பு இல்லை.
So இந்த சமுதாயம் அதன் கோட்பாடுகளில் இருந்து விலகி(திருத்தி), சாலா போன்ற பெண்களுக்கு அவர்களுக்கான நியாயங்களை-தேவைகளை-அடையாளங்களை அம்மா என்னும் உறவுநிலை தாண்டி அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க இன்றளவும் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் எல்லாருக்கும் சாலாவின் பற்றற்ற தன்மை வருவது கடினம். சாலா தனக்கு தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு, தன் குழந்தைகளின் நலன் மற்றும் விருப்பம் கருதி,வகுத்த இலக்கணம் போற்றுதலுக்குரியது-பிரம்மிக்க வைப்பது தான் . ஆனால் அதுதான் பெண்மைக்கு இலக்கணம் என்றால் அது வேதனைக்குரியது தான்.