காதல் 10:
“என் புருஷனை நான் எதுக்கு மயக்கனும்..?” என்ற மதியின் கேள்வி முகிலனின் காதுகளுக்கள் வண்டுகள் ரீங்காரமிட்டதைப் போல..மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“மயக்கி தாண்டி வச்சிருக்க மேனா மினுக்கி...” என்று மனதிற்குள் காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான் மணி முகிலன்.
ஆனால் அங்கு மதியோ...கண்களில் கொலைவெறியுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்க....நடுவில் இருந்த பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
திலகாவிற்கும் இது அதிர்ச்சி தான் என்றாலும்...அது சில நிமிடங்கள் தான்.அடுத்த நிமிடம் தெளிந்து விட்டார்.துர்காவிற்கு தான் அழுகையாய் வந்தது.அப்போது கூட அவளின் தவறு அவளுக்கு புரியவில்லை.
“மதி பேசாம இரு..!” என்று பார்வதி அடக்கிக் கொண்டிருக்க...
“இல்லம்மா...எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்..!இவங்க வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுறாங்க..! நீங்களும் கேட்டுட்டே இருக்கீங்க..?” என்று எகிற..
“என்னடி சும்மா கத்தி..பத்தினி வேஷம் போடுற...அது தான் உனக்கும், அவனுக்கும் ஒன்னுமில்லைன்னு சொல்லி பஞ்சாயத்துலையே அத்து விட்டாச்சே..! இப்ப என்னடி மறுபடியும் புருஷன் அது இதுன்னு உறவு கொண்டாடுற...
ஏன்..? மருமவன் இப்ப பெரிய டாக்டரு அப்படிங்கறதாலையா..?” என்று திலகா நாக்கு மேல் பல்லைப் போட்டு பேச....
வாய்வரை வந்த விஷயத்தை கஷ்ட்டப்பட்டு அடக்கினாள் மதி.எங்கே கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ... என்று அவளுக்கே பயம் வந்தது போலும்.இருந்தாலும் இவர்கள் முன்னாடி தோற்பதா..? என்ற வைராக்கியம் வேறு.
“உங்க பஞ்சாயத்துல அத்து விடுறது எல்லாம் சட்டத்துக்கு தெரியாது.நான் சட்டப்படி அவரை விவாகரத்து பண்ணவேயில்லை.இல்லை பஞ்சாயத்துல உங்களுக்கு எதுவும் கையெழுத்து போட்டுக் குடுத்தேனா..?” என்றாள் தெனாவெட்டாய்.
“சும்மா உனக்கு தான் சட்டம் தெரியும்கிற மாதிரி அள்ளி விடாத சரியா..? எங்களுக்கும் தெரியும்..!” என்றான் துரைப்பாண்டி வேகமாய்.
“என்ன தெரியும் உனக்கு..?” என்றாள்.
“மைனர் பொண்ணைக் கட்டிகிட்டான்னு சொல்லி தான ..பிரச்சனை பண்ணி அத்து விட்ட.இப்ப என்ன புதுசா பாசம் பொங்குது.மைனர் பொண்ணு கல்யாணமே செல்லாதுங்கறப்போ..அப்பறம் எங்க சட்டப்படி போறது..?” என்றான் துரை.
“பரவாயில்லையே...! உனக்கு கூட மூளை வேலை செய்யுது..ஆனா பாரு அதுக்கு அவசியமே இல்லை...ஏன்னா இதுக்கு பதில்...” என்று திரும்பியவள்...
“என்ன டாக்டரே..! பதில் நீங்க சொல்றிங்களா..? இல்லை நான் சொல்லவா..?” என்றாள் தெனாவெட்டாய்.
அதுவரை அவளையும்,அவள் சண்டை போடும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தவன் அவளின் கேள்வியில் திகைத்தான்.இது அவன் எதிர்பாராதது.
“எப்படி என்னையும் கோர்த்து விடுறா..ராட்ச்சசி..” என்று முனங்கியவன்.. ஒரு முடிவுடன் அவளைத் தெனாவெட்டாய் பார்க்க....இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துவுக்கு தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
அது தான்....அத்து விட்டாச்சே..! அதுக்கப்பறமும் எப்படி இவ்வளவு தைரியமா பேசுறா..? என்று முத்துவும் யோசித்துக் கொண்டிருக்க...
“என்ன முகிலா...என்ன பண்ணி வச்ச..?” என்றார் மலர் பீதியுடன்.
“நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லைம்மா..” என்றான்.
“அவ என்னென்னமோ சொல்றா..? நீயும் பேசாம இருக்க...? என்னதான் நடந்தது...?” என்று மலர் உலுக்க...
“என்னடி புதுசு புதுசா கதை சொல்லிட்டு இருக்க..இப்படி அடுத்தவ வாழ்க்கையைப் புடுங்கி வாழணும்ன்னு ஆசைப்படுறியே...இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது..நீ நல்லா இருப்பியா..?” என்று துர்கா ஒரு பக்கம் கத்தத் துவங்க....
அவளின் பேச்சில் கலங்கிய தன் கண்களில் இருந்து கண்ணீரை வெளிவராமல் தடுத்து நிறுத்தியவள்...தைரியம் வரப் பெற்றவளாய்..
“அடுத்தவ வாழ்க்கையை புடிங்கி வாழனும்கிற அவசியம் எனக்கு கிடையாது..அதே மாதிரி அடுத்தவ புருஷன்னு தெரிஞ்சும் வாழ நினைக்கிற யோக்கியமான உன்னை விட நான் மோசமானவளும் கிடையாது..!” என்றவள்...
“இது தான் என்னோட முடிவு...எங்கப்பா பங்கு சொத்து வந்தே ஆகணும்..நான் நாளைக்கே வண்டியை வச்சு உழுது வெள்ளாமை வைக்குறேன்..எவன் வந்து என்ன புடுங்க முடியும்..அவனவன் பங்குல என்ன வேண்ணாலும் பண்ணிக்கோங்க..! இது தான் எங்க பதில்... உறுதியான முடிவும் கூட..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க..
“ஐயோ..! என்ன இவ...டிராக் மாறி..கடைசில அதை குளோஸ் பண்ணிட்டா..நாம ஒரு பிளான் பண்ணா..இவ நமக்கு மேல கில்லாடியா இருக்காளே..!” என்று முகிலன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க..
“கிளம்பலாமா அப்பா...” என்றவள்..அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்ப....முகிலனின் அருகில் வந்து..அவனின் கண்களைப் பார்த்து...
”வேடிக்கை பார்த்துகிட்டு..என்னைப் பேசுறதை எல்லாம் கேட்டு சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கிங்களோ...சார்..! எனக்கென்னமோ..நீங்க களி திங்க போற நாள் ரொம்ப தூரத்தில் இல்லைன்னு தோணுது..!” என்றவள்..அருகில் இருந்த மலரிடம்..
“மகனுக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ற மும்பாறத்துல இருக்கிக போல...சந்தேகமே வேண்டாம்..உங்க பையன் கண்டிப்பா மாமியார் வீட்டுக்கு போய்டுவார்...!” என்று எகத்தாளம் பேசிக் கொண்டு வெட்டிக் கொண்டு நடக்க..
“என்ன நடக்கிறது இங்கே..!” என்பதைப் போல் பார்த்து வைத்தார் மலர்.
மதி அந்த இடத்தை விட்டு காலி செய்யவும் மழை பேஞ்சு ஓய்ந்ததைப் போல் இருந்தது.
ஆனால் அங்கிருந்த யாருக்கும் அதிர்ச்சி அகன்றபாடில்லை.திலகாவிற்கு போட்ட திட்டமெல்லாம் கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் மனதிற்குள் துளிர் விட...அப்போது புதிதாய் ஆரம்பித்தாள் கோபியின் மகள் ராணி.
“என்ன அயித்தை...உங்களுக்கு என்னையெல்லாம் பார்த்தா மருமகளா கண்ணுக்குத் தெரியாது போல...! முன்னாடி மதி..இப்ப துர்கா..அடுத்து இவளை எப்ப அத்து விடுவிங்கன்னு சொல்லுங்க...அடுத்து மாமனை நான் கட்டிக்கிறேன்...” என்றாள்.
“என்னாடி வாய் ரொம்ப நீளுது..! என் மக இன்னமும் வாக்கப்பட்டே போகலை..அதுக்குள்ள அத்து விடுறதைப் பத்தி பேசுறவ..?” என்றார் திலகா எரிச்சலுடன்.
“அட அதுக்கில்லை பெரியம்மா....பின்னாடி அப்படி ஒரு நிலைமை வந்தா..மலரத்தை பொண்ணு தேடி அலையக் கூடாது இல்ல...அதான் இப்பவே சொல்லி வைச்சேன்..!” என்றாள் இடக்காய்.
அவர்கள் அனைவரையும் எரிச்சலுடன் பார்த்தவன்....அங்கிருந்து கிளம்ப தயாராக..
“என்ன மருமவனே கிளம்புறிங்க..? என் மகளுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போங்க..!” என்று திலகா ஒரே போடாய் போட...
“நான் என்ன பதில் சொல்லணும்..?” என்றான் கூர்மையாய் பார்த்தபடி.
“எப்ப கல்யாணத்தை வச்சுகிடலாம்ன்னு தான்..” என்று சொல்ல..
“என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..! இளிச்சவாயன் மாதிரி இருக்கா..?” என்று கோபமாய் கத்தியவன்..
“என்னம்மா இதெல்லாம்? நான் எப்ப கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன்..!” என்றான் மலரிடம்.
“இன்னமும் நாங்களும் ஒன்னும் சொல்லலை முகிலா..!” என்றார் மலர் கொஞ்சம் பயத்துடன்.
“அட என்ன மதினி இப்படி பேசுறிங்க..? ஜாதகம் எல்லாம் பார்த்து பேசி முடிக்க போறப்ப..இப்படி சொல்றிங்க..?” என்றார் திலகா கோபமாய்.
“என்ன மாமா..? என்னை ஏமாத்தலாம்ன்னு முடிவு பண்ணிட்டிகளா..?” என்றாள் துர்கா கலங்கிய கண்களுடன்.
“ஏய்..!” என்று ஒரே உறுமலாய் உறுமினான் முகிலன்.அவனின் சத்தத்தில் அங்கு அப்படி ஒரு அமைதி நிலவ..
“உன்னை ஏமாத்தறது தான் என்னோட வேலையா...? சொல்லு...? உன்னை காதலிச்சு ஏமாத்துனேனா...இல்லை வயித்துல புள்ளையைக் குடுத்து ஏமாத்துனேனா...?எந்த விதத்துல உன்னையும் உன் குடும்பத்தையும் நான் ஏமாத்துனேன்..!” என்று உறும...அவனின் கண்கள் ரத்த சிகப்பில் மாறியது.
அவனின் கோபம் பார்த்து அதிர்ந்த திலகா...”கோபப்படாதிங்க மருமவனே..! அவ சின்ன கழுதை..அவளுக்கு என்ன தெரியும்..?” என்று சமாதான உடன்படிக்கைக்கு வர...
மூச்சினை சீர் செய்து..தன்னிலைக்கு வர வெகுபாடுபட்டான்.”என் புருஷன்” என்று மதியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளினால் மனதில் தோன்றியிருந்த இனிமை காணாமல் போயிருந்தது.இப்போது கோபம் முழுவதும் மதியின் மேல் திரும்பியிருந்தது.
“எல்லாம் இவளால வந்தது....இன்னைக்கு வச்சிருக்கேன் இவளுக்கு..” என்று மதியை மனக்கண்ணுக்குள் கொண்டு வந்து நிப்பாட்டி திட்டிக் கொண்டிருக்க...அவள் சடையைத் தூக்கி பின்னால் போட்டு...அவனைக் கண்டுக்காமல் போனது நியாபகம் வர..அவனின் மனம் கொஞ்சம் சாந்தம் அடைந்தது.
மதியின் முகம் மட்டுமே..அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கும் மருந்து.அதை அவனுமே உணர்ந்திருக்கிறான்.
“என் புருஷனை நான் எதுக்கு மயக்கனும்..?” என்ற மதியின் கேள்வி முகிலனின் காதுகளுக்கள் வண்டுகள் ரீங்காரமிட்டதைப் போல..மீண்டும் மீண்டும் ஒலித்தது.
“மயக்கி தாண்டி வச்சிருக்க மேனா மினுக்கி...” என்று மனதிற்குள் காதல் வசனம் பேசிக் கொண்டிருந்தான் மணி முகிலன்.
ஆனால் அங்கு மதியோ...கண்களில் கொலைவெறியுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்க....நடுவில் இருந்த பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
திலகாவிற்கும் இது அதிர்ச்சி தான் என்றாலும்...அது சில நிமிடங்கள் தான்.அடுத்த நிமிடம் தெளிந்து விட்டார்.துர்காவிற்கு தான் அழுகையாய் வந்தது.அப்போது கூட அவளின் தவறு அவளுக்கு புரியவில்லை.
“மதி பேசாம இரு..!” என்று பார்வதி அடக்கிக் கொண்டிருக்க...
“இல்லம்மா...எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும்..!இவங்க வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுறாங்க..! நீங்களும் கேட்டுட்டே இருக்கீங்க..?” என்று எகிற..
“என்னடி சும்மா கத்தி..பத்தினி வேஷம் போடுற...அது தான் உனக்கும், அவனுக்கும் ஒன்னுமில்லைன்னு சொல்லி பஞ்சாயத்துலையே அத்து விட்டாச்சே..! இப்ப என்னடி மறுபடியும் புருஷன் அது இதுன்னு உறவு கொண்டாடுற...
ஏன்..? மருமவன் இப்ப பெரிய டாக்டரு அப்படிங்கறதாலையா..?” என்று திலகா நாக்கு மேல் பல்லைப் போட்டு பேச....
வாய்வரை வந்த விஷயத்தை கஷ்ட்டப்பட்டு அடக்கினாள் மதி.எங்கே கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ... என்று அவளுக்கே பயம் வந்தது போலும்.இருந்தாலும் இவர்கள் முன்னாடி தோற்பதா..? என்ற வைராக்கியம் வேறு.
“உங்க பஞ்சாயத்துல அத்து விடுறது எல்லாம் சட்டத்துக்கு தெரியாது.நான் சட்டப்படி அவரை விவாகரத்து பண்ணவேயில்லை.இல்லை பஞ்சாயத்துல உங்களுக்கு எதுவும் கையெழுத்து போட்டுக் குடுத்தேனா..?” என்றாள் தெனாவெட்டாய்.
“சும்மா உனக்கு தான் சட்டம் தெரியும்கிற மாதிரி அள்ளி விடாத சரியா..? எங்களுக்கும் தெரியும்..!” என்றான் துரைப்பாண்டி வேகமாய்.
“என்ன தெரியும் உனக்கு..?” என்றாள்.
“மைனர் பொண்ணைக் கட்டிகிட்டான்னு சொல்லி தான ..பிரச்சனை பண்ணி அத்து விட்ட.இப்ப என்ன புதுசா பாசம் பொங்குது.மைனர் பொண்ணு கல்யாணமே செல்லாதுங்கறப்போ..அப்பறம் எங்க சட்டப்படி போறது..?” என்றான் துரை.
“பரவாயில்லையே...! உனக்கு கூட மூளை வேலை செய்யுது..ஆனா பாரு அதுக்கு அவசியமே இல்லை...ஏன்னா இதுக்கு பதில்...” என்று திரும்பியவள்...
“என்ன டாக்டரே..! பதில் நீங்க சொல்றிங்களா..? இல்லை நான் சொல்லவா..?” என்றாள் தெனாவெட்டாய்.
அதுவரை அவளையும்,அவள் சண்டை போடும் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தவன் அவளின் கேள்வியில் திகைத்தான்.இது அவன் எதிர்பாராதது.
“எப்படி என்னையும் கோர்த்து விடுறா..ராட்ச்சசி..” என்று முனங்கியவன்.. ஒரு முடிவுடன் அவளைத் தெனாவெட்டாய் பார்க்க....இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்துவுக்கு தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
அது தான்....அத்து விட்டாச்சே..! அதுக்கப்பறமும் எப்படி இவ்வளவு தைரியமா பேசுறா..? என்று முத்துவும் யோசித்துக் கொண்டிருக்க...
“என்ன முகிலா...என்ன பண்ணி வச்ச..?” என்றார் மலர் பீதியுடன்.
“நீங்க பயப்படுற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லைம்மா..” என்றான்.
“அவ என்னென்னமோ சொல்றா..? நீயும் பேசாம இருக்க...? என்னதான் நடந்தது...?” என்று மலர் உலுக்க...
“என்னடி புதுசு புதுசா கதை சொல்லிட்டு இருக்க..இப்படி அடுத்தவ வாழ்க்கையைப் புடுங்கி வாழணும்ன்னு ஆசைப்படுறியே...இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது..நீ நல்லா இருப்பியா..?” என்று துர்கா ஒரு பக்கம் கத்தத் துவங்க....
அவளின் பேச்சில் கலங்கிய தன் கண்களில் இருந்து கண்ணீரை வெளிவராமல் தடுத்து நிறுத்தியவள்...தைரியம் வரப் பெற்றவளாய்..
“அடுத்தவ வாழ்க்கையை புடிங்கி வாழனும்கிற அவசியம் எனக்கு கிடையாது..அதே மாதிரி அடுத்தவ புருஷன்னு தெரிஞ்சும் வாழ நினைக்கிற யோக்கியமான உன்னை விட நான் மோசமானவளும் கிடையாது..!” என்றவள்...
“இது தான் என்னோட முடிவு...எங்கப்பா பங்கு சொத்து வந்தே ஆகணும்..நான் நாளைக்கே வண்டியை வச்சு உழுது வெள்ளாமை வைக்குறேன்..எவன் வந்து என்ன புடுங்க முடியும்..அவனவன் பங்குல என்ன வேண்ணாலும் பண்ணிக்கோங்க..! இது தான் எங்க பதில்... உறுதியான முடிவும் கூட..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க..
“ஐயோ..! என்ன இவ...டிராக் மாறி..கடைசில அதை குளோஸ் பண்ணிட்டா..நாம ஒரு பிளான் பண்ணா..இவ நமக்கு மேல கில்லாடியா இருக்காளே..!” என்று முகிலன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க..
“கிளம்பலாமா அப்பா...” என்றவள்..அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்ப....முகிலனின் அருகில் வந்து..அவனின் கண்களைப் பார்த்து...
”வேடிக்கை பார்த்துகிட்டு..என்னைப் பேசுறதை எல்லாம் கேட்டு சந்தோஷப்பட்டுக்கிட்டு இருக்கிங்களோ...சார்..! எனக்கென்னமோ..நீங்க களி திங்க போற நாள் ரொம்ப தூரத்தில் இல்லைன்னு தோணுது..!” என்றவள்..அருகில் இருந்த மலரிடம்..
“மகனுக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ற மும்பாறத்துல இருக்கிக போல...சந்தேகமே வேண்டாம்..உங்க பையன் கண்டிப்பா மாமியார் வீட்டுக்கு போய்டுவார்...!” என்று எகத்தாளம் பேசிக் கொண்டு வெட்டிக் கொண்டு நடக்க..
“என்ன நடக்கிறது இங்கே..!” என்பதைப் போல் பார்த்து வைத்தார் மலர்.
மதி அந்த இடத்தை விட்டு காலி செய்யவும் மழை பேஞ்சு ஓய்ந்ததைப் போல் இருந்தது.
ஆனால் அங்கிருந்த யாருக்கும் அதிர்ச்சி அகன்றபாடில்லை.திலகாவிற்கு போட்ட திட்டமெல்லாம் கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் மனதிற்குள் துளிர் விட...அப்போது புதிதாய் ஆரம்பித்தாள் கோபியின் மகள் ராணி.
“என்ன அயித்தை...உங்களுக்கு என்னையெல்லாம் பார்த்தா மருமகளா கண்ணுக்குத் தெரியாது போல...! முன்னாடி மதி..இப்ப துர்கா..அடுத்து இவளை எப்ப அத்து விடுவிங்கன்னு சொல்லுங்க...அடுத்து மாமனை நான் கட்டிக்கிறேன்...” என்றாள்.
“என்னாடி வாய் ரொம்ப நீளுது..! என் மக இன்னமும் வாக்கப்பட்டே போகலை..அதுக்குள்ள அத்து விடுறதைப் பத்தி பேசுறவ..?” என்றார் திலகா எரிச்சலுடன்.
“அட அதுக்கில்லை பெரியம்மா....பின்னாடி அப்படி ஒரு நிலைமை வந்தா..மலரத்தை பொண்ணு தேடி அலையக் கூடாது இல்ல...அதான் இப்பவே சொல்லி வைச்சேன்..!” என்றாள் இடக்காய்.
அவர்கள் அனைவரையும் எரிச்சலுடன் பார்த்தவன்....அங்கிருந்து கிளம்ப தயாராக..
“என்ன மருமவனே கிளம்புறிங்க..? என் மகளுக்கு ஒரு பதிலை சொல்லிட்டு போங்க..!” என்று திலகா ஒரே போடாய் போட...
“நான் என்ன பதில் சொல்லணும்..?” என்றான் கூர்மையாய் பார்த்தபடி.
“எப்ப கல்யாணத்தை வச்சுகிடலாம்ன்னு தான்..” என்று சொல்ல..
“என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது..! இளிச்சவாயன் மாதிரி இருக்கா..?” என்று கோபமாய் கத்தியவன்..
“என்னம்மா இதெல்லாம்? நான் எப்ப கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேன்..!” என்றான் மலரிடம்.
“இன்னமும் நாங்களும் ஒன்னும் சொல்லலை முகிலா..!” என்றார் மலர் கொஞ்சம் பயத்துடன்.
“அட என்ன மதினி இப்படி பேசுறிங்க..? ஜாதகம் எல்லாம் பார்த்து பேசி முடிக்க போறப்ப..இப்படி சொல்றிங்க..?” என்றார் திலகா கோபமாய்.
“என்ன மாமா..? என்னை ஏமாத்தலாம்ன்னு முடிவு பண்ணிட்டிகளா..?” என்றாள் துர்கா கலங்கிய கண்களுடன்.
“ஏய்..!” என்று ஒரே உறுமலாய் உறுமினான் முகிலன்.அவனின் சத்தத்தில் அங்கு அப்படி ஒரு அமைதி நிலவ..
“உன்னை ஏமாத்தறது தான் என்னோட வேலையா...? சொல்லு...? உன்னை காதலிச்சு ஏமாத்துனேனா...இல்லை வயித்துல புள்ளையைக் குடுத்து ஏமாத்துனேனா...?எந்த விதத்துல உன்னையும் உன் குடும்பத்தையும் நான் ஏமாத்துனேன்..!” என்று உறும...அவனின் கண்கள் ரத்த சிகப்பில் மாறியது.
அவனின் கோபம் பார்த்து அதிர்ந்த திலகா...”கோபப்படாதிங்க மருமவனே..! அவ சின்ன கழுதை..அவளுக்கு என்ன தெரியும்..?” என்று சமாதான உடன்படிக்கைக்கு வர...
மூச்சினை சீர் செய்து..தன்னிலைக்கு வர வெகுபாடுபட்டான்.”என் புருஷன்” என்று மதியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளினால் மனதில் தோன்றியிருந்த இனிமை காணாமல் போயிருந்தது.இப்போது கோபம் முழுவதும் மதியின் மேல் திரும்பியிருந்தது.
“எல்லாம் இவளால வந்தது....இன்னைக்கு வச்சிருக்கேன் இவளுக்கு..” என்று மதியை மனக்கண்ணுக்குள் கொண்டு வந்து நிப்பாட்டி திட்டிக் கொண்டிருக்க...அவள் சடையைத் தூக்கி பின்னால் போட்டு...அவனைக் கண்டுக்காமல் போனது நியாபகம் வர..அவனின் மனம் கொஞ்சம் சாந்தம் அடைந்தது.
மதியின் முகம் மட்டுமே..அவனுக்கு நிம்மதியைக் கொடுக்கும் மருந்து.அதை அவனுமே உணர்ந்திருக்கிறான்.