எனக்கு என்ன சொல்லனு தெரியலை. குமரா சித்ராவோட வெளியில போயிட்டு இப்ப தான் நுழையற, உடனே தேவி தான் ஒரு கையின்னா என்னடா அர்த்தமிது. வெளியில போகும்போது ஒரு கை இல்லாமலா போன? அப்போ எப்பவுமே அப்படியே பழகிக்கோ. யாரும் யாருக்கும் நியாயமா இருக்கல.
அருமையான பதிவு .
தேவியின் வார்த்தைகள் அவள் அனுபவிச்ச வலியோட வெளிப்பாடுகள்.
கடவுள் கிட்ட கேட்டது எனக்கு நடந்தது நியாயமா ன்னு கேட்டிருப்பா.
இதுல பாண்டியம்மா வாயி தான் நெறைய பர்பாமென்ஸ் பண்ணியிருக்கு.
அந்த வாயை அடக்கதான் இந்த தண்டனையோ?.
பொண்ணுக்கு பொண்ணே எதிரி.
சாலா கேப்பாளே என்னத்தை சாதிச்சிட்டே அம்மா .
இன்னமும் நிறைய இடங்களில் பொண்ணுங்களோட நிலைப்பாடு என்ன பிரச்சினை ஆனாலும் ஒருத்தரை சார்ந்தே இருக்கற மாதிரி தான் போகுது.
அப்படியே வெளிய வந்தாலும்
சமூகத்தின் வக்ர பார்வை வக்ர பேச்சுக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உள்ளது.
அதுவும் குழந்தை பாக்கியம் இல்லாத பொண்ணுங்களை விசேஷ வூட்ல ஓரங்கட்டற நிகழ்வுகள் சகுனம் பாக்கறதுன்னு காயப்படுத்துற வேலையை தயங்காம இந்த சமூகம் செய்யும்.
ஓஹோ இவருக்கு ஒரு கை இல்லாம போயிடுமோ தேவி கிளம்புனா.
சித்ரா தான் ரொம்ப பாவப்பட்ட சென்மம். எதுக்கு மே உரிமை இல்லாத நிலை.