எங்கங்க அந்த சாருபாலா மேடம், அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க, நிறைய பேரை அவுங்ககிட்ட அனுப்ப வேண்டி இருக்கு. தன்னோட மகள ஷாலினி இடத்துல வச்சு பாக்க முடியலன்னு பிரகாஷ் வருத்தப்படும்போது பரவால்ல இவருக்கு பிள்ளைங்க மேலயாவது பாசம் இருக்கேன்னு தோணுது. இப்ப இருக்குற நிறையே பேர் பெண்டாட்டி பிள்ளை யாரு மேலயும் பாசம் வைக்கிறதில்லை. ஊரு உலகத்துல எல்லாரை மாதிரி நானும் கல்யாணம் கட்டிக்கிட்டேன், பிள்ளை பிறந்திருச்சு அவ்வளவுதான். அதுக்கப்புறம் என்னோட இராசலீலைகளை நான் தொடருவேன். என் வாழ்க்கை என் இஷ்டம் அப்படின்னுதான் இருக்குறாங்க. அவுங்களுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லுமா இருக்கும். பார்ப்போம். ஆனா பிரகாஷோட இந்த மாற்றம் கொஞ்சம் ஆறுதலா இருக்கு. சாலோவோட இந்த முன்னேற்றம் சூப்பரோ சூப்பர். பிள்ளைங்க தாயை புரிஞ்சுக்கிட்டாங்க. அதுவே போதும். சூப்பர் சூப்பர்.