Small comment for Shoba sister
5, 10, 20 பைசா நாணயங்கள் அதிக புழக்கத்தில் இருந்த காலகட்டம் அது(1980கள்).
ஆம் இட்லி 10பைசா,
சொயவுண்டை(குழிபனியாரம்) 5பைசா,
குச்சி ஐஸ் 5பைசா,
சேமியாஐஸ் 10பைசா,
பால் ஐஸ் 15பைசா...
அன்றைய காலகட்டத்தில் இட்லி எல்லாம் மாதத்தில் ஒரு நாள் கடையில் வாங்கி உண்பது கனவு.. வீட்டில் கார்த்திகை, தீபாவளிக்கு என் விசேஷ நாட்களில் எதிர்பார்க்களாம்...
வருத்த பட்டாணி 10காசு கால் சட்டை பாக்கெட் நிறம்பிவிடும்...
நமது உணவு கலாச்சாரம் பெரும்பகுதி மாறியது அதுவே இப்போது உள்ள பல நோய்களுக்கு காரணமாகிறது...
கௌசியின் கோட்டைக்கு சென்று விட்டாள் காப்பாற்றுவது கடினம் என சத்தியா நினைப்பது முற்றிலும் உண்மை, முதலில் அங்கு உள்ளே செல்வது கடினம் சென்றாலும் அவர்கள் எளிதில் மறைத்து விடுவார்கள் கண்டுபிடிப்பது குதிரை கொம்பே...
ஆனாலும் கல்யாண மாப்பிள்ளை யை அலைய விடுவது நியாயமா சகோதரி இங்கு சத்திய & மூர்த்தி யின் நட்பு & புரிதல் அழகாக எடுத்துரைக்கிறது...
இரவோடு இரவாக செய்த காரியங்கள் சபாஷ் சகோதரி...
அவலங்கள் எப்படி நடக்கிறது, பெண்கள் எப்படி இதில் சிக்குகிறார்கள் விளக்கம் அருமை, நிறைய மெனக்கெடல் தெரிகின்றது வாழ்த்துக்கள்...
நாட்டுக்கு பிடிச்ச நிரந்தர நோய் கிருமிங்க. பரவ விட்டா நம்ம வீட்டு பிள்ளைங்க மேலையும் கை வச்சிடுவானுங்க! இந்த விஷ கிருமிகளை அழிக்கணும் மூர்த்தி!
பாராட்ட வேண்டிய வரிகள் சகோதரி....
எல்லா காவலர்களும் சக்தி போல இருந்தால் குற்றங்கள் நிறையவே குறைந்து விடும்...
துளசி பெயர் காரணம் சூப்பர்.. வாத்து கதை அருமை...
வாத்தியார் சிலர் உள்ளனர் பெண்பிள்ளைகளை ஸ்கேல் கொண்டு அடிக்காமல் கைகளினால் அடிப்பார்கள் ஆண்பிள்ளைகளை பிரம்பு அல்லது ஸ்கேல் கொண்டு அடிப்பார்கள் அப்போது நினைத்தது பெண்பிள்ளைகள் வலி தாங்க மாட்டார் அதனால் கை கொண்டு அடிக்கின்றார் இப்போது புரிகிறது அவர்கள் அடிக்கும் சாக்கில் அவர்களை தொட்டு உள்ளார்கள் என்று....
கணக்கு வாத்தியாருக்கு மூர்த்தி எடுத்த பாடம் செம...
தன்னுடைய பெயரே பிடிக்காமல் போகின் எவ்வளவு வெறுத்து போகும் அளவிற்கு கஷ்ட பட்டு இருப்பாள்..
நான் அப்பவே சொன்னேன் இதைப்போல் ஒன்று எனக்கு வைத்து தருவாயா என்பதை கூட அறியாமல் இருக்கிக்றாளே என்று இப்பதான் அவளின் அறிவு வேலை செய்ய துடங்குறது பாவம் பேதை.
கோமல் அடிச்சே இரத்தம் வருதே மூர்த்தி அடிச்சா என்ன ஆவான்...
தான் பெரும் கஷ்டத்தில் இருக்கும் போதும் அந்த சிறுமியின் நிலைக்காக வருந்துவதால் தான் அவள் துளசி மூர்த்தி சார் உங்கள் கீர்த்தி அதிகம்...
இன்று கௌரவை கடித்து குதரி யது போல் முதலே செய்து இருந்தால் ஒருவே நல்லா இருந்து இருக்குமோ...
கௌரவ் கோமலுக்கு நரகத்தை காட்டுரேனு பாவம் அவன் முத்திதாம் (Mumbai big Hindu cemetery) க்கு மூர்த்தி மூலம் டிக்கெட் வாங்கிடானே...
கௌரவ் நொன்டி போல நடித்தான் இப்போது உண்மை யாகவே நொன்டி ஆகபோரான்...
இனி கோமலுக்கு விடுதலை கௌரவுக்கு சங்கு...
மூர்த்தி லுக் & போஸ் மாஸ்...
அருமையான பதிவு சகோதரி....