இதயம் கேட்கும் காதல் …
பகுதி 10
காலையிலேயே பரபரப்பாய் கிளம்பி வந்து வரவேற்பறையில் அமர்ந்த செழியனை, ஏதோ உலகத்தின் எட்டாம் அதிசயம் போல பார்த்த படியே கிச்சனிலிருந்து வந்த சந்திரா, அவனருகே அமர்ந்து,
"செழியன், என்னடா எப்பவும் நா சுப்ரபாதம் பாடி முடுச்சா கூட, வேணாடா வெறுப்பா பெட்டுல இருந்து எழுந்து வர்றவன், இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா, அதும் டிப்டாப்பா ட்ரஸ் வேற பண்ணிட்டு ரெடியாகி வந்திருக்க?! ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கா?" என்றவர், மேலும், "ச்ச, ச்ச, அப்படி மீட்டிங்கே இருந்தாலும், அதுக்கும் லேட்டா போயி தானே உனக்கு பழக்கம்!" என அவனை பற்றி நன்கு தெரிந்தும், அவனை சீண்டும் வண்ணம் கேட்டிட, அவரின் கேலி புரிந்து, அவரை முறைத்தபடியே,
"மூன், வேணாம். காலைல நல்ல மூடுல இருக்கேன். வீணா வந்து அதுல குத்து டேன்ஸ் ஆடிட்டு போயிடாத" என்று சொல்லி முடிக்கவும்,
நச்சென்று தலையில் ஒரு கொட்டை பரிசாய் வழங்கியவர், "என்ன பார்த்தா எப்படி இருக்கு? வர வர உனக்கா வாய் ஓவரா போச்சு!" என கண்ணை உருட்டி மிரட்டலாய் கேட்க, (அவங்கள பொருத்த வரை அதாங்க மிரட்டல் லுக்) அவரின் அந்த ரியாக்க்ஷனில் வந்த சிரிப்போடு,
"மூன், காமெடி செய்யாம போய் டிபன் எடுத்து வை. நா சீக்கிரமா போகனும்" என அவரின் முறைப்பை காமெடி சீனாக்கி, குப்பை கூடையில் தூக்கி போட்டு, அடுத்த விசயத்திற்கு தாவினான் சந்திராவின் புதல்வன்.
தனது கோபத்தை கிண்டல் செய்த செழியன் மீதான கடுப்பில், "நா கோவமா இருக்கேன். அதனால எதுவும் கிடையாது போடா" என்று சந்திராவும் முறுக்கிக்கொண்டு சென்றவர், "அப்பாடா! நல்லவேளை செழியா, இன்னைக்கு நீ நல்ல சோறு திங்கலாம். கோப பட்டு முடிஞ்சதும் நல்லா நீ சமச்சத நீயே கொட்டிக்கோ மூன், பாய்!" என்ற மகனின் வார்த்தையில், மேலும் கடுப்பின் உச்சத்திற்கு சென்றார்.
அதனால், அவர் அவனை அடிக்க கை ஓங்கும் முன்பே, ஒரே ஓட்டமாய் ஓடி, தனது காரை எடுத்துக்கொண்டு பறந்திருந்தான் செழியன்.
அவன் நேராய் செல்லும் இடமும், நோக்கமும் புரிந்ததால், அவன் சாப்பிடாமல் சென்றதை பற்றிய யோசனையை விடுத்து, அவர் எப்போதும் போலவே தனது வேலையை கவனிக்க சென்றார்.
***************
ஹரிஹரன் தான் எடுத்த முடிவின் படி, அன்றே இதழினியை சந்திக்க நினைத்தவன், கண்ணாடி முன் நின்று தனது உடையை சரி பார்த்த படியே, "இதழினி, உன்னை இப்ப காலைலயே பார்த்து எல்லாமே பேசிடனுமின்னு மனசு சொல்லுது.. பட், ஒரு முக்கியமான ஃபைல் வேற, நா சைன் பண்ணி கொடுத்தே ஆகணும். இல்லாட்டி என்னோட மேலதிகாரி அவ்வளவு தான், பேசியே சாவடிப்பாரூ.
ஹூம்..! விடு எப்படியும் காலைல அவசர அவசரமா பேசறத விட, ஈவினிங் கொஞ்சம் பொறுமையா, நிதானமா பேசலாம், சரியா?!" என்று தனக்கு தானே, இதழினி எதிரில் இருப்பதாக எண்ணி பேசியவன், அதே சிந்தனையோடும், மகிழ்ச்சியோடும் தனது அலுவலகம் நோக்கி சென்றான்.
என்றும் இல்லா திருநாளாய், அவனின் மென்மையான பேச்சும், சிறு இதழ் சிரிப்பும், பார்த்து அந்த அலுவகத்தில் இருக்கும், ப்யூன் முதல் அவனின் உயரதிகாரிகள் வரை, வித்தியாசமாய் பார்ப்பது தெரிந்தும், கண்டு கொள்ளாது, 'இதழினியை தனியே சந்திப்பது, மாலை எப்படி பேசுவது, எதை பேசி அவளிடம் சம்மதம் வாங்குவது?!' என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு மற்றவர் பார்வை ஒரு பொருட்டாகவே இல்லை. ஆசையோடும் ஆவலாகவும் காத்திருந்த அந்த தருணத்தில் அவனுக்கு கிடைக்க போவது இதழினியின் சம்மதமா? அல்லது மறுப்பா?
***********
இதழினி, அலுவலகத்தை அடைந்ததும் எதிர்பட்ட சந்துரு, "குட் மார்னிங், இதழினி. நேத்து பொண்ணு பார்க்க வந்தது என்னாச்சு?" என ஆர்வக்கோளாரில் கேட்டு வைக்க,
"சந்துரு, இந்த விசயம் வெளிய யாருக்குமே தெரியாதே, உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது?!" என தன்னையே, குறுகுறுவென பார்த்து கேட்ட, இதழினியின் பதிலில் தான், அவசரப்பட்டு தான் உளறியது சந்துருவுக்கு புரிய,
'சந்துரு, இப்படியாடா, உங்க அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு, நீயே காட்டி கொடுப்ப, எதையாவது சொல்லி சமாளிடா' என தனது மனதுள் பேசியவன், வெளியே, 'ஹீ.. ஹீ…' என அசட்டு சிரிப்பை சிந்தினான், சமாளிக்கும் பொருட்டு.
இதுவரை இப்படியான சிறு செயலையும், தன்னிடம் காட்டாத சந்துரு, இப்போது காட்டும் புது முகத்தில் சற்று குழம்பித்தான் போனாள், இதழினி.
அவளின் குழப்பத்தை தனக்கு சாதகமாய் மாற்ற நினைத்த சந்துரு, "அது வந்து இதழினி, எனக்கு நைட் ஒரு கனவு வந்துச்சா, அதுல உன்னைய பொண்ணு பார்க்க வர்ற மாதிரி இருந்துச்சு. அது கனவு மாதிரி இல்லாம நேருல நடந்த மாதிரியே ஒரு ஃபீல்!!!
அதே நினைப்புல வந்தேனா, அதான் சட்டுன்னு அப்படி கேட்டுட்டேன். ஆனா, நீயும் அப்படி நடந்துச்சு சொல்ற பாரேன், என்ன ஒரு அதிசயம்!" என கிராமத்து கிழவியர், போல கையை முகவாயில் வைத்து அதிசயம் போல பாவலா காட்டி பேசியவன் பேச்சில், இருக்கும் இடமும், சூழலும் மறந்து பலமாய் சிரித்தாள் இதழினி.
பகுதி 10
காலையிலேயே பரபரப்பாய் கிளம்பி வந்து வரவேற்பறையில் அமர்ந்த செழியனை, ஏதோ உலகத்தின் எட்டாம் அதிசயம் போல பார்த்த படியே கிச்சனிலிருந்து வந்த சந்திரா, அவனருகே அமர்ந்து,
"செழியன், என்னடா எப்பவும் நா சுப்ரபாதம் பாடி முடுச்சா கூட, வேணாடா வெறுப்பா பெட்டுல இருந்து எழுந்து வர்றவன், இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா, அதும் டிப்டாப்பா ட்ரஸ் வேற பண்ணிட்டு ரெடியாகி வந்திருக்க?! ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கா?" என்றவர், மேலும், "ச்ச, ச்ச, அப்படி மீட்டிங்கே இருந்தாலும், அதுக்கும் லேட்டா போயி தானே உனக்கு பழக்கம்!" என அவனை பற்றி நன்கு தெரிந்தும், அவனை சீண்டும் வண்ணம் கேட்டிட, அவரின் கேலி புரிந்து, அவரை முறைத்தபடியே,
"மூன், வேணாம். காலைல நல்ல மூடுல இருக்கேன். வீணா வந்து அதுல குத்து டேன்ஸ் ஆடிட்டு போயிடாத" என்று சொல்லி முடிக்கவும்,
நச்சென்று தலையில் ஒரு கொட்டை பரிசாய் வழங்கியவர், "என்ன பார்த்தா எப்படி இருக்கு? வர வர உனக்கா வாய் ஓவரா போச்சு!" என கண்ணை உருட்டி மிரட்டலாய் கேட்க, (அவங்கள பொருத்த வரை அதாங்க மிரட்டல் லுக்) அவரின் அந்த ரியாக்க்ஷனில் வந்த சிரிப்போடு,
"மூன், காமெடி செய்யாம போய் டிபன் எடுத்து வை. நா சீக்கிரமா போகனும்" என அவரின் முறைப்பை காமெடி சீனாக்கி, குப்பை கூடையில் தூக்கி போட்டு, அடுத்த விசயத்திற்கு தாவினான் சந்திராவின் புதல்வன்.
தனது கோபத்தை கிண்டல் செய்த செழியன் மீதான கடுப்பில், "நா கோவமா இருக்கேன். அதனால எதுவும் கிடையாது போடா" என்று சந்திராவும் முறுக்கிக்கொண்டு சென்றவர், "அப்பாடா! நல்லவேளை செழியா, இன்னைக்கு நீ நல்ல சோறு திங்கலாம். கோப பட்டு முடிஞ்சதும் நல்லா நீ சமச்சத நீயே கொட்டிக்கோ மூன், பாய்!" என்ற மகனின் வார்த்தையில், மேலும் கடுப்பின் உச்சத்திற்கு சென்றார்.
அதனால், அவர் அவனை அடிக்க கை ஓங்கும் முன்பே, ஒரே ஓட்டமாய் ஓடி, தனது காரை எடுத்துக்கொண்டு பறந்திருந்தான் செழியன்.
அவன் நேராய் செல்லும் இடமும், நோக்கமும் புரிந்ததால், அவன் சாப்பிடாமல் சென்றதை பற்றிய யோசனையை விடுத்து, அவர் எப்போதும் போலவே தனது வேலையை கவனிக்க சென்றார்.
***************
ஹரிஹரன் தான் எடுத்த முடிவின் படி, அன்றே இதழினியை சந்திக்க நினைத்தவன், கண்ணாடி முன் நின்று தனது உடையை சரி பார்த்த படியே, "இதழினி, உன்னை இப்ப காலைலயே பார்த்து எல்லாமே பேசிடனுமின்னு மனசு சொல்லுது.. பட், ஒரு முக்கியமான ஃபைல் வேற, நா சைன் பண்ணி கொடுத்தே ஆகணும். இல்லாட்டி என்னோட மேலதிகாரி அவ்வளவு தான், பேசியே சாவடிப்பாரூ.
ஹூம்..! விடு எப்படியும் காலைல அவசர அவசரமா பேசறத விட, ஈவினிங் கொஞ்சம் பொறுமையா, நிதானமா பேசலாம், சரியா?!" என்று தனக்கு தானே, இதழினி எதிரில் இருப்பதாக எண்ணி பேசியவன், அதே சிந்தனையோடும், மகிழ்ச்சியோடும் தனது அலுவலகம் நோக்கி சென்றான்.
என்றும் இல்லா திருநாளாய், அவனின் மென்மையான பேச்சும், சிறு இதழ் சிரிப்பும், பார்த்து அந்த அலுவகத்தில் இருக்கும், ப்யூன் முதல் அவனின் உயரதிகாரிகள் வரை, வித்தியாசமாய் பார்ப்பது தெரிந்தும், கண்டு கொள்ளாது, 'இதழினியை தனியே சந்திப்பது, மாலை எப்படி பேசுவது, எதை பேசி அவளிடம் சம்மதம் வாங்குவது?!' என்ற சிந்தனையில் இருந்தவனுக்கு மற்றவர் பார்வை ஒரு பொருட்டாகவே இல்லை. ஆசையோடும் ஆவலாகவும் காத்திருந்த அந்த தருணத்தில் அவனுக்கு கிடைக்க போவது இதழினியின் சம்மதமா? அல்லது மறுப்பா?
***********
இதழினி, அலுவலகத்தை அடைந்ததும் எதிர்பட்ட சந்துரு, "குட் மார்னிங், இதழினி. நேத்து பொண்ணு பார்க்க வந்தது என்னாச்சு?" என ஆர்வக்கோளாரில் கேட்டு வைக்க,
"சந்துரு, இந்த விசயம் வெளிய யாருக்குமே தெரியாதே, உங்களுக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுது?!" என தன்னையே, குறுகுறுவென பார்த்து கேட்ட, இதழினியின் பதிலில் தான், அவசரப்பட்டு தான் உளறியது சந்துருவுக்கு புரிய,
'சந்துரு, இப்படியாடா, உங்க அப்பன் குதிருக்குள்ள இல்லன்னு, நீயே காட்டி கொடுப்ப, எதையாவது சொல்லி சமாளிடா' என தனது மனதுள் பேசியவன், வெளியே, 'ஹீ.. ஹீ…' என அசட்டு சிரிப்பை சிந்தினான், சமாளிக்கும் பொருட்டு.
இதுவரை இப்படியான சிறு செயலையும், தன்னிடம் காட்டாத சந்துரு, இப்போது காட்டும் புது முகத்தில் சற்று குழம்பித்தான் போனாள், இதழினி.
அவளின் குழப்பத்தை தனக்கு சாதகமாய் மாற்ற நினைத்த சந்துரு, "அது வந்து இதழினி, எனக்கு நைட் ஒரு கனவு வந்துச்சா, அதுல உன்னைய பொண்ணு பார்க்க வர்ற மாதிரி இருந்துச்சு. அது கனவு மாதிரி இல்லாம நேருல நடந்த மாதிரியே ஒரு ஃபீல்!!!
அதே நினைப்புல வந்தேனா, அதான் சட்டுன்னு அப்படி கேட்டுட்டேன். ஆனா, நீயும் அப்படி நடந்துச்சு சொல்ற பாரேன், என்ன ஒரு அதிசயம்!" என கிராமத்து கிழவியர், போல கையை முகவாயில் வைத்து அதிசயம் போல பாவலா காட்டி பேசியவன் பேச்சில், இருக்கும் இடமும், சூழலும் மறந்து பலமாய் சிரித்தாள் இதழினி.
Last edited: