சூப்பராக இருந்தது இந்த எபி, இலவசமாக கொடுக்கிற அன்புக்கு கூட மதிப்பு கிடையாது. உண்மை உண்மை. இதெல்லாம் பெரும்பாலான குடும்பத்தலைவிகள் இன்னைக்கு அனுபவிக்கிறது. அனுபவிச்சுக்கிட்டு இருக்கிறதுதான். நம்மோட உணர்வுகள் கூட நம்மோட வாழ்க்கைத்துணைக்கு நினைக்கிற ஒவ்வொருத்தருக்கும் வணக்கங்கள். அப்படித்தான் இருக்கனும். ஒருவனுக்கு ஒருத்திங்கிறது கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பாத்தறதுக்காக மட்டும் கிடையாது. ஒருவனுக்கு ஒருத்திங்கிறது நம்மோட உடல்நலம், மனநலம், வாரிசுகளோட வளம் எல்லாத்துக்குமே ரொம்பவே அவசியம். ஒருத்தரை மீறிய அதிகமான நபர்களோட (ஒருத்தர் உயிருடன் இருக்கும்போதே மற்றவருடன் தொடர்பு கொள்வது) உடல்ரீதியா தொடர்பு கொள்றவுங்க மனசளவுல கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். உடல்ரீதியாகவே அது பல பாதிப்புகளையும் தரும். இது அறிவியல் ரீதியாக உண்மைதான். நம்ம உடம்புங்கிறது செய்ற அதிகபட்ச வேலை கலவி கொள்வது. அது பல பேரோட இருந்தால் இந்த உடம்பு என்னத்துக்கு ஆகும். இதுல திருட்டு மாங்காய்க்குதான் ருதி. அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி முழுப் பொண்டாட்டி இப்படி பல வார்த்தைஜாலங்கள் உலவுது. இதெல்லாம் எப்படித்தான் உருவாக்குவாங்களோ. பெண்களுக்கு எல்லாம் கணவரைத் தவிர வேறு யாரையும் இந்த நோக்குல பார்க்குறது சாமி குத்தம்னு சொல்லி வளர்க்குறாங்க. யப்பா என்ன ஓரவஞ்சனை. நானும் சக மனுஷிதான், நானும் பல பேரோ லிவ் இன்ல இருப்பேன். இப்படி கிறுக்குத்தனமாக பெண்ணியம் பேசாம, பெண்ணியம்னா தைர்யம், சுயசார்பு, ஒழுக்கம் அப்படிங்கிறத நாம புரிஞ்சுக்கனும்.