VERY NICE
எனக்கும் உங்க கருத்து தான் 100 % ....இந்த கமெண்ட் போடவா வேண்டாமா என்று ரொம்ப குழப்பமா தான் இருந்துச்சு ஆனாலும் எனக்கு தோணுறதை சொல்லாமல் இருக்க முடியல ..
எனக்கு சாலோவோட அண்ணி தேவி பத்தி வந்ததோ அதற்கு பிறகு சாலாவுக்கு சப்போர்ட் பண்ண விருப்பமான இல்லை.. அதுவும் சரண்யா கிட்ட நாற்பது வயசு வரைக்கும் நரக வாழ்க்கை வாழ்ந்தேன் என்று சொல்றதை படிச்ச பிறகு சாலா மேல் எந்த நல்ல எண்ணமும் இல்லை
தேவிக்கு குழந்தை இல்லை என்றதும் அவங்க தங்கச்சிய இரண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சு வைக்கும் போது சாலாவுக்கு உறுத்தலையா ..
தேவி முன்னாடியே அவங்க புருஷனுக்கு சொந்த தங்கச்சிய கட்டி வச்சு தான் புருஷன் இன்னொருத்தி கூட குடும்பம் நடத்துற கொடுமைய ஒரே வீட்டில் இருந்து தினம் அனுபவிச்சாங்களே .. அப்போ எல்லாம் அது கொடுமையா சாலாவுக்கு தெரியல ....
பொண்டாட்டி கிட்ட குறை இருந்தால் புருஷன் இன்னொருத்தி கூட வாழலாம் என்று தானே சாலா வீட்டில் ரூல்ஸ் வச்சிருக்காங்க அது பிரகாஷுக்கு மட்டும் ஏன் பொருந்தாது
தேவிகிட்ட குறை இருந்ததும் சாலாவோட குடும்பமே அவ அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சாங்க அப்போ ஒரு பொண்டாட்டியா தேவிக்கு அது எவ்வளவு பெரிய வலி என்று யோசிக்கவே தோணல
சாலா அண்ணன் மாதிரி பிரகாஷும் அவன் பொண்டாட்டி கிட்ட இருக்க குறைய சொல்லி அவனோட சந்தோஷத்துக்காக ஷாலினி கூட செகண்ட் மேரேஜ் செஞ்சு வைக்க சொல்லி இருக்கணும் போல...
சாலாவுக்கு அவ கிட்ட என்ன குறை இருந்தாலும் அவ புருஷன் அவளுக்காக தான் இருக்கணும் என்று நினைக்குறா இந்த நியாயம் எல்லாம் ஏன் தேவி விஷயத்தில் இல்லை....
இவளுக்காவது ஆறுதலா குழந்தைகள் இருக்கு ஆனா தேவிக்கு குழந்தை இல்லை அதை காரணம் காட்டி புருஷனையும் பறிச்சாச்சு மலடி பட்டம் கட்டி மூலையில் ஒதுக்கி வச்சிட்டு ஒரு நல்லது கெட்டது எதிலும் கலந்துக்க முடியாமல் நாலு சுவத்துக்குள்ள முடக்கியாச்சு ....
இது எதுவும் சாலாவுக்கு இத்தனை வருஷத்தில் ஒரு தடவை கூட தப்பா தெரியல ...
இப்போ நாற்பது வயசில் அவ புருஷன் துரோகம் செஞ்சதும் ஊரை விட்டு வந்தா சொந்தமா தொழில் தொடங்கி சுயமா நிக்குறா ஆனால் இதில் எதையும் தேவிக்கு செய்யணும் என்று தோணவே இல்லை..
சரண் கதையில் தேவி இவ கூட சேரந்து பிஸ்னஸ் பண்ற மாதிரி வந்துச்சு அப்போ இவளுக்கு அந்த நிலைமை வந்ததும் தான் தேவி விஷயத்தில் புத்தி வருமா..
இவங்க தேவிக்கு இத்தனை வருஷம் செஞ்ச பாவத்துக்கு இவ தேவி கிட்ட மன்னிப்பு கேட்டு தொழிலில் கூட சேர்த்து பணமும் பதவியும் கொடுத்தால் ஈடு ஆகிடுமா அப்போ பிரகாஷும் இவ கிட்ட மன்னிப்பு கேட்டு இனி எப்பவும் தப்பு பண்ண மாட்டேன் என்று சொன்னால் அவனை ஏத்துக்க வேண்டிய தான....
பிரகாஷ் கிட்ட கத்தி குத்து கதை சொன்னாலே அது தேவிக்கும் பொருந்துமே... தேவியும் என் புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வச்சது நீங்கள் தானே என்று சாலா குடும்பத்தையே கத்தியால் குத்தணும் தானே ...
சாலா அவ புருஷன் இன்னொருத்தி கூட இருந்தான் என்று பொங்கி எழுவதும் புரட்சி பண்றதும் எனக்கு படிக்க விருப்பம் இல்லை.
பிரகாஷ் கிட்ட இவ நியாயம் பேசும் போது இவளுக்கு என்ன தகுதி இருக்கு என்று தான் எனக்கு தோணுது..
தேவிக்கு குழந்தை இல்லை என்றதும் அவங்களுக்கு ஒரு நியாயம் இவ இரண்டு பிள்ளை பெத்ததும் இவளுக்கு ஒரு நியாயமா
புருஷன் இன்னொருத்தி கூட வாழ்றதை தேவி சகிச்சு கிட்டு வாழணும் ஆனால் இவ புருஷன் இன்னொருத்தி கிட்டு தொடர்பு வச்சிருந்தான் என்பதை இவ சகிச்சுகிட்டு வாழ மாட்டா...
இவ மகன் கிட்ட பிரகாஷ் பண்ணது அயோக்கியத்தனம் என்று சொல்லுவா அவன் திருப்பி தேவி அத்தைக்கு நீங்கள் செஞ்சது சரியா தப்பா என்று கேட்டா என்ன பதில் சொல்லுவா ...
இப்போ கூட சாலா நினைச்சா அவ புருஷனை மன்னிச்சு அவன் கூட சேர்ந்து பழைய படி நல்லா வாழ முடியும் ஆனால் தேவி அவங்க புருஷனை இழந்தது இழந்தது தானே..
பிரகாஷ் கேரக்டர்ல ஒரு விஷயம் ஏத்துக்கவே முடியல புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்குறவன் அதுவும் நல்ல தரமான புத்தகமா ஒழுக்கத்தையும் நல்ல நெறிகளையும் சொல்லுற புத்தகங்கள் மட்டும் தான் படிக்கிறான் இவன் எப்படி ஒழுக்கம் தவறுவான்..
புத்தகத்தையும் ஒழுக்ககேடையும் ஒன்னா வச்சு பார்க்க முடியல ... புத்தகங்களுக்கு அடிமை ஆனவங்களால் வேற எந்த தப்பான விஷயத்திலும் மனசு செல்லாது .
சாலா ஹீரோயின் என்பதால் அவளை மட்டும் போக்கஸ் பண்ணி அவளுக்கு நடக்கிறது மட்டும் கொடுமை மாதிரி என்னால் படிக்க முடியல தேவி விஷயம் நடுவில் உறுத்தி கிட்டே இருக்கு...
எனக்கு பர்சனலா சாலாவ புரட்சி பெண் மாதிரி படிக்க விருப்பம் இல்லை ஏன்னா இந்த புரட்சி எல்லாம் சுயநலத்துக்காக செய்ய கூடாது.. இவங்க வீட்டுக்கு வாழ வந்த பெண்ணுக்கும் இதே நியாயத்தை பாலோவ் செஞ்சிருந்தா ஏத்துக்கலாம்
ஒரு வேளை பிரகாஷ் எந்த தப்பும் செய்யாமல் நல்லவனாவே இருந்து இருந்தால் தேவி சாகுற வரை இவங்க வீட்டில் அடிமையா நரக வாழ்க்கை தானே வாழ்ந்து இருப்பாங்க..
எனக்கு சாலாவ ஹீரோயினா வச்சு படிக்க விருப்பம் இல்லை ஒரு வேளை பிரகாஷ் கூட சேருவது போல காட்டுனா படிப்பேன்..
உங்க அடுத்த கதையில் வந்து ஜாயிணட் ஆகிக்குறேன்