ப்ரகாஷ் - மூச்சு....நீ பேச கூடாது. இந்த ஹோட்டல் போயி நம்ம ஒன்ன ஆர்டர் செஞ்சுட்டு , அப்புறம் அடுத்தவங்க ஆர்டர் பண்ணத பார்த்து ஆசைப்படுவோமே அந்த மாதிரி இருக்கு இவன் சொல்றது. சாலாவ கல்யாணம் பண்ணும் போது தெரியாதா? 15 வருஷமா தெரியாத மூச்சு முட்டுதல் ஷாலினி வந்ததுமே தெரிஞ்சுச்சா?திருமண வாழ்க்கைக்கான அழகே ரெண்டு வேறு கருத்து உள்ள நபர்கள் ஒன்றாக இணைந்து செல்வது தான். தம்பதியரின ஒருவர் மிக கஞ்சமாக இருந்தால் ஓருவர் சற்று தாராளமாக செலவழிப்பவராக இருப்பார். ஒருவர் சிடுசிடுவென இருந்தால் மற்றவர் நன்றாக பழகுபவராக இருப்பார். இன்னும் பல வேற்றுமைகள் இருக்கும். எப்படி பாலன்ஸ் செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பது தான் சுவாரசியமே. இது கண்டிப்பாக திருமணமான புதிதில் தெரியாது. நிறைய சண்டை,சமாதானம், வருடங்களுக்கு பிறகு தான் தெரியும். திருமண வாழ்க்கை என்ன, நட்பில் இல்லாத வேற்றுமைகளா? அதை தாண்டி நிற்பதற்க்கு காரணம் என்ன? இன்னொருவர் கேள்வி கேட்பதை விரும்பாத நாம் நட்பு சில இடங்களில் காறித்துப்பினால் கூட ஏற்றுக்கொள்கிறோமே? அதிகாரம், போலி மரியாதையை விட தம்பதிகள்க்குள்ள பேஸிக் ஃப்ரண்ட்ஷிப் வாழ்க்கையை காப்பாற்றிவிடும்.சாலா அவ்வளவு பொருப்பாக இருந்ததால் தான் இந்த பணக்கார பவுசு. ப்ரகாஷ்க்கு சாலாவுக்கு தெரிஞ்சுடுச்சோன்னு டவுட் முன்னாடியே வரும். ஆனா சபலமும், சாலா மேல இருந்த அலட்சியமும் உணர்ந்துக்க விரும்பலை அவன். தீனா, அவன் தவிர்க்கனும், தப்புன்ற எண்ணமிருந்தா ஆலோசனை கேட்டுருப்பான்.ஷாலினி நீ அக்கான்னு கூப்பிட்டு சாலாவுக்கு துரோகம் செஞ்ச, அதான் உன் அக்கா உனக்கு ரிவீட்டு அடிக்கறா. தேவியின் கோபம் மிக நியாயம். வாங்கிய அத்தனை பேச்சுக்களும் இவ்வளவு வஞ்சத்தை தந்திருக்கும்.இது கண்டிப்பா பாண்டிமாக்கான தண்டனையும் கூட. ஆனா மடப்புறம் காளி கிட்ட தேவி எனக்கு சந்தோஷத்தை கொடுன்னு கேட்டிருக்கலாம். ஏன்னா கஷ்டபடுறத பார்க்கறத விட வேற என்ன கிடைச்சிடும் இதுல. இவ லைஃப் மாறிடாது. அதுக்கு எனக்கு சந்தோஷத்தைக் கொடுன்னு வேண்டியிருக்கலாம். ஆனா நொந்த மனதிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். யாகாவராயினும நா காக்க தான் நியாபகம் வருது.