தெய்வம் நின்னு கொல்லும். மடப்புரத்து காளியம்மா நிதானமா பாண்டியம்மாவுக்கு வலிக்க வலிக்க அள்ளி கொடுத்துட்டா .
அவங்களும் அவங்க பையனும் ஒரு பொண்ணுக்கில்லை, தேவி-சித்ரா, ரெண்டு பேருக்கும் அநியாயம் செஞ்சதால தான் தெய்வம் கணக்கு பண்ணி அடிச்சுருச்சு. இந்த தருணத்தில் தான் தெரிந்தோ, அல்லது இயலாமையாலோ தன் பிறந்த வீட்டில் நடந்த அநீதிக்கு துணையாகவோ /மௌனசாட்சியாகவோ இருந்ததுக்கு சாலா வருத்தப்படுவான்னு நினைக்கிறன்.
விசாலாட்சியோ இல்லை அவளோட அக்காவோ அப்ப அதை தடுக்கப்பர்த்தாங்களா இல்லை இது ஊர் வழமைன்னு கடந்து போனாங்களா தெரியல. எப்படி இருந்தாலும் பெத்தவங்க பாவத்தை பொண்ணுங்க சுமந்து நிக்கும்படி ஆகிடுச்சு.
தேவியோட சந்தோஷம் மனசுக்கு வேதனை அளித்தாலும், அவங்களோட அந்த மனநிலையை தப்பு சொல்ல முடியாது. இன்னைக்கு நிலைமைக்கு சாலா தான் அவங்களை சரியா புரிஞ்சுப்பாளா இருக்கும்.
எல்லாராலையும் தனக்கு அநீதி நடக்கறதை தட்டிக்கேட்டு தானே முனைந்து அந்த தப்பை நடக்க விடாமல் செய்ய முடியறதில்லை. அப்படிப்பட்ட
நிலைமை தான் தேவியோட கடந்த கால நிலை. அவளைப் பெத்தவங்களே அவளுக்கு துணை நிக்கலை. புருஷனுக்கும் எந்த குற்றஉணர்ச்சியும் இல்லை. அநேகமா சித்ராகிட்டயும் அவ விருப்பத்தையெல்லாம் கேட்டு, அவளை ரெண்டாந்தாரமா கட்டி கொடுத்துருக்க மாட்டாங்க. அது தான் தேவி தன் குமுறலை அடக்கி தெய்வத்துகிட்ட முறையிட்டு தன் வலிக்கு மருந்து கேட்டிருக்காங்க. ஏன்னா அவங்களை மாதிரி பெண்களுக்கு புருஷனும் அவன் குடும்பமும் தான் உலகம் அது தான் அவங்களுக்கு நிறைவுன்னு சொல்லியே வளர்க்கப்பட்டருப்பாங்க. So அதை மீறி இந்த சமுதாயத்தை சந்திக்க அவங்களுக்கு பயமா தான் இருக்கும். அதனால அவங்க மௌனக்கண்ணீர் தான் வடிப்பாங்க.
இன்னும் சித்ராக்கான கணக்கு வேற பாக்கி இருக்கு. அது அநேகமா குமார் தலையில வேற design-ல விழும்ன்னு நினைக்கிறன்.
அய்யா தலைவரே, உங்க சகவாசத்துல தான் இந்த பிரகாஷ் கண்ணுல விசாலாட்சி பட்டாளா? உங்களுக்கு தீர்ப்பு சொல்லற நியாய மனசு மட்டுமே இல்லாமல் கொஞ்சம் தீர்க்கதரிசனமும் இருந்திருந்தா நல்லா இருந்துருக்கும்.
எப்படியோ இன்னிக்கி அவர் பிரகாஷ் கிட்ட சொன்னது எல்லாமே கசக்கும் உண்மை. பீர், wine-um குடிச்சு ஷாலினியோட கூத்தடிச்சுட்டு, சலிச்சுப்போறப்ப திருந்திக்கலாம்ன்னு, திட்டம்போட்டு தப்பு பண்ணுனவனுக்கு, இந்த உண்மையை முழுங்கறதுக்கு கஷ்டமா தான் இருக்கும்.
ஊர் மேஞ்சதுமில்லாமல், 5 மாசம் குடும்ப செலவுக்கு பணம் அனுப்பாமல் இருந்தானே இவன், அந்த ஒரு செயலே சொல்லுது இவனோட புத்தியை. இவன் இந்த நொடிக்கூட குற்றவுணர்ச்சி இல்லாமல் தான் பேசறான்.
அதெப்படிடா கல்யாணத்துக்கு மட்டும் ஒரு அடக்கமான பொண்ணு வேணும், உனக்கும் உன் வீட்டாளுங்களுக்கும் விட்டுக்கொடுத்து அனுச்சரிச்சுப்போக. உன் சம்பளத்துல குடுத்தனம் நடத்த.
அதே பின்னாளில் உனக்கு காசும் கொழுப்பும் கூடும் போது, அவ உனக்கு intellectual thoughts இல்லாதவளா தெரியுவா. உனக்கெல்லாம் எந்த மாதிரி தண்டனைன்னு முடிவு பண்ண தெய்வமே கொஞ்சம் யோசிக்கணும் போல.
இந்த கங்கா என்ன தான் நினைக்கிறாங்க அவங்க பொண்ணைப்பத்தி இன்னும் என்றே புரியலையே.
இந்த பாருமா தாரிணி, நீயெல்லாம் உன் புருஷனை மட்டும் இல்லை அஜய் மாதிரி உனக்கும் வளர்ந்த பையன் இருந்தால் அவனையும் இந்த sooper சித்தி கிட்ட இருந்து காப்பாத்தி வை.
இனி தேவி டைரி நமக்கு படிக்க என்னவெல்லாம் வெச்சுருக்குன்னு பார்ப்போம்.