Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 14 (2)

Advertisement

கீழே கிடக்கும் மகனை அள்ளி எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்ட வைதேகி, “அச்சோ, ரத்தம் வருதேடா கண்ணா, ரொம்ப வலிக்குதாடா” என கேட்டபடி அவன் காயத்தை ஆராய்ந்துக்கொண்டே, “நீங்க இத்தனை மோசமா நடந்துக்க கூடாதுங்க” என கத்த, தொட்டிலில் இருந்த காண்டீபனும் சத்தத்தில் அழத்தொடங்க, அவ்விடம் போர்க்களமாய் இருந்தது.



ஓய்ந்து போய் அமர்ந்துவிட்டார் சத்தியராஜன். இன்பனின் காயத்திற்கு மஞ்சள் பத்துப்போட்ட வைதேகி, அவனுக்கு தின்பண்டத்தை கையில் கொடுத்துவிட்டு சின்னவனை கவனித்தார். அமைதியாய் கழித்தன சில மணித்துளிகள்.



“இப்போ என்ன சொல்ல வரீங்க? என் புள்ள உங்களோட இருக்கக்கூடாதா?” என பொறுமையாய் ஆரம்பித்தார் வைதேகி.



“ஆமா! அவன் நம்மளை விட்டு தூர இருக்கிறது தான் நமக்கு நல்லது”



“அப்படின்னா, இனி அவன் உங்கக்கூட இருக்க மாட்டான், அவனை எங்க அம்மா வீட்ல விட்டுடுறேன்!” என்றதும் மலர்ந்த சத்தியனின் முகம், “ஆனா, கூடவே நானும் எங்க அம்மா வீட்டுக்கு போய்டுவேன்! இவனை விட்டுடு என்னால இருக்க முடியாது” என்றதும் சிவந்து போனது.



“அப்போ இவனுக்காக என்னையே தூக்கிப்போட தயாரா இருக்கல்ல நீ?”



“ஆமா!”



“யோசிச்சு தான் பேசுறியா?”



வைதேகி, “நல்லா யோசிச்சு தான் பேசுறேன்” என்றிட மனைவியிடம் என்ன சொல்ல என தெரியாது, இன்பனை பார்த்து முறைத்தவர், “உன் ஒருத்தனால என்னைக்கும் எங்களுக்குள்ள நிம்மதியே இல்லடா! எங்கயாது போய் தொலை!! அப்போ தான் எனக்கு நிம்மதி!!!” என சொல்ல, “சின்ன பையன் கிட்ட என்ன பேசனும்ன்னு தெரியாதா உங்களுக்கெல்லாம்?” என்றார் வைதேகி சீற்றமாய்.



“ச்சை!!!” என்றவர் வழியில் கிடந்த நாற்காலியில் தன் கோபத்தை காட்டிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அன்று அவர்களின் திருமண நாள் என்பதால் வேலையாட்களுக்கு விடுமுறை கொடுத்திருக்க, சோளக்காட்டில் ஒருவருக்கும் இச்சண்டையை அறியும் வாய்ப்பின்றி போனது.



சத்தியன் சென்றதும் அழுதபடி அமர்ந்திருந்த அன்னையிடம் சென்ற இன்பன், “ம்மா, அழாத! நா எங்கயாது போவா?” என்றான்.



அவன் வார்த்தைகளில் மீண்டும் எழுந்த கண்ணீரோடு அவனை வாரி அணைத்துக்கொண்ட வைதேகி, “நம்ம போய்டலாம்டா கண்ணா! இங்க நம்ம இருக்க வேணாம்!! உங்கப்பா கோவம் போனதும் வருவோம்” என சமாதானம் சொல்ல, ஆறு வயது குழந்தைக்கு என்ன புரிந்திருந்ததோ,



“அப்பாக்கு என்னதானேம்மா பிடிக்காது? நா மட்டும் போறேன்” என்றது.



“இல்லடா, அப்பாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்! சும்மா விளையாட்டுக்கு தான் எப்பவும் திட்டுறாரு!! கொஞ்ச நாள் உன்னை பார்க்காம இருந்தா அவரே உன்னை தேடி வருவாரு! அப்பாக்கு அவ்வளோ பாசம் உன்மேல” இல்லாத ஒன்றை சொல்லி நம்ப வைத்திருந்தார் வைதேகி.



கண்களில் ஒளியுடன், “அப்படியாமா?” என்றது குழந்தை.



“ஆமாடா கண்ணா! நீ எப்பவும் அப்பாவை விட்டு போகக்கூடாது! உன் தம்பியை நீ தான் பார்த்துக்கணும்! அப்பா என்ன திட்டுனாலும் உன் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கனும்!! உன் தம்பி உன்னை ஒதுக்கினா கூட நீ அவனை விட்டு போய்டாத!! இந்த அம்மா பேச்சை நீ கேட்ப தானேடா கண்ணா?” எதற்க்காக அந்த வார்த்தைகள் அப்போது அவரிடம் இருந்து வந்ததோ? அது மட்டுமே இன்பனை இத்தனை பணிந்து போக செய்திருக்கிறது.



“கேட்பேன்மா!!” என அறியா வயதில் வாக்கு கொடுத்தான் இன்பன்.



“நீ விளையாடிட்டு இரு, அம்மா உனக்கு சாப்பாடு செஞ்சு தரேன்! சாப்பிட்டுட்டு நம்ம பாட்டி வீட்டுக்கு போய்டலாம்!!” என்று வைதேகி சொன்னதை விட்டு, “நான் காணா போய்ட்டா அப்பா என்னை தேடுவாராம்மா!?” என்றான் இன்பன்.



அவன் கேட்பதன் பொருளை ஆராயாது, “ஆமா இன்பா” என்றவர் அவன் கையில் ஒரு பந்தை கொடுத்து விளையாட சொல்லிவிட்டு சமையல் வேலையில் இறங்கினார்.



வீட்டின் பின்பக்கம் பந்தை தூக்கிக்கொண்டு சென்ற இன்பன் அதை தூக்கி போட்டு பிடித்தபடி விளையாடிக்கொண்டிருக்க, விதி அதன் விளையாட்டை தொடங்கியது.



இன்பன் வேகமாய் மேலே வீசிய பந்து பறந்து சென்று விழுந்தது அந்த ஆழ்கிணற்றில்.



‘அச்சச்சோ!’ என பதறிய இன்பன், ஒரு குடத்தின் மீது ஏறி கிணற்றுக்குள் எட்டிப்பார்க்க, பந்து இருப்பதே அவனுக்கு தெரியவில்லை.



அன்னையிடம் சொல்லலாம் என சென்றவனுக்கு சட்டென தோன்றியது, ‘நம்ம காணா போய்ட்டா அப்பா தேடுவாருல?’ என!!!



ஒளிவதற்கு வேகமாய் இடம் தேடியவனுக்கு இறுதியாய் கிணறு மட்டுமே சிக்க, ‘இதுக்குள்ள ஒளிஞ்சுப்போம்!’ என சிறுபிள்ளைத்தனமாய் முடிவெடுத்தான்.



தட்டுதடுமாறி மெதுமெதுவாய் ஏறி உள்பக்க கல்லில் அவன் கால் வைக்கும்வரை வைதேகி அங்கு வராது போனது தான் விதியின் சதி. கரடு முரடான அந்த பாறைகள் மேடு பள்ளமாய் இருக்க, பொறுமையாய் சுவரை பிடித்துக்கொண்டே நடந்தவனுக்கு நான்கடிக்கு மேல் பயம் அப்பிக்கொண்டது. திரும்பி மேலே ஏற முயன்றால், சுவரை பிடித்து எக்கி ஏறுமளவுக்கு திறன் இல்லாது போனதால் அங்கேயே அமர்ந்துக்கொண்டு அவன் அழ, இன்பனை தேடி வந்த வைதேகிக்கு அவன் கிணற்றுக்குள் இருந்து அழைப்பது தெரிந்ததுமே நெஞ்சுக்குழி நடுங்கிப்போனது.



ஒரே ஓட்டத்தில் வந்தவர், உள்ளே எட்டிப்பார்க்க, எந்நேரமும் உள்ளே விழுவதற்கு ஏதுவாய் பாறையின் நுனியில் காலை வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பனை கண்டதும், சிறுதும் யோசிக்காது கிணற்றின் உள்ளே இறங்கிவிட்டார் வைதேகி.



இன்பனை ஒரே கையால் தூக்கி கிணற்றின் வெளியே நிறுத்தியவர், தானும் ஏறலாம் என ஒரு காலை தூக்கியபோது அவர் மறுக்காலை எதிர்ப்பாரா தருணத்தில் வாரிவிட்டது பச்சைப்பாசி!



தடுமாறி பின்னோக்கி சாய்ந்தவர் பிடிமானம் ஏதுமின்றி கீழே விழ அந்த பலநூறு அடி கிணறு அவரை விழுங்க தயாராய் காத்திருந்தது. கீழ விழ போனவர் தண்ணீரை அடையும் முன், ஒழுங்கற்று இருந்த ஒரு கற்ப்பாறையை எட்டிவிட, அது பலமாய் பதம் பார்த்தது வைதேகியின் பின்னந்தலையை...!!!



கிணற்றின் வெளியே நின்று ‘அம்மா... அம்மா’ என இன்பன் அலட்றியது சிறு குரலாய் கேட்க, தண்ணீருக்குள் கிடந்த வைதேகியின் உடலில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியது.



‘மேலேறி செல்’ என உள்ளம் பணிந்தாலும், அதை செயல்ப்படுத்த முடியாது அவரது ஐம்புலன்களும் சக்தி இழக்க, அவர் உடல் தண்ணீருக்குள் முழுதாய் மூழ்கிப்போனது. வைதேகியின் உயிர் உடலை விட்டு பிரிந்து சென்றது.



இன்பன் கதையை சொல்லிமுடிக்க, உணர்வற்று போயிருந்தாள் கோகிலா.



“எனக்கு நேரம் சரியில்லாததால தான் அம்மா இறந்துட்டாங்கன்னு எல்லாரும் சொன்னங்க! அப்பா அதை முழுசா நம்புனாரு! நான் ஒதுக்கப்பட்டேன்! என் தம்பிக்கு சின்னதுல இருந்தே ‘இன்பன் கூட சேரக்கூடாதுன்னு’ சொல்லி சொல்லி வளர்த்தாரு!

அம்மா இவங்களை விட்டு போகக்கூடாதுன்னு சொன்னது மட்டும் பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சு போச்சு எனக்கு!!!”



இன்பனின் தோள் தொட்டு ஏதோ பேச வந்தவளிடம், “போதும் போதும்ங்குற அளவுக்கு அழுதுட்டேன் கோக்கி!! இனிமே அழ ஒன்னும் இல்ல!! நேத்து திடீர்ன்னு ஏதோ நியாபகம்... அதான்!!” என்றவன், “சரி நான் இந்த கிணறை மூடி வைக்குறேன்! நீ இந்த பக்கமெல்லாம் வரக்கூடாது சரியா?” என்றான் கண்டிப்பாய்.



சம்மதமாய் அவள் தலையசைக்க, “என் அம்மா போனதுக்கு அப்புறம் எனக்கே எனக்குன்னு நீ வந்துருக்க!! நான் உண்மையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று அவள் உச்சந்தலையில் முத்தம் பதித்து நின்றான் இன்பன்!!!




-வருவான்...
Inbanin siru vayathu vaikai romba sogama iruku ka.... Inimel inba shanthosama iruppara ka
 
Top