Lovely update
Oh what a beautiful comments Narmadha ma on each character and a great tribute to our dear writer, Saran ma . God bless you both Narmadha ma, as a reader and Saran ma, as a great writer .ஹரித்திரன் காதலின் வலிமையே அவனுடைய வாழ்வில் சம்ருதிக்ஷாவை ஒன்றிணைத்து விட்டது. ஹரித்திரன் மன வலியுடன் கூடிய நாட்களைக் கடந்த போது வாசகர் எங்கள் மனமும் பாரமேரியது, இறுதியில் அவன் காதல் கைகூடியது அவ்வளவு மகிழ்ச்சியையும் கொடுத்தது.
சம்ருதிக்ஷாவும் ஹரித்திரன் போல காதலில் கொஞ்சமும் குறைவில்லாத காதலை கொண்டிருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. சம்ருதிக்ஷாவின் காதல் ஒரு படி மேலேதான், இவளுடைய வலிகள் மிக மிக அதிகம் அதே சமயம் ஹரித்திரன் மீது உயிர் காதலையும் வைத்து இவள் மனதளவில் போராடும் பொழுது என்ன சொல்ல வாசகர் கண்களில் நீர் வழிந்தது அவளுடைய வேதனையை பார்த்து இறுதியில் அனைத்தும் சுபமே.
நர்மதா அம்மா உங்களால்தான் இரு உயிர்கள் உயிர்ப்புடன் துடிக்கின்றன இல்லையேல் அன்பு உள்ளங்களின் பந்தம் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும். வாழ்வியல் தத்துவங்களை உண்மையில் செயல்படுத்தி குழந்தைகளுக்கு அழகான நந்தவனப் பாதையை பரிசளித்து மகிழ்ந்த தெய்வத்தாய் இவள் வாழ்க.
சுகன்யா நீங்க உண்மையில் கலகலப்புடன் பேசி சிரித்தாலும் உங்கள் மனதின் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது, கணவர் செய்த செயலுக்கு
நியாயம் செய்து ஹரித்திரன் வாழ்வில் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறீர்கள் லவ் யூ சோ மச் சுகா மா .
அனைத்து இன்னல்களும் முடிந்து வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி சிறகடிக்கும் ஜோடி பறவைகள் என்றும் இதே மகிழ்ச்சியுடன், புரிந்துணர்வுடன் காதலில் திளைத்து நலமுடன், வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
சரண்யா சிஸ்டர் எப்பொழுதும் போல வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் உங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.மென்மேலும் உங்களின் படைப்பாற்றல் சிறப்பாக தொடர்வதற்கு கடவுளை பிராத்திக்கிறேன்.
Aamaநிறைவான முடிவு
கடைசி வரைக்கும் அந்த தாம்பூலம் கொடுக்கும் photo எப்படி இருக்கும்னு யோசனையாவே இருக்கு.