வாழ்த்துக்கள் ?ஹாய் பிரெண்ட்ஸ்,
வந்துட்டேன் வந்துட்டேன். இன்னைக்கு ஆறுமணியை மிஸ் பண்ண முடியுமா? அதனால வந்துட்டேன்.
உருகினேனோ உறைகிறேனோ எனக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவமும், நெகிழ்ச்சியும் தந்த கதை. அத்தனைபேரும் அதுக்கு தந்த உற்சாகம் இப்பவும் நினைக்கும் போது அவ்வளோ சந்தோஷம்
அந்த சந்தோஷமும் உற்சாகமும் தான் என்னை தொடர்ந்து எழுத வைக்குது. இந்த பதிவுக்கு என்ன மாதிரியான கருத்துக்கள் வரும்ன்னு ஒன்னொன்னும் அவ்வளவு ஆவலா பார்ப்பேன்.
அப்பறம் ஏன் உங்க கதைகள்ல ஒரு குழந்தையோட நிறுத்திடறீங்கன்னு கேட்டீங்க. ஹா ஹ ஹா சத்தியமா தெரியலையே. அதுவா அப்படியே அமைஞ்சிருது அன்பூஸ்.
அதே சந்தோஷத்தோட அடுத்த கதைக்கு போவோமா?
ஆனா இந்த கதைக்கு டெய்லி யுடி இருந்தாலும் பெருசா குடுக்க முடியுமான்னு தெரியலை. ஏனா பையனுக்கான முழுபரீட்சை ரொம்ப பக்கத்துல வந்திருச்சு.
அடுத்தவாரம் ஆரம்பிக்குது. முடியற வரைக்கும் கேப் எடுக்கலாம்ன்னா மனசும் கேட்கலை. அதான் ஒரு அப்டேட்க்கு ரெண்டு லிங்க் பண்ணிட்டு இருந்ததை ஒண்ணா அதே நேரம் ரொம்ப குறைக்காம பெருசாவே குடுக்கறேன்.
அட்ஜட்ஸ் கரோ அன்பூஸ்.
ஓகே கதை பக்கம் போவோமா? இதுவும் வழக்கமான கதையா இருந்தாலும் எனக்கு தெரிந்தவிதத்தில் குடுக்கறேன்.
ஆசைகளுக்கு அளவிருக்கிறதா என்ன? அளவான ஆசைகளும், அளவில்லா எதிர்பார்ப்புகளும்ன்னு இருவேறு குணாதிசயம் கொண்ட இருவர் எப்படி சேர்ந்து வாழ்க்கையை வாழறாங்கன்னு பார்ப்போம்.
உன்னில் உருவான ஆசைகள்
செங்கதிரவன் – தாமரை
அவன் – பொண்ணுங்க மட்டும் அவங்க டேஸ்ட் எக்ஸ்படேஷன் பொருத்து மேரெஜ் பண்ணிக்கறாங்க. அப்படி ஒரு பையன் கிடைக்கனும்னு எதிர்பார்க்கறாங்க. வெல் செட்டில்ட், டீ-டோட்டலர், ஹேண்ட்சம் கை, இவ்வளோ ஹைட், வெய்ட் வேணும்னு சொல்லும் போது நான் எதிர்பார்க்கறதுல என்ன தப்பு? எனக்கு பிடிச்சா தான் கல்யாணம்.
அவள் – கல்யாணமா? நோ கமெண்ட்ஸ். மெதுவா பார்த்துக்கலாம்.
இப்போ இந்த கதையோட குட்டி டீஸர் பார்த்திருவோம்
உன்னில் உருவான ஆசைகள் - டீஸர்
பதிவு திங்கள் கிழமையில் இருந்து. அதுவரை ஒரு குட்டி ப்ரேக் எனக்கு. கொஞ்சம் வேலைகள் எல்லாம் இருக்குது. முடிச்சுட்டு வந்திடறேன்.
வழக்கம் போல உங்களோட கருத்துக்களை என்னோட பகிர்ந்துகொள்ளுங்க அன்பூக்களே.