மிகவும் அருமையான பதிவு சரண்யா???.தேவகியை விரும்பிய சங்கர் அம்மா பேச்சை கேட்டு அபியை திருமணம் செய்ய,அபியின் மரணத்துக்கு பின் தேவகியை திருமணம் செய்யும் சங்கர் குற்றவுணர்ச்சியால் தேவகியிடம் பேசாமல் தயங்கி ஒதுங்க,அதுவே தேவகியின் கோபத்துக்கு காரணமாகிறது???.
கைய,காலை கட்டியா கல்யாணம் செஞ்சாங்க,நெனச்சதை செய்ய தைரியமில்லை,போலிஸ்னு வெளியே சொல்லாதீங்க,வீரமெல்லாம் வேலையில் தான்னு தேவகி சாட்டையடியா பேசறதும், இப்படியெல்லாம் டேமேஜ் பண்ணாத அசிங்கமா இருக்குன்னு சங்கர் கெஞ்சறது பரிதாபமா
இருக்கு????.வாயா,போயான்னு மரியாதையும் போச்சே???.
வழியில்லை வாழ்க்கை கொடு தேவான்னு பத்து நாளைக்கு பின்னாடியே சுத்தி வரனுமா????.
அரைக்கிழவனா???.வாசு முன்னாடி சங்கர் சொன்னதை கேட்டு,கேம் சொல்லித்தரலைங்கறா, சண்டைய போய் விலக்கி விடுவோம்னு சொல்றா இவளுக்கு எப்படி புரிய வைக்க????.
கல்யாணத்தன்று ஷ்ரவனை தான் கட்டுவேன்னு பிடிவாதம் பிடித்து கட்டியவளிடம் என்ன பாடுபட போறானா என நினைக்க???,வாசுவின் வெகுளித்தனமும்,அடங்காத வாயை அடக்கி, மற்றவர்கள் முன் ரகசியத்தை காக்க சொல்லி கொடுப்பதிலேயே ஷ்ரவன் போராடும் நிலை????
திருமணம் வேண்டாம் என்ற ஷ்ரவன், இது தான் வாழ்க்கை என புரிந்து அதற்கு ஏற்றார் போல வாழ்க்கையை சிறப்பாக மாற்றி கொண்டு,மனைவி,குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை???.
ஆதவுக்கு தம்பியும் வந்தாச்சு☺☺☺.அபி வளர்ந்த விதம் என அவளை மன்னித்தாலும்,அனுசுயா அபியின் மனநிலையை மறைத்து திருமணம் செய்தது,அபிக்கு சொன்னதை போல ஆதவ்விடம் சொல்லித்தருவதை மன்னிக்க முடியாது???.
அருமையான கதை.எளிமையான நடை.நிறைவான முடிவு.வாழ்த்துக்கள் சரண்யா?????.