அவன் ரொம்ம்ம்ம்ம்ப சரியோ..? அவன் தான் முதலில் வம்பு பண்றான் பானும்மா...
... ஆனாலும் நீங்க இப்படி அமரபுஜங்கனுக்கு ஜப்போர்ட் பண்ணுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை பானும்மா
ஹா ஹா ஹா
உங்களுக்கு முன்னாடி இருக்கும் கமெண்ட்ஸ்ஸை கொஞ்சம் பாருங்க, சுகந்தி மேடம்
தங்க ஊசின்னா கண்ணில் குத்திக்க முடியுமா, சுகந்தி டியர்?
ஏம்மா அவன் எங்கேம்மா முதலில் வம்பு பண்ணினான்?
அவன் பாட்டுக்கு கார் சாவியைக் கொடுத்துட்டு போகத்தானே வந்தான்
வண்டி சர்வீஸுக்கு போயிருக்கிறது தெரியாமல் இவள்தானே இல்லாத நொரநாட்டியம் பேசினாள்
இன்னும் கட்டி முடிக்காத வீட்டுக்கே இவள் இவ்வளவு அலப்பறை செஞ்சால் கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் அவன் பேச மாட்டானா?
சரி
அப்படித்தான் அவன் என்ன தப்பாக சொல்லிட்டான்?
வீட்டுக்கு முன்னாடி சாணிக்கறை இருந்தால் அசிங்கமா இருக்காதா?
அதைத்தானே சுத்தமா வைச்சுக்க சொன்னான்?
யாராயிருந்தாலும் நியாயமா நடக்கணுமில்லே
ரொட்டிக்கடைக்காரன்னு இளக்காரம் பேசுறாளே
அதே ரொட்டிக்கடைக்காரனைத்தானே நம்ம குறிஞ்சியக்கா கல்யாணம் பண்ணப் போறாள்
எந்த வீட்டை இளக்காரமா பேசுறாளோ அதே வீட்டில்தான் காலம் முழுவதும் வாழப் போறாள்
இப்போ முறைக்கிற அவனும் அப்புறமா அவளுக்கு ஸலாம் போட்டு கால் பிடிச்சு விடத்தான் போறான்
அதை நாமும் வேடிக்கை பார்க்கத்தான் போறோம், சுகந்தி டியர்