கடவுளே என்னால இன்னைக்கு இந்த எபி படிக்க முடியல கண்ணெல்லாம் கலங்கிடுச்சு , எந்த ஒரு மனைவியும் நியாயமாக ஆசைப்படும் விடயம் தானே!! நனியின் ஆசையும் தாய்மை அந்த உணர்வை தன் உயிரானவனுக்கு சொல்ல தானே அவளுக்கும் ஏக்கம் இருக்கும் ஆரி இதை உன்கிட்ட எதிர்பாரக்கலை.
ஆரி எதற்காக இந்த அளவுக்கு உனக்கு கோவம் வருது, நீ சாதிக்க நினைப்பது, உனக்கென்ற பெயரை எப்போதும் பிசகாமல் ஒரே நிலையில் வைத்திருக்க அயராது உழைப்பது எல்லாம் சரி தான் ஆனால் நீ உண்மையில் இதை எல்லாம் யாருக்காக சேர்த்து வைக்க போகிறாய், எதற்காக இவ்வளவு செய்கிறாயோ அந்த சந்தோசம் கூட பின்னாளில் உனக்கு இனிக்க போவது இல்லை
ஆரி நனி எவ்வளவு பொறுமை, உன்னுடைய குணத்திற்கு ஏற்ற குணவதி, உன்னுடைய அனைத்திலும் உன் கௌரவம் காக்க பொறுமையாக உன்னை புரிந்து, அறிந்து, நெகிழ்ந்து நடக்கும் அற்புதமான மலர் போன்ற மென்மையானவள், அவள் அனாவசியமாக ஏன் அழைக்க போகிறாள் என்று கூட புரிந்து கொள்ள முடியலயா உனக்கு நீ எல்லாம் என்ன இயக்குனர்
ஆரி நனிக்கான உன்னோட பாசம், அவள் கேட்காமலே அவள் மனதை புரிந்து அவள் அன்னை இல்லம் அழைத்து சென்றது, நிதிஷை வெளுத்தது, நரசிம்மரிடம் உன்னோட கண்டிப்பான அக்கறை எல்லாம் நெகிழ்ச்சியாக தான் இருந்தது ஆனால் அது எல்லாம் உன்னோட கோவத்தால் நனி மனதை இப்படி காயபடுத்தி ஒன்னும் இல்லாமல் செய்துவிட்டாய் .