Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - epilogue

Advertisement

ஹாய் ஹில்மா

நாணலாய் நிமிர்ந்தவள்
நயனத்தின் மொழியிலே
தாய்மையின் பொழிவுகள்
ஞாலத்தின் தன்னிறைவு!

நாணலாய் நிமிர்ந்தவள்
நாணத்தின் மொழியிலே
காதலின் பொழிவுகள்
காவியத்தின் தன்னிறைவு!

நாணலாய் நிமிர்ந்தவள்
நியாத்தின் மொழியிலே
அன்பின் பொழிவுகள்
அகிலத்தின் தன்னிறைவு!

நாணல்கள் பேசும்
பண்பின் பரிபாஷைகள்
பகுமான வாழ்வில்
தெவிட்டாத தேனமுது!

வாழ்த்துக்கள் மா, நன்றி
Woow😍❤️
sema.. Rombha nandri ma.. 💙
 
Last edited:
முதலில் கதையை நிறைவாகவும் அழகாகவும் முடித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்❤️

மறுமணம் பற்றிய கதை, இந்தக் கருவில் பல கதைகள் வந்தாலும் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை உங்கள் பாணியில் சலிக்காமல் கொண்டு சென்றது அருமை.
இதில் நான் பார்த்து வியந்த கதாப்பாத்திரம் சம்யுக்தா.

அவளது பக்குவமும், குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பாங்கும், நந்தன் மேல் வெச்ச காதல் யுவி குட்டி மேல வெச்ச அன்புன்னு எல்லாம் அவ்வளவு அழகு!

அடுத்து நந்தன். அவன் பல்லவி பத்தி சொல்ற இடங்கள் ரொம்ப பிடிச்சி இருந்தது. யாராலுமே மறக்க முடியாதுல்ல அவங்க முதல் நட்பை, காதலை,நமக்கு இந்த வாழ்க்கையை ரசிக்க காத்துக்கொடுத்தவங்கல அது தான் அவன் பல்லவி!அதை சம்மு சரியா புரிஞ்சிக்கிட்டது. அவ நந்தன் மேல வெச்ச அன்பை காட்டுது.

"எனக்கு முன்ன செத்துகித்து போயிராதடி" நந்தன் சொல்றது சம்மு மேல அவன் வெச்ச காதலோட ஆழத்தை உணர்த்துது.

கதையில் நிறைய அழகான காட்சி அமைப்புக்கள்,வசனங்கள் இருக்கு!

கிருஷ்ணமூர்த்தி, வித்யா, சம்முவோட அம்மா நல்ல பாத்திர அமைப்பு.

சாந்தனாவ முதல்ல பிடிக்காம போனாலும் அந்த மாதிரி குணம் உள்ளவங்க இருக்காங்க.. கடைசிலயாவது சம்முவ புரிஞ்சிக்கிட்டாளே.

எபிலாக் நிறைவு❤️அழகான மென்மையான குடும்பகதை. அடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி 💙💙
 
ஆரம்பம் முதல் இறுதி வரை நீங்க கொடுத்த ஆதரவு அளப்பரியது.
ரொம்ப நன்றி மா 😍
அடுத்த ஸ்டோரி எப்ப ஆரம்பிக்க போறீங்க மேடம்@Hilma Thawoos. ♥️♥️♥️♥️💗💗💗💗💗
 
Top