பிரபஞ்சனைப் பொறுத்தவரை அன்பு எல்லாத் தவறுகளையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும். தங்கள் இணையின் கிறுக்குத்தனங்களை, குழந்தை மனதை, அதன் பின்னிருக்கும் மென்மையை, வன்மையை என அனைத்தையும் அணைத்து ஆற்றுப்படுத்தும். அயர்ந்து விழும்போது தூக்கி நிறுத்தும். புரிதல் இல்லாது விலகும்போது இறுக்கி அணைத்து தலைக் கோதி மென்மையான செய்கைகளால் தங்களை உணர்த்தும். தன்னிருப்பை அவர்களிடம் உறுதி செய்யும். கடைசி வரை விட மாட்டேன் என்ற நம்பிக்கையைக் கொடுத்து உறவானவர்களை ஆகர்ஷிக்கும், அன்பு செய்யும், நேசங்கள் வேயும் பிரபாவின் மீதான உமையாளின் அன்பும் பரஸ்பர மரியாதையும் புரிதலும்தான் அவர்களுடைய வாழ்க்கையின் மந்திரம்