அந்த ஃபைனல் சந்தேகம் அல்டிமேட்... ஆனாலும் அவ்வளவு ... ஒரே நாளிலா கடைச்சாப்பாடு ஒத்துக்காமல் போகும்...கொழுக்கட்டை விருந்து super.
ஆனாலும் சௌந்தருக்கு இவ்வளவு வெறப்பு ஆகாது.
பொண்ணை பெத்து உசுரா வளர்த்து இவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சா, இவங்க கோவத்தை அடக்க முடியாமல் அடிப்பாங்களா? இவன் அடிச்சதால அவ பேசினது இல்லைன்னு ஆகிடுமா?
அந்த கோவத்துல ஏற்கனவே இருக்குற கோவமும் சேர்ந்து வீரனார் நாலு வார்த்தை பேச தான் செய்வாரு. தப்பு செஞ்ச மாப்பிள்ளை வாயை மூடி கேட்டுக்க தான் வேணும். மத்தவங்க எல்லாரும் இவனை மதிச்சு தானே பேசறாங்க. அப்புறம் என்ன?
மீரா அப்பாக்கும் கணவனுக்கும் இடையே பேசி சரியான விதத்தில் பிரச்சனைகளை handle செய்வது அருமை.
விருமா என்னது இப்படி ஒரே நாளில் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கற நிலைமைக்கு போயிட்டீங்க? சுய அலசல் உங்களை உங்ககிட்டயே தரமிழக்க வெச்சுருச்சோ?
இல்லை கடை சாப்பாடு ஒத்துக்கலையா?![]()