AshrafHameedaT
Administrator
நாச்சி வீடு வரவுமே ராஜராஜனிடம் அங்கையை பற்றி தான் கேட்டார். ஏனென்றால் பின்னர் அங்கை மருத்துவமனை கூட வரவில்லை. நீ வீட்டிற்கு கிளம்பு என்று பாட்டி சொல்லிவிட்ட கோபம் அவளின் மனதினில் இருக்க கூடவே என்னவோ இவர்கள் எல்லோரும் அவளால் தான் பாட்டி உடம்பு கெட்டது போல பேசியிருக்க அவள் வரவில்லை
-----------------------------------------------------------------------------
காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்று வரும் போது காரியம் தானே பெரிது, அதனால் மனோவிடம் பகை விட்டு சகஜமாய் பேச ஆரம்பித்து இருந்தான்.
மனோ கேட்ட விதம் கேட்ட விவரங்கள் அவனுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்து இருந்தது.
------------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களாய் மனோ நிறைய விவரங்கள் கேட்க எல்லாவற்றையும் சேகரித்துக் கொடுத்தான். என்ன செய்யலாம் என்று மனோ கேட்டதற்கும் இப்படி செய்யலாம் என்று யோசனைகள் கொடுத்தான். என்னவோ அதுவே அவனுக்கு மலையை புரட்டி விட்ட உணர்வு. இவன் சொன்னது போல மனோ செய்து விட்டானானால் அவர்களின் நிலத்திற்கு நீர் வரும் படி செய்து விடலாம்.
------------------------------------
மூணு நாளா நான் தான் உன் பேத்திக்கு வாட்ச் மேன் வேலை பார்த்தேன் என்றான்
பின்ன உன் பேத்தி வீட்டுக்கு உள்ள நான் வெளில அப்போ அதுக்கு பேர் என்ன
என்ன அப்படியா செஞ்சா? என்ற நாச்சியிடம் கோபம் பொங்கிய போதும் அதனை ராஜராஜனிடம் காண்பிக்கவில்லை
-------------------------------------------------------------------------------------
“இன்னைக்கு ராத்திரி வாட்ச் வுமன் அனுப்பலாம்னு இருக்கேன்... அதை பத்தி நீ என்ன நினைக்கற?” என்று இலகுவாய் கேட்ட படி அவரின் அருகில் அமர்ந்தான்.
“அது யாருடா எனக்கு தெரியாத வாட்ச் வுமன்?”
“எங்கம்மா தான் வேற யாரு... இந்த உலகத்துலயே நான் என்ன சொன்னாலும் கேட்கற ஒரே ஜீவன் எங்கம்மா தான்”
“ம்ம்... அப்போ அவ பெரிய ஏமாளின்னு சொல்லு”
“பார்த்தியா கிழவி என்னையே கலாய்க்கற நீ!!!”
----------------------------------------
இந்த மூன்று நாட்களும் அவனுக்கு இரவினில் அங்கே தான் ஜாகை, வெளியில் இருந்த கட்டிலில் படுத்துக் கொண்டான்.
இருவர் பார்வைகளும் செயல்களும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
இவன் ரூமில் அமர்ந்திருக்க அங்கே வெளியே எதோ சலசலப்பு போல இருக்க
என்ன என்று அவன் எழும் போதே தில்லை வேகமாய் வந்தவர், ராஜா அங்கையும் அவ அப்பாவும் வந்திருக்காங்க என்றார்
என்ன என்று வியந்தவன் வேகமாய் வெளியில் வந்தான்
----------------------------------------------------
மூன்று நாட்களாய் ராஜராஜன் அவருக்கு மூளைச் சலவை செய்து கொண்டிருந்தான்.
விரோதத்தை வளர்க்க வேண்டாம் முடிக்க சொல்லி!
இவன் இங்கே மூளைச் சலவை செய்ய அதை தான் அன்பழகனும் மகளுக்கு செய்து கொண்டிருந்தார், ராஜராஜனோடு சேர்ந்து வாழ சொல்லி, அதன் விளைவே அவரின் விஜயம்
எண்ணமும் ஆக்கமும்
மல்லிகா மணிவண்ணன்
-----------------------------------------------------------------------------
காரியம் பெரிதா வீரியம் பெரிதா என்று வரும் போது காரியம் தானே பெரிது, அதனால் மனோவிடம் பகை விட்டு சகஜமாய் பேச ஆரம்பித்து இருந்தான்.
மனோ கேட்ட விதம் கேட்ட விவரங்கள் அவனுக்குள் ஒரு நம்பிக்கையை விதைத்து இருந்தது.
------------------------------------------------------------------------------------------------
இரண்டு நாட்களாய் மனோ நிறைய விவரங்கள் கேட்க எல்லாவற்றையும் சேகரித்துக் கொடுத்தான். என்ன செய்யலாம் என்று மனோ கேட்டதற்கும் இப்படி செய்யலாம் என்று யோசனைகள் கொடுத்தான். என்னவோ அதுவே அவனுக்கு மலையை புரட்டி விட்ட உணர்வு. இவன் சொன்னது போல மனோ செய்து விட்டானானால் அவர்களின் நிலத்திற்கு நீர் வரும் படி செய்து விடலாம்.
------------------------------------
மூணு நாளா நான் தான் உன் பேத்திக்கு வாட்ச் மேன் வேலை பார்த்தேன் என்றான்
பின்ன உன் பேத்தி வீட்டுக்கு உள்ள நான் வெளில அப்போ அதுக்கு பேர் என்ன
என்ன அப்படியா செஞ்சா? என்ற நாச்சியிடம் கோபம் பொங்கிய போதும் அதனை ராஜராஜனிடம் காண்பிக்கவில்லை
-------------------------------------------------------------------------------------
“இன்னைக்கு ராத்திரி வாட்ச் வுமன் அனுப்பலாம்னு இருக்கேன்... அதை பத்தி நீ என்ன நினைக்கற?” என்று இலகுவாய் கேட்ட படி அவரின் அருகில் அமர்ந்தான்.
“அது யாருடா எனக்கு தெரியாத வாட்ச் வுமன்?”
“எங்கம்மா தான் வேற யாரு... இந்த உலகத்துலயே நான் என்ன சொன்னாலும் கேட்கற ஒரே ஜீவன் எங்கம்மா தான்”
“ம்ம்... அப்போ அவ பெரிய ஏமாளின்னு சொல்லு”
“பார்த்தியா கிழவி என்னையே கலாய்க்கற நீ!!!”
----------------------------------------
இந்த மூன்று நாட்களும் அவனுக்கு இரவினில் அங்கே தான் ஜாகை, வெளியில் இருந்த கட்டிலில் படுத்துக் கொண்டான்.
இருவர் பார்வைகளும் செயல்களும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் இருக்கும்.
----------------------------------------------------------------------------------
இவன் ரூமில் அமர்ந்திருக்க அங்கே வெளியே எதோ சலசலப்பு போல இருக்க
என்ன என்று அவன் எழும் போதே தில்லை வேகமாய் வந்தவர், ராஜா அங்கையும் அவ அப்பாவும் வந்திருக்காங்க என்றார்
என்ன என்று வியந்தவன் வேகமாய் வெளியில் வந்தான்
----------------------------------------------------
மூன்று நாட்களாய் ராஜராஜன் அவருக்கு மூளைச் சலவை செய்து கொண்டிருந்தான்.
விரோதத்தை வளர்க்க வேண்டாம் முடிக்க சொல்லி!
இவன் இங்கே மூளைச் சலவை செய்ய அதை தான் அன்பழகனும் மகளுக்கு செய்து கொண்டிருந்தார், ராஜராஜனோடு சேர்ந்து வாழ சொல்லி, அதன் விளைவே அவரின் விஜயம்
எண்ணமும் ஆக்கமும்
மல்லிகா மணிவண்ணன்