கரிசல் 11:
சில வருடங்களுக்கு முன்பு....
எந்த விதமான மின்சாதன வசதிகளும் அதிகம் இல்லை அந்த கிராமத்தில். ஒரு வீட்டில் மட்டும் டெலிபோன் வசதியிருந்தது.வீட்டிற்கு வீடு தொலைகாட்சி பெட்டி இல்லை.பஞ்சாயத்து அறையில் பொதுவில் ஒரு டிவி இருந்தது.
வீட்டிற்கு இரண்டு பசு மாடுகள் கட்டாயமாக வைத்திருந்தனர்.அவர்களின் தேவைக்கு வெளி ஆட்கள் யாரையும் நம்பியிருக்கவில்லை.
விவசாயம் நன்கு செழித்து இருந்தது அந்த ஊரில்.சில குடும்ப பகைகள்,சண்டைகள்,சமாதானங்கள்...என்று வாழ்வியலின் எதார்த்தம் அங்கே இருந்தது.
போலி நடிப்புகளும்,போலி முகங்களும் அப்பொழுதும் இருக்கத்தான் செய்தது.இன்றைய நவீனத்திற்கு தகுந்தார் போல் யோசிக்கும் மூளை..அன்றைய அறிவு வளர்ச்சிக்கு தகுந்தார் போல் யோசித்தது அவ்வளவே.
இன்று சீரியல் பார்த்து...அடுத்த குடும்பத்தை பிரிப்பது,பழி உணர்ச்சி போன்ற குணங்கள் வந்தது என்றால்...சில வருடங்களுக்கு முன்பு...அக்கம் பக்கம் புறணி பேசி...வம்பு வளர்த்து...இதே குணங்களும் இருக்கத்தான் செய்தது.
மொத்தத்தில் பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள் வாழும் ஊராகத்தான் அது இருந்தது.
ஊரைச் சுற்றி பச்சைப் போர்வை போர்த்தியதைப் போன்ற ஒரு செழிப்பு. பார்க்க பார்க்க தெவிட்டாத ஒரு செழிப்பு.கிணற்று நீர் கிடை போக...ஆற்று நீர் குறையாமல்..மாசு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த காலம்.
இப்பொழுது நினைத்தாலும்...நமக்கு கிடைக்கவே கிடைக்காத அந்த சொர்க்கம்.இன்னொரு முறை உருவாக்கவும் முடியாது.இன்னொரு முறை நம்மால் அளிக்கவும் முடியாது.இருந்தால் தானே அழிப்பதற்கு.மொத்தமாக அழித்து விட்டோமே..!
“ஏய் வண்ண மதி..! சீக்கிரம் வாடி...!” என்ற கங்காவின் குரலில்... சாப்பிட்டுக் கொண்டிருந்த வண்ண மதி...மீதம் இருந்த சோற்றை வாயிக்குள் அள்ளி லபக் லபக்கென்று போட...
“மெதுவா சாப்பிடு மதி..! விக்கிக்க போகுது..!” என்று பார்வது கடிந்து சொல்ல...
“ம்மா...பள்ளிக் கூடத்துக்கு நேரம் ஆகிடுச்சு...! பெல் அடிச்சுட்டா அந்த ஹெட்மாஸ்ட்டரு உள்ள விடவே மாட்டாரும்மா..!” என்றபடி கையைக் கழுவி விட்டு..தட்டையும் கழுவி வைத்து விட்டு கிளம்பினாள். (அப்போதெல்லாம் சாப்பிட்ட தட்டை கழுவி வைக்கவில்லை என்றால் அடின்னாலும் அடி அப்படி விழுகும்.).
“சரி..!சரி..! இந்தா ரெண்டு ரூபா..சாயங்காலமா நடக்க முடியலைன்னா டவுன் பஸ்ல வந்துடு மதி..” என்று பார்வதி இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்ட...அதைப் பார்த்த மதிக்கு கடவுளைப் பார்த்ததைப் போன்று இருந்தது.
“சரிம்மா..!” என்று பவ்யமாக அதை வாங்கியவள்...அந்த இரண்டு ரூபாய்க்கு..மனதிற்குள் இரண்டாயிரம் கணக்கு போட்டாள்.
“சீக்கிரம் வாடி வண்ண மதி...” என்று கங்கா எரிச்சல் பட...
“வந்துட்டேன்டி..! வாங்கடி போகலாம்..!” என்றபடி நடக்க..அவர்களுடன் வந்த செல்வி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்.
“என்னடி செல்வி..! மூஞ்சி எல்லாம் தொங்கிப் போயிருக்கு..உங்கம்மா அடிச்சு புடுச்சா..!” என்றாள் மதி.
“அதெல்லாம் அடிக்கலைடி...நான் வாங்கித் தின்ன காசு கேட்டேன்...! எங்கம்மா இல்லைன்னு சொல்லிடுச்சு..!” என்றாள் பாவமாக.செல்வியின் குடும்ப கஷ்ட்டம் மதிக்கு நன்றாகத் தெரியும்.
“விடு செல்வி..! எங்கம்மா சாயங்காலம் பஸ்ல வர சொல்லி..ரெண்டு ரூபா குடுத்தாங்க...! அதை வச்சு ஜமாய்ச்சுடுவோம்...!” என்றாள் மதி.(எல்லாரும் அம்மாவை வா,போ என்று கூப்பிட்டால் மதி மட்டும் அவள் அம்மாவை வாங்க போங்க என்று மரியாதையாகத் தான் அழைப்பாள்.அது பார்வதியின் போதனை.)
“சூப்பரு..! அப்ப காசு மிட்டாயி வாங்குவோம்..எப்படியும் அதுக்குள்ள பத்து காசாவது இருக்கும்ல..” என்றாள் செல்வி.
“அவ்வளவு தான...!விடு..! ரெண்டு காசு மிட்டாயி வாங்கித் தரேன்..!” என்று தோழியை உற்சாகப் படுத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் நடுவில் இருந்தது அந்த அரசு உயர்நிலைப் பள்ளி. இவர்கள் ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.பள்ளி இப்போது தான் திறந்திருப்பதால்..பஸ்பாஸ் வர எப்படியும் ஒரு மாதமாவது ஆகும்.அதுவரை இவர்களுக்கு நடராஜா சர்வீஸ் தான்.
மதியின் அம்மா...போக வர நன்கு ரூபாய் டிக்கெட் என்றாலும் அதைக் கொடுத்து டவுன் பஸில் தான் வர சொல்லுவார்.ஆனால் நேரத்திற்கு தான் அந்த பஸ் வரும் என்பதால்..பெரும்பாலும் தோழிகளுடன் நடந்தே சென்று விடுவாள் மதி.கேட்டால் பஸ்சு போய்டுச்சு என்று சொல்லி சமாளிப்பாள்.
அந்த வருடம் அவர்கள் பத்தாம் வகுப்பு என்பதால்...அவர்களுக்கு மட்டும் பாவாடை சட்டை இல்லாமல் சுடிதார் கொடுத்திருந்தனர்.
சிகப்பும்,வெள்ளையும் கலந்த சுடிதாரில்...இரட்டைப் பின்னலுடன்...அவள் பின்னால் பேக்கைப் போட்டு நடந்து கொண்டிருக்க...அவளையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் செல்வி.
“என்னடி செல்வி..? என்னையவே பார்த்துட்டு வர..? என்ன விஷயம்..?” என்றாள் மதி.
“இல்லை..உங்கம்மா உனக்கு எம்புட்டு நல்லா தலை சீவி விட்ருக்கு...உன் ஜடையைப் பார்த்ததாலே அழகா இருக்கு வண்ண மதி..எம்புட்டு நீளம் உனக்கு முடி...இந்த பேக் கூட அழகா இருக்குடி..” என்று புகழ்ந்து கொண்டே வந்தாள் செல்வி.
மதியின் வீடும் செழிப்பானது அல்ல.ஆனால் செல்வியின் குடும்பத்தை ஒப்பிடும் போது கொஞ்சம் செழிப்பு தான்.பார்வதியிடம் ஒரு குணம் இருந்தது..எது எப்படி இருந்தாலும்..தன் மகள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.அதற்காக அவளுக்கு தேவையான அனைத்தையும் முடிந்த அளவு சிறப்பாகவே செய்து கொடுப்பார்.
அம்மாவின் எண்ணமும்,அவரின் ஆசையும் மதிக்கு நன்றாகத் தெரியும்.அதனால் தானோ என்னவோ..அவளும் நன்றாகவே படித்தாள்.
மதியை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு பார்வதிக்கு.ஆனால் ஊரின் சூழ்நிலையும்,குடும்ப சூழ்நிலையும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
அரசுப்பள்ளியில் கட்டணம் இல்லை என்பதால்..முடிந்த அளவு அவளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களை தரமானதாகவே வாங்கிக் கொடுப்பார்.
மற்ற பிள்ளைகள் பேக் என்ற ஒன்றை நினைத்து பார்க்க முடியாமல் இருக்க..பார்வதி அவளுக்கு ஆசையாக அதை வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார்.
மற்ற பிள்ளைகள் சாதாரண செருப்பில் நடந்தால்..மதியின் செருப்பு பார்வைக்கும் நன்றாக இருக்கும்,தரமானதாகவும் இருக்கும்.அதற்கு ஏற்றார் போன்று அவள் அந்த ஊரில் உள்ள மத்த பிள்ளைகளைக் காட்டிலும் கலர் அதிகமாகவும் இருந்தாள்.
கருப்பு,வெள்ளை என்பது இப்போதைய காலகட்டத்தில் சாதராணமாக இருக்கலாம்.ஆனால் அப்போது அது மிகவும் முக்கியம்.வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்தை கூட அப்போது ஆதரித்தார்கள் என்று சொல்லலாம்.
பள்ளியிலும் எந்தவொரு கலைநிகழ்ச்சியாக இருந்தாலும் வெள்ளையாக இருக்கும் பிள்ளைகளுக்கே முன்னுரிமை.வெள்ளை அழகு என்பதை மனதில் பதிய வைத்திருந்தனர்.ஆனால் அதையும் தாண்டி அதை குதர்க்கமாக எடுத்துக் கொள்ளும் சில பெண்களும் அந்த ஊரில் இருந்தார்கள்.
அதாவது..வெள்ளையாக இருந்தால் திமிர் இருக்கும்,அடங்காது,யார் பேச்சையும் கேட்காது.. போன்ற எண்ணங்கள்.ஆண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் பெருமையாக பேசிய அந்த ஊர்..பெண் பிள்ளைகளை மேனா மினுக்கி(அதிக மேக்கப் போடுவதால் வெள்ளையாக இருக்கிறார்கள் என்று) என்றே சொல்லியது.அவர்களின் வாயில் மதியும் சிக்கிக் கொண்டாள் என்றாள் அது மிகையில்லை.
சில வருடங்களுக்கு முன்பு....
எந்த விதமான மின்சாதன வசதிகளும் அதிகம் இல்லை அந்த கிராமத்தில். ஒரு வீட்டில் மட்டும் டெலிபோன் வசதியிருந்தது.வீட்டிற்கு வீடு தொலைகாட்சி பெட்டி இல்லை.பஞ்சாயத்து அறையில் பொதுவில் ஒரு டிவி இருந்தது.
வீட்டிற்கு இரண்டு பசு மாடுகள் கட்டாயமாக வைத்திருந்தனர்.அவர்களின் தேவைக்கு வெளி ஆட்கள் யாரையும் நம்பியிருக்கவில்லை.
விவசாயம் நன்கு செழித்து இருந்தது அந்த ஊரில்.சில குடும்ப பகைகள்,சண்டைகள்,சமாதானங்கள்...என்று வாழ்வியலின் எதார்த்தம் அங்கே இருந்தது.
போலி நடிப்புகளும்,போலி முகங்களும் அப்பொழுதும் இருக்கத்தான் செய்தது.இன்றைய நவீனத்திற்கு தகுந்தார் போல் யோசிக்கும் மூளை..அன்றைய அறிவு வளர்ச்சிக்கு தகுந்தார் போல் யோசித்தது அவ்வளவே.
இன்று சீரியல் பார்த்து...அடுத்த குடும்பத்தை பிரிப்பது,பழி உணர்ச்சி போன்ற குணங்கள் வந்தது என்றால்...சில வருடங்களுக்கு முன்பு...அக்கம் பக்கம் புறணி பேசி...வம்பு வளர்த்து...இதே குணங்களும் இருக்கத்தான் செய்தது.
மொத்தத்தில் பல குணாதிசயங்களைக் கொண்டவர்கள் வாழும் ஊராகத்தான் அது இருந்தது.
ஊரைச் சுற்றி பச்சைப் போர்வை போர்த்தியதைப் போன்ற ஒரு செழிப்பு. பார்க்க பார்க்க தெவிட்டாத ஒரு செழிப்பு.கிணற்று நீர் கிடை போக...ஆற்று நீர் குறையாமல்..மாசு இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த காலம்.
இப்பொழுது நினைத்தாலும்...நமக்கு கிடைக்கவே கிடைக்காத அந்த சொர்க்கம்.இன்னொரு முறை உருவாக்கவும் முடியாது.இன்னொரு முறை நம்மால் அளிக்கவும் முடியாது.இருந்தால் தானே அழிப்பதற்கு.மொத்தமாக அழித்து விட்டோமே..!
“ஏய் வண்ண மதி..! சீக்கிரம் வாடி...!” என்ற கங்காவின் குரலில்... சாப்பிட்டுக் கொண்டிருந்த வண்ண மதி...மீதம் இருந்த சோற்றை வாயிக்குள் அள்ளி லபக் லபக்கென்று போட...
“மெதுவா சாப்பிடு மதி..! விக்கிக்க போகுது..!” என்று பார்வது கடிந்து சொல்ல...
“ம்மா...பள்ளிக் கூடத்துக்கு நேரம் ஆகிடுச்சு...! பெல் அடிச்சுட்டா அந்த ஹெட்மாஸ்ட்டரு உள்ள விடவே மாட்டாரும்மா..!” என்றபடி கையைக் கழுவி விட்டு..தட்டையும் கழுவி வைத்து விட்டு கிளம்பினாள். (அப்போதெல்லாம் சாப்பிட்ட தட்டை கழுவி வைக்கவில்லை என்றால் அடின்னாலும் அடி அப்படி விழுகும்.).
“சரி..!சரி..! இந்தா ரெண்டு ரூபா..சாயங்காலமா நடக்க முடியலைன்னா டவுன் பஸ்ல வந்துடு மதி..” என்று பார்வதி இரண்டு ரூபாய் நாணயத்தை நீட்ட...அதைப் பார்த்த மதிக்கு கடவுளைப் பார்த்ததைப் போன்று இருந்தது.
“சரிம்மா..!” என்று பவ்யமாக அதை வாங்கியவள்...அந்த இரண்டு ரூபாய்க்கு..மனதிற்குள் இரண்டாயிரம் கணக்கு போட்டாள்.
“சீக்கிரம் வாடி வண்ண மதி...” என்று கங்கா எரிச்சல் பட...
“வந்துட்டேன்டி..! வாங்கடி போகலாம்..!” என்றபடி நடக்க..அவர்களுடன் வந்த செல்வி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்.
“என்னடி செல்வி..! மூஞ்சி எல்லாம் தொங்கிப் போயிருக்கு..உங்கம்மா அடிச்சு புடுச்சா..!” என்றாள் மதி.
“அதெல்லாம் அடிக்கலைடி...நான் வாங்கித் தின்ன காசு கேட்டேன்...! எங்கம்மா இல்லைன்னு சொல்லிடுச்சு..!” என்றாள் பாவமாக.செல்வியின் குடும்ப கஷ்ட்டம் மதிக்கு நன்றாகத் தெரியும்.
“விடு செல்வி..! எங்கம்மா சாயங்காலம் பஸ்ல வர சொல்லி..ரெண்டு ரூபா குடுத்தாங்க...! அதை வச்சு ஜமாய்ச்சுடுவோம்...!” என்றாள் மதி.(எல்லாரும் அம்மாவை வா,போ என்று கூப்பிட்டால் மதி மட்டும் அவள் அம்மாவை வாங்க போங்க என்று மரியாதையாகத் தான் அழைப்பாள்.அது பார்வதியின் போதனை.)
“சூப்பரு..! அப்ப காசு மிட்டாயி வாங்குவோம்..எப்படியும் அதுக்குள்ள பத்து காசாவது இருக்கும்ல..” என்றாள் செல்வி.
“அவ்வளவு தான...!விடு..! ரெண்டு காசு மிட்டாயி வாங்கித் தரேன்..!” என்று தோழியை உற்சாகப் படுத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் நடுவில் இருந்தது அந்த அரசு உயர்நிலைப் பள்ளி. இவர்கள் ஊரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.பள்ளி இப்போது தான் திறந்திருப்பதால்..பஸ்பாஸ் வர எப்படியும் ஒரு மாதமாவது ஆகும்.அதுவரை இவர்களுக்கு நடராஜா சர்வீஸ் தான்.
மதியின் அம்மா...போக வர நன்கு ரூபாய் டிக்கெட் என்றாலும் அதைக் கொடுத்து டவுன் பஸில் தான் வர சொல்லுவார்.ஆனால் நேரத்திற்கு தான் அந்த பஸ் வரும் என்பதால்..பெரும்பாலும் தோழிகளுடன் நடந்தே சென்று விடுவாள் மதி.கேட்டால் பஸ்சு போய்டுச்சு என்று சொல்லி சமாளிப்பாள்.
அந்த வருடம் அவர்கள் பத்தாம் வகுப்பு என்பதால்...அவர்களுக்கு மட்டும் பாவாடை சட்டை இல்லாமல் சுடிதார் கொடுத்திருந்தனர்.
சிகப்பும்,வெள்ளையும் கலந்த சுடிதாரில்...இரட்டைப் பின்னலுடன்...அவள் பின்னால் பேக்கைப் போட்டு நடந்து கொண்டிருக்க...அவளையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் செல்வி.
“என்னடி செல்வி..? என்னையவே பார்த்துட்டு வர..? என்ன விஷயம்..?” என்றாள் மதி.
“இல்லை..உங்கம்மா உனக்கு எம்புட்டு நல்லா தலை சீவி விட்ருக்கு...உன் ஜடையைப் பார்த்ததாலே அழகா இருக்கு வண்ண மதி..எம்புட்டு நீளம் உனக்கு முடி...இந்த பேக் கூட அழகா இருக்குடி..” என்று புகழ்ந்து கொண்டே வந்தாள் செல்வி.
மதியின் வீடும் செழிப்பானது அல்ல.ஆனால் செல்வியின் குடும்பத்தை ஒப்பிடும் போது கொஞ்சம் செழிப்பு தான்.பார்வதியிடம் ஒரு குணம் இருந்தது..எது எப்படி இருந்தாலும்..தன் மகள் நன்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் தான்.அதற்காக அவளுக்கு தேவையான அனைத்தையும் முடிந்த அளவு சிறப்பாகவே செய்து கொடுப்பார்.
அம்மாவின் எண்ணமும்,அவரின் ஆசையும் மதிக்கு நன்றாகத் தெரியும்.அதனால் தானோ என்னவோ..அவளும் நன்றாகவே படித்தாள்.
மதியை தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு பார்வதிக்கு.ஆனால் ஊரின் சூழ்நிலையும்,குடும்ப சூழ்நிலையும் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
அரசுப்பள்ளியில் கட்டணம் இல்லை என்பதால்..முடிந்த அளவு அவளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொருட்களை தரமானதாகவே வாங்கிக் கொடுப்பார்.
மற்ற பிள்ளைகள் பேக் என்ற ஒன்றை நினைத்து பார்க்க முடியாமல் இருக்க..பார்வதி அவளுக்கு ஆசையாக அதை வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தார்.
மற்ற பிள்ளைகள் சாதாரண செருப்பில் நடந்தால்..மதியின் செருப்பு பார்வைக்கும் நன்றாக இருக்கும்,தரமானதாகவும் இருக்கும்.அதற்கு ஏற்றார் போன்று அவள் அந்த ஊரில் உள்ள மத்த பிள்ளைகளைக் காட்டிலும் கலர் அதிகமாகவும் இருந்தாள்.
கருப்பு,வெள்ளை என்பது இப்போதைய காலகட்டத்தில் சாதராணமாக இருக்கலாம்.ஆனால் அப்போது அது மிகவும் முக்கியம்.வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்தை கூட அப்போது ஆதரித்தார்கள் என்று சொல்லலாம்.
பள்ளியிலும் எந்தவொரு கலைநிகழ்ச்சியாக இருந்தாலும் வெள்ளையாக இருக்கும் பிள்ளைகளுக்கே முன்னுரிமை.வெள்ளை அழகு என்பதை மனதில் பதிய வைத்திருந்தனர்.ஆனால் அதையும் தாண்டி அதை குதர்க்கமாக எடுத்துக் கொள்ளும் சில பெண்களும் அந்த ஊரில் இருந்தார்கள்.
அதாவது..வெள்ளையாக இருந்தால் திமிர் இருக்கும்,அடங்காது,யார் பேச்சையும் கேட்காது.. போன்ற எண்ணங்கள்.ஆண் பிள்ளைகள் வெள்ளையாக இருந்தால் பெருமையாக பேசிய அந்த ஊர்..பெண் பிள்ளைகளை மேனா மினுக்கி(அதிக மேக்கப் போடுவதால் வெள்ளையாக இருக்கிறார்கள் என்று) என்றே சொல்லியது.அவர்களின் வாயில் மதியும் சிக்கிக் கொண்டாள் என்றாள் அது மிகையில்லை.