கரிசல் 12:
அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்க முற்பட....மதி லேசாக நிமிர்ந்து முகிலனைப் பார்த்தாள்.ஆனால் அவனோ கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரொம்ப படிப்பாளி தான் போல..!” என்று மனதிற்குள் எண்ணியவள்... அவனை சட்டை செய்யாது இறங்கிவிட்டாள்.
அவள் இறங்கும் வரை குனிந்திருந்தவன்...அவள் சென்றவுடன் நிமிர்ந்து ஒரு சன்ன சிரிப்பு சிரித்தான்.உண்மையில் அவனுக்கு படிக்க வேண்டியது இருந்தது.அதனால் தான் புத்தகத்தில் மூழ்கி விட்டான்.
மதி அவனைப் பார்த்ததும் அவனுக்கு தெரியும்..மனதிற்குள் ஏதோ கவுண்ட்டர் கொடுத்ததும் தெரியும்.அப்படியே அனைத்தையும் முகத்திலேயே சொல்லிவிடும் பாவனை அவளுடையது.
“சுரக்காய் சைஸ்க்கு இருந்துகிட்டு...இவளுக்கு கொஞ்சம் கொழுப்பு இருக்கு..!” என்று எண்ணியவன் மீண்டும்...தன் வேலையில் மூழ்கிப் போக...
அங்கே கங்காவோ...
“மணி அண்ணா ரொம்ப நல்லவங்க..! இல்லையா செல்வி.நமக்காக டிக்கெட்டு எல்லாம் எடுத்தாக..!” என்று பெருமையாய் சொல்ல..
“ஆமா.. கங்கா..! எம்புட்டு பெரிய படிப்பு படிக்கிறாங்க..ஆனா கொஞ்சம் கூட பந்தாவே இல்ல...எம்புட்டு நல்லவரு..” என்று புகழ்ந்து பேசிக்கொண்டிருக்க... முத்துவின் காதில் புகை வந்தது.
“இங்க நான் ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன்...! என்னைய எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதே..! நானும் உங்களுக்கு அண்ணன் முறைதான் ஆகணும்..நினைவு இருக்கா..?” என்றான் முத்து.
“அதெப்படி இருக்கும்...? நீ முதல்ல எங்க அண்ணா கூட படிச்ச..அப்பறம் எங்க அக்கா கூட படிச்ச...இப்ப என்கூட படிக்கிற...! நீ எப்படி எனக்கு அண்ணன் ஆவ..” என்று அவன் காலை வார..முத்துவின் முகம் தொங்கிப் போனது.
முத்துவிற்கு படிப்புதான் ஏறவில்லையே ஒழிய...உடல் உழைப்பில் அவனை மிஞ்ச முடியாது.அவனுக்கு அப்பா இல்லை.அம்மா மட்டுமே.அம்மாவும் கொஞ்சம் செல்லம் கொடுக்க..படிப்பு என்றாலே வேப்பங்காயாய் கசந்தது.
“நீ கவலைப் படாத முத்து மாமா...! உனக்கு விட்டவங்க தான் மத்த எல்லாரும் சரியா..?” என்றாள் மதி..அவனை சமாதானம் செய்யும் பொருட்டு.முத்து மதிக்கு மாமா முறை தான் வேண்டும்.அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்றாள் மட்டும் அவன் மாமா.மற்ற நேரங்களில் அவன் முத்துவாக மாறிவிடுவான் அவளுக்கு.
“மதின்னா மதி தான்..” என்று முத்து சந்தோஷப்பட...
“ரொம்ப சந்தோஷப்படாத...!சயின்ஸ்ல வீட்டுப்பாடம் செஞ்சியா..?” என்று செல்வி கேட்க..
“அதெல்லாம் ஒழுங்கா செஞ்சிருந்தா நான் எப்பவோ பத்தாவது பாஸ் பண்ணியிருப்பேன்...” என்றான்.
“நீ வேண்ணா பாரு..! இந்த வருஷமும் நீ தேற மாட்ட..!” என்று கங்கா சொல்ல...அவளை அடிக்கவே சென்று விட்டான் முத்து.
“என்ன முத்து பண்ற..? பொம்பளைப் புள்ளைய அடிக்க கை ஓங்குற..?” என்று மதி அவன் கையைப் பிடித்து தடுக்க...இப்போதெல்லாம் மதியின் அருகில் தடுமாறும் தன் வயதை..ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடினான் முத்து.
“தப்புத்தான்..” என்றபடி அவள் கையை விலக்கியவன்..வகுப்பிற்குள் சென்று விட்டான்.
“இந்த முத்து பய வரவர சரியில்லை மதி.அவனுக்கு மணி அண்ணாவைக் கண்டாலே ஆக மாட்டேங்குது..இன்னைக்கு பஸ்ல கூட நீ மணி அண்ணா பக்கத்துல நின்னுகிட்டு வந்தப்பா..இவன் பின்னாடி இருந்து முறைச்சுகிட்டே இருந்தான்..!” என்று கங்கா சொல்ல...
“உனக்கு முத்துவை குறை சொல்லலைன்னா தூக்கம் வராது கங்கா...அவனே பாவம்..அப்பாவி..” என்றாள் மதி பரிந்து கொண்டு.
“யாரு அவனா அப்பாவி..! நீதாண்டி மெச்சிக்கணும்..” என்று சொல்ல..
“என்ன இருந்தாலும் அவன் என் நண்பன்..” என்றாள் மதி.
“அது சரி..! வா கிளாஸ்க்கு போகலாம்..!” என்றபடி மூவரும் வகுப் பறைக்குள் நுழைய...அதற்கு பிறகு அந்த சொர்க்கம் அவர்களை உள்வாங்கிக் கொண்டது.
ஆம்..! எல்லோருக்கும் பள்ளி வாழ்க்கை என்பது சொர்க்கம் தான்.பள்ளியை விட்டு எப்போதடா போவோம் என்றும் எண்ணிய நாம் தான்..சில வருடங்களில்..மீண்டும் பள்ளிக்கே போக மாட்டோமா என்று ஏங்குவோம்.அப்படிப்பட்ட பல இனிய,அழியாத,பசுமையான நாட்களை நமக்கு அளித்தது பள்ளி மட்டுமே.
மதியின் வாழ்க்கையிலும்....அது ஒரு வசந்த காலம் தான்.படிப்பைத் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாது.அவளின் வாழ்க்கையும் ஒரு குறுகிய வட்டமாகத்தான் இருந்தது.அதைச் சுற்றி அவள் இனிமையாக பயணம் செய்து கொண்டிருந்தாள்.
அன்றைய ஒரு நாள் இருள் மங்கிய வேளையில்...தன் நோட்டில் எதேதோ வரைவதும்..பிறகு “ச்ச்சு” கொட்டி அதை அழிப்பதுமாக இருந்தால் மதி.
“இப்ப எதுக்கு இப்படி உச்சுக் கொட்டிட்டே இருக்க மதி..?” என்று பார்வதி கேட்க..
“இந்த படம் வரைய வரவே மாட்டேங்குதும்மா...! அதான்..!” என்று குனிந்தவள்...மீண்டும் அதையே செய்து கொண்டிருக்க...”நல்ல பிள்ள..” என்று உள்ளே சென்ற பார்வதி...ஒரு தூக்குவாளியுடன் வெளியே வந்தார்.
“அதை வந்து வரைஞ்சுக்க மதி..இந்த கொழுக்கட்டையை போயி மலர் அத்தை வீட்ல குடுத்துட்டு வந்துடு..!” என்றார் பார்வதி.
“ம்மா..என்னாமா...? நானே இங்க வரைய வராம கஷ்ட்டபட்டு வரைஞ்சுகிட்டு இருக்கேன்..இப்ப போய் வேலை சொல்றிங்க..?” என்றவள் மீண்டும் நோட்டைப் பார்த்துக் குனிய..
“நாளைக்கு ஞாயித்துக் கிழமை தான...நாளைக்கு வரைஞ்சுக்கலாம்..இப்ப போய் குடுத்துட்டு வா...!சூடு ஆறிப்போயிடும்.முகிலனுக்கு கொழுக்கட்டைன்னா அப்படி ஒரு பிரியம்...” என்று பார்வதி சொல்ல...
“நிம்மதியா படிக்க கூட முடியலை..இந்த வீட்ல..” என்று கை கால்களை உதறியபடி அவள் எழுந்து நிற்க...
“காலை உதறி நடக்காதன்னு சொல்லியிருக்கேன்ல மதி..!” என்று ஒரு அதட்டல் போட்டார் பார்வதி.
“சரிம்மா...குடுங்க அந்த தூக்கு வாளியை...!”என்று வாங்கிக் கொண்டவள்.... கொஞ்சம் கடுப்புடன் தான் சென்றாள்.
பாட்டுப்பாவடையும்,மேல்சட்டையும அணிந்திருந்தவள் அப்படியே போக...”கழுத வயசாகுது...துண்ட எடுத்து மேல போட்டுட்டு போ..!” என்று பார்வதி அதட்ட...
“இதுக்கு நீங்களே போய் குடுத்துடலாம்ல..!” என்று சிணுங்கிய படியே சென்றாள் மதி.
மலருக்கும்,பெரியசாமிக்கும் மதி என்றால் அத்தனை பிரியம்.பார்வதியின் அமைதியான குணம் அவர்களுக்கு பிடித்துப் போக..அவர் பெற்ற மதியின் மீதும் தனிப் பாசம் தான்.அப்போது ஒரு தெரு தள்ளி இருந்தது அவர்களின் வீடு.
“அத்தை..! அத்தை..!” என்றபடி உள்ளே சென்றாள் மதி.
“வா மதி...” என்று மலர் புன்னகை முகமாய் அழைக்க....
“இந்தாங்க அத்தை கொழுக்கட்டை..அம்மா குடுத்து விட்டாங்க...!” என்று தூக்கு வாளியை நீட்ட..
“மதினி எப்பவும் இப்படித்தான்...முகிலனுக்கு பிடிக்கும்ன்னா போதும்..உடனே குடுத்து விட்ருவாக..!” என்று பெருமையாய் சலித்துக் கொண்ட மலர்...
"சாப்பிடு மதி..!" என்றார்.
“இல்லத்தை..எனக்கு படிக்கிறது நிறைய இருக்கு..! நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்...!போயிட்டு வரேன் அத்தை...” என்று திரும்பி செல்ல...அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்தான் முகிலன்.எப்போதுமே அவன் வருவதற்கு இருட்டி விடும்.இன்றும் அப்படித்தான்.
அவள் திரும்பவும்,அவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.அந்த நேரத்தில் அவளை அவர்கள் வீட்டில் அவன் எதிர்பார்க்கவில்லை.
அவளுக்கு வழி விடாமல் வாசலை மறைத்து நின்றான்.அவள் இந்தபக்கம் வந்தால் அவனும் அதே பக்கம் வந்து மறிப்பதும்,மறுபக்கம் வந்தால்...அங்கு வந்தும் மறிப்பதுமாக அவன் விளையாட...அவளோ குனிந்த தலை நிமிராமல் சிணுங்கினாள்.
“பாருங்க அத்தை..!” என்று சிணுங்க..
“டேய் முகிலா...! விடுடா அவளை..!” என்று மலர் கடிந்து கொள்ள...
“விடாமா...! உங்க அண்ணன் மகளை யாரும் இங்க பிடிச்சு வைக்கலை..” என்றான் உல்லாசமாய்.
“வழிய விடுங்க மாமா அப்படின்னு சொல்லு விடுறேன்..!” என்றான்.
“மாட்டேன்..!”
“அப்ப நானும் விட மாட்டேன்..!” என்று அவன் சட்டமாய் நிற்க...
அவள் மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்க்க...சின்ன சிரிப்புடன் கண்ணடித்து வைத்தான்.அவனின் செயலில் அவளுக்கு வியர்த்து ஊத்த...அங்கிருந்து சென்றால் போதும் என்றானது அவளின் நிலைமை.
“சரி..! வழிய விடுங்க மணி மாமா..!” என்றாள் உள்ளே போன குரலில்.
“நான் மாமான்னு தான் சொல்ல சொன்னேன்..பரவாயில்லை...மணி மாமாவும் நல்லா தான் இருக்கு..” என்று சிரித்தவன்..அவளுக்கு வழியை விட...விட்டால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
“நல்ல பொண்ணு...!” என்று மலர் சிரித்துக் கொண்டே சொல்ல...
“ரொம்ம்பப நல்ல பொண்ணும்மா..!” என்றான் அவன் இடக்காய்.
அவர்கள் அடுத்த நிறுத்தத்தில் இறங்க முற்பட....மதி லேசாக நிமிர்ந்து முகிலனைப் பார்த்தாள்.ஆனால் அவனோ கையிலிருந்த புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரொம்ப படிப்பாளி தான் போல..!” என்று மனதிற்குள் எண்ணியவள்... அவனை சட்டை செய்யாது இறங்கிவிட்டாள்.
அவள் இறங்கும் வரை குனிந்திருந்தவன்...அவள் சென்றவுடன் நிமிர்ந்து ஒரு சன்ன சிரிப்பு சிரித்தான்.உண்மையில் அவனுக்கு படிக்க வேண்டியது இருந்தது.அதனால் தான் புத்தகத்தில் மூழ்கி விட்டான்.
மதி அவனைப் பார்த்ததும் அவனுக்கு தெரியும்..மனதிற்குள் ஏதோ கவுண்ட்டர் கொடுத்ததும் தெரியும்.அப்படியே அனைத்தையும் முகத்திலேயே சொல்லிவிடும் பாவனை அவளுடையது.
“சுரக்காய் சைஸ்க்கு இருந்துகிட்டு...இவளுக்கு கொஞ்சம் கொழுப்பு இருக்கு..!” என்று எண்ணியவன் மீண்டும்...தன் வேலையில் மூழ்கிப் போக...
அங்கே கங்காவோ...
“மணி அண்ணா ரொம்ப நல்லவங்க..! இல்லையா செல்வி.நமக்காக டிக்கெட்டு எல்லாம் எடுத்தாக..!” என்று பெருமையாய் சொல்ல..
“ஆமா.. கங்கா..! எம்புட்டு பெரிய படிப்பு படிக்கிறாங்க..ஆனா கொஞ்சம் கூட பந்தாவே இல்ல...எம்புட்டு நல்லவரு..” என்று புகழ்ந்து பேசிக்கொண்டிருக்க... முத்துவின் காதில் புகை வந்தது.
“இங்க நான் ஒருத்தன் குத்துக் கல்லாட்டம் இருக்கேன்...! என்னைய எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதே..! நானும் உங்களுக்கு அண்ணன் முறைதான் ஆகணும்..நினைவு இருக்கா..?” என்றான் முத்து.
“அதெப்படி இருக்கும்...? நீ முதல்ல எங்க அண்ணா கூட படிச்ச..அப்பறம் எங்க அக்கா கூட படிச்ச...இப்ப என்கூட படிக்கிற...! நீ எப்படி எனக்கு அண்ணன் ஆவ..” என்று அவன் காலை வார..முத்துவின் முகம் தொங்கிப் போனது.
முத்துவிற்கு படிப்புதான் ஏறவில்லையே ஒழிய...உடல் உழைப்பில் அவனை மிஞ்ச முடியாது.அவனுக்கு அப்பா இல்லை.அம்மா மட்டுமே.அம்மாவும் கொஞ்சம் செல்லம் கொடுக்க..படிப்பு என்றாலே வேப்பங்காயாய் கசந்தது.
“நீ கவலைப் படாத முத்து மாமா...! உனக்கு விட்டவங்க தான் மத்த எல்லாரும் சரியா..?” என்றாள் மதி..அவனை சமாதானம் செய்யும் பொருட்டு.முத்து மதிக்கு மாமா முறை தான் வேண்டும்.அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்றாள் மட்டும் அவன் மாமா.மற்ற நேரங்களில் அவன் முத்துவாக மாறிவிடுவான் அவளுக்கு.
“மதின்னா மதி தான்..” என்று முத்து சந்தோஷப்பட...
“ரொம்ப சந்தோஷப்படாத...!சயின்ஸ்ல வீட்டுப்பாடம் செஞ்சியா..?” என்று செல்வி கேட்க..
“அதெல்லாம் ஒழுங்கா செஞ்சிருந்தா நான் எப்பவோ பத்தாவது பாஸ் பண்ணியிருப்பேன்...” என்றான்.
“நீ வேண்ணா பாரு..! இந்த வருஷமும் நீ தேற மாட்ட..!” என்று கங்கா சொல்ல...அவளை அடிக்கவே சென்று விட்டான் முத்து.
“என்ன முத்து பண்ற..? பொம்பளைப் புள்ளைய அடிக்க கை ஓங்குற..?” என்று மதி அவன் கையைப் பிடித்து தடுக்க...இப்போதெல்லாம் மதியின் அருகில் தடுமாறும் தன் வயதை..ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடினான் முத்து.
“தப்புத்தான்..” என்றபடி அவள் கையை விலக்கியவன்..வகுப்பிற்குள் சென்று விட்டான்.
“இந்த முத்து பய வரவர சரியில்லை மதி.அவனுக்கு மணி அண்ணாவைக் கண்டாலே ஆக மாட்டேங்குது..இன்னைக்கு பஸ்ல கூட நீ மணி அண்ணா பக்கத்துல நின்னுகிட்டு வந்தப்பா..இவன் பின்னாடி இருந்து முறைச்சுகிட்டே இருந்தான்..!” என்று கங்கா சொல்ல...
“உனக்கு முத்துவை குறை சொல்லலைன்னா தூக்கம் வராது கங்கா...அவனே பாவம்..அப்பாவி..” என்றாள் மதி பரிந்து கொண்டு.
“யாரு அவனா அப்பாவி..! நீதாண்டி மெச்சிக்கணும்..” என்று சொல்ல..
“என்ன இருந்தாலும் அவன் என் நண்பன்..” என்றாள் மதி.
“அது சரி..! வா கிளாஸ்க்கு போகலாம்..!” என்றபடி மூவரும் வகுப் பறைக்குள் நுழைய...அதற்கு பிறகு அந்த சொர்க்கம் அவர்களை உள்வாங்கிக் கொண்டது.
ஆம்..! எல்லோருக்கும் பள்ளி வாழ்க்கை என்பது சொர்க்கம் தான்.பள்ளியை விட்டு எப்போதடா போவோம் என்றும் எண்ணிய நாம் தான்..சில வருடங்களில்..மீண்டும் பள்ளிக்கே போக மாட்டோமா என்று ஏங்குவோம்.அப்படிப்பட்ட பல இனிய,அழியாத,பசுமையான நாட்களை நமக்கு அளித்தது பள்ளி மட்டுமே.
மதியின் வாழ்க்கையிலும்....அது ஒரு வசந்த காலம் தான்.படிப்பைத் தவிர அவளுக்கு வேறொன்றும் தெரியாது.அவளின் வாழ்க்கையும் ஒரு குறுகிய வட்டமாகத்தான் இருந்தது.அதைச் சுற்றி அவள் இனிமையாக பயணம் செய்து கொண்டிருந்தாள்.
அன்றைய ஒரு நாள் இருள் மங்கிய வேளையில்...தன் நோட்டில் எதேதோ வரைவதும்..பிறகு “ச்ச்சு” கொட்டி அதை அழிப்பதுமாக இருந்தால் மதி.
“இப்ப எதுக்கு இப்படி உச்சுக் கொட்டிட்டே இருக்க மதி..?” என்று பார்வதி கேட்க..
“இந்த படம் வரைய வரவே மாட்டேங்குதும்மா...! அதான்..!” என்று குனிந்தவள்...மீண்டும் அதையே செய்து கொண்டிருக்க...”நல்ல பிள்ள..” என்று உள்ளே சென்ற பார்வதி...ஒரு தூக்குவாளியுடன் வெளியே வந்தார்.
“அதை வந்து வரைஞ்சுக்க மதி..இந்த கொழுக்கட்டையை போயி மலர் அத்தை வீட்ல குடுத்துட்டு வந்துடு..!” என்றார் பார்வதி.
“ம்மா..என்னாமா...? நானே இங்க வரைய வராம கஷ்ட்டபட்டு வரைஞ்சுகிட்டு இருக்கேன்..இப்ப போய் வேலை சொல்றிங்க..?” என்றவள் மீண்டும் நோட்டைப் பார்த்துக் குனிய..
“நாளைக்கு ஞாயித்துக் கிழமை தான...நாளைக்கு வரைஞ்சுக்கலாம்..இப்ப போய் குடுத்துட்டு வா...!சூடு ஆறிப்போயிடும்.முகிலனுக்கு கொழுக்கட்டைன்னா அப்படி ஒரு பிரியம்...” என்று பார்வதி சொல்ல...
“நிம்மதியா படிக்க கூட முடியலை..இந்த வீட்ல..” என்று கை கால்களை உதறியபடி அவள் எழுந்து நிற்க...
“காலை உதறி நடக்காதன்னு சொல்லியிருக்கேன்ல மதி..!” என்று ஒரு அதட்டல் போட்டார் பார்வதி.
“சரிம்மா...குடுங்க அந்த தூக்கு வாளியை...!”என்று வாங்கிக் கொண்டவள்.... கொஞ்சம் கடுப்புடன் தான் சென்றாள்.
பாட்டுப்பாவடையும்,மேல்சட்டையும அணிந்திருந்தவள் அப்படியே போக...”கழுத வயசாகுது...துண்ட எடுத்து மேல போட்டுட்டு போ..!” என்று பார்வதி அதட்ட...
“இதுக்கு நீங்களே போய் குடுத்துடலாம்ல..!” என்று சிணுங்கிய படியே சென்றாள் மதி.
மலருக்கும்,பெரியசாமிக்கும் மதி என்றால் அத்தனை பிரியம்.பார்வதியின் அமைதியான குணம் அவர்களுக்கு பிடித்துப் போக..அவர் பெற்ற மதியின் மீதும் தனிப் பாசம் தான்.அப்போது ஒரு தெரு தள்ளி இருந்தது அவர்களின் வீடு.
“அத்தை..! அத்தை..!” என்றபடி உள்ளே சென்றாள் மதி.
“வா மதி...” என்று மலர் புன்னகை முகமாய் அழைக்க....
“இந்தாங்க அத்தை கொழுக்கட்டை..அம்மா குடுத்து விட்டாங்க...!” என்று தூக்கு வாளியை நீட்ட..
“மதினி எப்பவும் இப்படித்தான்...முகிலனுக்கு பிடிக்கும்ன்னா போதும்..உடனே குடுத்து விட்ருவாக..!” என்று பெருமையாய் சலித்துக் கொண்ட மலர்...
"சாப்பிடு மதி..!" என்றார்.
“இல்லத்தை..எனக்கு படிக்கிறது நிறைய இருக்கு..! நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்...!போயிட்டு வரேன் அத்தை...” என்று திரும்பி செல்ல...அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்தான் முகிலன்.எப்போதுமே அவன் வருவதற்கு இருட்டி விடும்.இன்றும் அப்படித்தான்.
அவள் திரும்பவும்,அவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.அந்த நேரத்தில் அவளை அவர்கள் வீட்டில் அவன் எதிர்பார்க்கவில்லை.
அவளுக்கு வழி விடாமல் வாசலை மறைத்து நின்றான்.அவள் இந்தபக்கம் வந்தால் அவனும் அதே பக்கம் வந்து மறிப்பதும்,மறுபக்கம் வந்தால்...அங்கு வந்தும் மறிப்பதுமாக அவன் விளையாட...அவளோ குனிந்த தலை நிமிராமல் சிணுங்கினாள்.
“பாருங்க அத்தை..!” என்று சிணுங்க..
“டேய் முகிலா...! விடுடா அவளை..!” என்று மலர் கடிந்து கொள்ள...
“விடாமா...! உங்க அண்ணன் மகளை யாரும் இங்க பிடிச்சு வைக்கலை..” என்றான் உல்லாசமாய்.
“வழிய விடுங்க மாமா அப்படின்னு சொல்லு விடுறேன்..!” என்றான்.
“மாட்டேன்..!”
“அப்ப நானும் விட மாட்டேன்..!” என்று அவன் சட்டமாய் நிற்க...
அவள் மெதுவாக நிமிர்ந்து அவனைப் பார்க்க...சின்ன சிரிப்புடன் கண்ணடித்து வைத்தான்.அவனின் செயலில் அவளுக்கு வியர்த்து ஊத்த...அங்கிருந்து சென்றால் போதும் என்றானது அவளின் நிலைமை.
“சரி..! வழிய விடுங்க மணி மாமா..!” என்றாள் உள்ளே போன குரலில்.
“நான் மாமான்னு தான் சொல்ல சொன்னேன்..பரவாயில்லை...மணி மாமாவும் நல்லா தான் இருக்கு..” என்று சிரித்தவன்..அவளுக்கு வழியை விட...விட்டால் போதும் என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.
“நல்ல பொண்ணு...!” என்று மலர் சிரித்துக் கொண்டே சொல்ல...
“ரொம்ம்பப நல்ல பொண்ணும்மா..!” என்றான் அவன் இடக்காய்.