அதென்னவோ மாமியாருக்கெல்லாம் மருமகள் வந்த பின்ன அவங்க பிள்ளை பெத்த விதம் கூட மறந்துருது. மனசுல ஏதோ குந்திதேவி மாதிரி மந்திரத்தில் பிள்ளை பெத்ததா எண்ணம் வந்துரும் போல.
தனம் மாதிரி அம்மாக்கள் ஊர் மேயற மகனைக்கூட அவன் ஆம்பளைன்னு பெருமை பேசுவாங்க ஆனால் பொண்டாட்டியை சுத்தி வரவன் 'பொச கெட்ட பய'- தான்.
டேய் வெற்றி, ராத்திரியில சரண்யா என்ன ராஜா மாதிரி இடுப்புல வாளை சொருகிக்கிட்டா தூங்கறா? மிஞ்சிப்போனா அவ கையோ வாயோ பேசப்போகுது. அதக்கூடவா சமாளிக்க முடியாது உன்னால?
எதுக்குடா பாட்டு பாடி பிள்ளையை எழுப்புன?
எழுந்த பிள்ளை தூங்கி, உன் வாழ்க்கையில சந்தோஷம் எட்டிப்பார்க்கறதுக்குள்ள சூரியனே வானத்த எட்டிப் பார்த்துட்டான், உங்கம்மாவும் punctual-ஆ ஆஜர் ஆகிட்டாங்க.