தோகை 10:
“சார்..இன்னும் ரெண்டு நாள்ல சூட் முடுஞ்சுடும் சார்..!” என்றார் டைரக்டர்.அதைக் கேட்ட அஜய் சந்தோஷப்படவில்லை.
“என்ன இது...இந்த விஷயத்தை சொன்னா..இவர் சந்தோஷப்படுவார்ன்னு பார்த்தா..அமைதியா இருக்காரே..?” என்று அந்த டைரக்டர் யோசிக்க...
“இப்ப அவர் இருக்குற நிலைமையில் இங்க ஒரு மாசம் ஷூட்டிங் வச்சா கூட..மனுஷன் பேசாம இருப்பார்..” என்றான் மகேஷ் அந்த டைரக்டர் காதின் அருகில்.
“என்ன..?” என்பதை போல் அவனைப் பார்த்தார் அவர்.
“எல்லாம் அப்படித்தான் சார்..!” என்பதை போல..அவன் ஜாடை காட்ட..அவருக்கு ஏதோ....புரிந்தும் புரியாததைப் போல் இருந்தது.
“இன்னும் என்ன ஷாட் பாக்கியிருக்கு..?” என்றான் அஜய்..யோசனையுடன்.
“சார்...ஹீரோயினை கடத்திட்டு போற...கும்பல்கிட்ட இருந்து அவங்களைக் காப்பாத்துறிங்க....அவங்களுக்கு அப்படியே தாலியைக் கட்ட போக அதுக்கு முன்னாடி ... கொஞ்ச நேரத்துல இறந்துடுறாங்க..! நீங்க வர மாட்டிங்கன்னு நினச்சு அவங்க ஏற்கனவே குடுச்ச விஷம் அவங்க உயிரைப் பறிச்சுடுது....அவ்ளோ தான் சார்...பிளாஷ்பேக் முடியுது..” என்றார் டைரக்டர்.
“ஓகே...!” என்றான் அமைதியாய்.
“ஷாட் எங்க....லொக்கேஷன்...?” என்றான்.
“அந்த ஆத்தங்கரையோரம்...கடத்துறாங்க சார்...நீங்க பின்னாடியே போறீங்க....அவங்க அந்த தென்னந்தோப்புக்குள்ள...கொண்டு போக...அங்கதான் லாஸ்ட் சீன் லொக்கேஷன்...” என்றார் அவர்.
“கார்லயா..?” என்றான்.
“ஆமா சார்..!”
“ஓகே....டயலாக் பேப்பரைக் குடுங்க..!” என்று நல்ல பிள்ளையாய் வாங்கிக் கொண்டான்.இன்னும் இரண்டு நாளில் எப்படி அவளைத் தன் வழிக்கு வர வைப்பது என்ற யோசனை வேறு அவனுக்கு.
நாளைக்கு அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
“கண்ணன்..!”
“சார்..!”
“என்ன செய்வீங்களோ தெரியாது...நாளைக்கு சக்தி எங்க போறா...எங்க வரான்ற முழு விபரம் எனக்கு வேணும்..!” என்றான்.
“சார்..!” என்று அவன் அதிர்ச்சியாக...
“ஒரு நாளைக்கு எத்தனை தடவை அதிர்ச்சியாவிங்க..? ஒண்ணுமில்லை.. எனக்கு அவகிட்ட கொஞ்சம் பேசணும் அவ்வளவு தான்..” என்றான்.
“ஓகே சார்..!” என்றான். அவளை சந்திக்கும் நிமிடத்திற்காக காத்திருந்தான் அவன்.
“இனி அவளைப் பார்க்கும் போது...திமிராக பேசக் கூடாது...கொஞ்சம் தன்மையாவே பேசணும்...”என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அவனுடைய வசதிக்கு ஏற்ப...மறுநாள்...சக்தி அவர்களின் மக்கா சோளக் காட்டின் வழியே நடந்து போய் கொண்டிருக்கிறாள் என்ற தகவல் அவனைத் தேடி வர..கொஞ்சமும் தாமதிக்காது அவளைத் தேடி சென்றான்.
ஏதோ ஒரு யோசனையில் நடந்து கொண்டிருந்த சக்தி...தன் முன் நிழலாடுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தவள்...அங்கு அவனைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்தாள்.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவனை விலகிக் கொண்டு நடக்க...”ஒரு நிமிஷம்..” என்றான் சாந்தமான குரலில்.
“என்ன..?” என்பதை போல் அவள் நிற்க...
“உன்னோட முடிவு என்ன..?”
“என்ன முடிவு..?”
“தெரியாத மாதிரி நடிக்காத..?” என்றான்.
“நிஜமாவே தெரியலை..!” என்றாள்.
“டேய்..! நீ எங்கடா அவகிட்ட காதலை சொன்ன..?” என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க...
“சார்..இன்னும் ரெண்டு நாள்ல சூட் முடுஞ்சுடும் சார்..!” என்றார் டைரக்டர்.அதைக் கேட்ட அஜய் சந்தோஷப்படவில்லை.
“என்ன இது...இந்த விஷயத்தை சொன்னா..இவர் சந்தோஷப்படுவார்ன்னு பார்த்தா..அமைதியா இருக்காரே..?” என்று அந்த டைரக்டர் யோசிக்க...
“இப்ப அவர் இருக்குற நிலைமையில் இங்க ஒரு மாசம் ஷூட்டிங் வச்சா கூட..மனுஷன் பேசாம இருப்பார்..” என்றான் மகேஷ் அந்த டைரக்டர் காதின் அருகில்.
“என்ன..?” என்பதை போல் அவனைப் பார்த்தார் அவர்.
“எல்லாம் அப்படித்தான் சார்..!” என்பதை போல..அவன் ஜாடை காட்ட..அவருக்கு ஏதோ....புரிந்தும் புரியாததைப் போல் இருந்தது.
“இன்னும் என்ன ஷாட் பாக்கியிருக்கு..?” என்றான் அஜய்..யோசனையுடன்.
“சார்...ஹீரோயினை கடத்திட்டு போற...கும்பல்கிட்ட இருந்து அவங்களைக் காப்பாத்துறிங்க....அவங்களுக்கு அப்படியே தாலியைக் கட்ட போக அதுக்கு முன்னாடி ... கொஞ்ச நேரத்துல இறந்துடுறாங்க..! நீங்க வர மாட்டிங்கன்னு நினச்சு அவங்க ஏற்கனவே குடுச்ச விஷம் அவங்க உயிரைப் பறிச்சுடுது....அவ்ளோ தான் சார்...பிளாஷ்பேக் முடியுது..” என்றார் டைரக்டர்.
“ஓகே...!” என்றான் அமைதியாய்.
“ஷாட் எங்க....லொக்கேஷன்...?” என்றான்.
“அந்த ஆத்தங்கரையோரம்...கடத்துறாங்க சார்...நீங்க பின்னாடியே போறீங்க....அவங்க அந்த தென்னந்தோப்புக்குள்ள...கொண்டு போக...அங்கதான் லாஸ்ட் சீன் லொக்கேஷன்...” என்றார் அவர்.
“கார்லயா..?” என்றான்.
“ஆமா சார்..!”
“ஓகே....டயலாக் பேப்பரைக் குடுங்க..!” என்று நல்ல பிள்ளையாய் வாங்கிக் கொண்டான்.இன்னும் இரண்டு நாளில் எப்படி அவளைத் தன் வழிக்கு வர வைப்பது என்ற யோசனை வேறு அவனுக்கு.
நாளைக்கு அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
“கண்ணன்..!”
“சார்..!”
“என்ன செய்வீங்களோ தெரியாது...நாளைக்கு சக்தி எங்க போறா...எங்க வரான்ற முழு விபரம் எனக்கு வேணும்..!” என்றான்.
“சார்..!” என்று அவன் அதிர்ச்சியாக...
“ஒரு நாளைக்கு எத்தனை தடவை அதிர்ச்சியாவிங்க..? ஒண்ணுமில்லை.. எனக்கு அவகிட்ட கொஞ்சம் பேசணும் அவ்வளவு தான்..” என்றான்.
“ஓகே சார்..!” என்றான். அவளை சந்திக்கும் நிமிடத்திற்காக காத்திருந்தான் அவன்.
“இனி அவளைப் பார்க்கும் போது...திமிராக பேசக் கூடாது...கொஞ்சம் தன்மையாவே பேசணும்...”என தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.
அவனுடைய வசதிக்கு ஏற்ப...மறுநாள்...சக்தி அவர்களின் மக்கா சோளக் காட்டின் வழியே நடந்து போய் கொண்டிருக்கிறாள் என்ற தகவல் அவனைத் தேடி வர..கொஞ்சமும் தாமதிக்காது அவளைத் தேடி சென்றான்.
ஏதோ ஒரு யோசனையில் நடந்து கொண்டிருந்த சக்தி...தன் முன் நிழலாடுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தவள்...அங்கு அவனைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்தாள்.ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
அவனை விலகிக் கொண்டு நடக்க...”ஒரு நிமிஷம்..” என்றான் சாந்தமான குரலில்.
“என்ன..?” என்பதை போல் அவள் நிற்க...
“உன்னோட முடிவு என்ன..?”
“என்ன முடிவு..?”
“தெரியாத மாதிரி நடிக்காத..?” என்றான்.
“நிஜமாவே தெரியலை..!” என்றாள்.
“டேய்..! நீ எங்கடா அவகிட்ட காதலை சொன்ன..?” என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்க...