தோகை 9:
“இவன் எப்படி இங்க வந்தான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி.
“ஹேய் சக்தி...அஜய் சார்டி..இப்ப எதுக்கு இங்க வந்திருக்காருன்னு தெரியலைடி...அங்க பாரு கூட்டத்தை..!” என்று மருதாணி வியக்க...
“எதுக்கு வந்திருப்பான்...கூட்டத்தை கூட்டி பந்தா காட்ட வந்திருப்பான்..!” என்றாள் சக்தி.
“எனக்கு என்னமோ..அப்படித் தோணலை சக்தி..அவர் ஏதோ பிளானோட தான் வந்திருக்கணும்..” என்றாள் மருதாணி.
“அவன் எவ்வளவு பெரிய பிளானோட வந்திருந்தாலும் சரி...என்கிட்டே அவன் பாட்சா பலிக்காது...நீ வா..” என்றபடி ஜன்னலை பட்டென்று சாத்தினாள் சக்தி.முகத்தில் அறை வாங்கியதைப் போன்று உணர்ந்தான் அஜய்.
நண்பர்கள் சொன்னதை கேட்டு...மாப்பிள்ளையும் வெளியே வர...அஜய்யை அங்கு கண்ட மாப்பிள்ளை அகம் மகிழ்ந்து போனான்.
வேகமாய் அங்கு ஓடி வந்தவன் அஜய்யைப் பார்த்து முகம் முழுக்க புன்னகையுடன் நிற்க....
“நீங்க பாபுதானே..!” என்றான் அஜய் சரியாக.
“ஆமா சார்..! சேலம் மாவட்ட அஜய் ரசிகர் மன்ற தலைவர் நான் தான் சார்...” என்று முகம் முழுக்க சந்தோஷமாக சொல்ல...கூடுதலாக கிடைத்த செய்தியில் மகிழ்ந்து போனான் அஜய்.
“போச்சு...இது வேறயா....?” என்று மகேஷ் மனதிற்குள் நொந்து கொண்டான்.
“சார்..நாங்க உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லை சார்...ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..!” என்றான்.
“நீங்க என்ன பண்றிங்க..?” என்றான் அஜய்.
“பிஸ்நெஸ் பண்றேன் சார்...!” என்றான்.
“இங்க பக்கத்துல ஷூட்டிங்க்காக வந்தோம்.....உங்களைப் பார்த்துட்டு... இவர் சேலம் மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் பாபு தானேன்னு..சார் சரியா சொன்னார்...அதான் உங்களைப் பார்த்துட்டு போகலாம்ன்னு காரை நிறுத்த சொல்லி வந்தார்..!” என்றான் கண்ணன்...அஜய்யின் கண் அசைவில்.
“சார்..சார்...என்னைப் பார்க்க...என்னால நம்பவே முடியலை சார்...நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா..நானே உங்களைப் பார்க்க வந்திருப்பேன் சார்..இன்னமும் கூட என்னால் நம்ப முடியலை சார்..!” என்று அவன் திக்கித் திணறி..ஆச்சரியமும்,அதிர்ச்சியும் கலந்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க...
“அட லூசே..!” என்பதைப் போல் அவனைப் பார்த்து வைத்தான் மகேஷ்.
“ஓகே பாபு...அப்ப நீங்க கண்டினியு பண்ணுங்க...பாய்..!” என்றபடி அஜய் செல்ல எத்தனிக்க...
“என்ன சார் நீங்க...? இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போறீங்க..!” என்று அவன் குறைபட..
“இது உங்க வீடு மாதிரி தெரியலையே..!” என்றான் அஜய்.
“சார்....இன்னைக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம் சார்..அப்படியே இன்னைக்கு தட்டு மாத்திடலாம்ன்னு இருக்கோம்..நீங்களும் வந்து கலந்துகிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன் சார்..!” என்றான் அவன் காலில் விழாத குறையாய்.
“இல்லை பாபு..எங்களுக்கு ஷூட்டிங்க்கு டைம் ஆச்சு..!” என்று அஜய் கிளம்ப எத்தனிக்க...
“சார்..பிளீஸ்..சார்..கொஞ்ச நேரம்...” என்று அவன் மீண்டும் கெஞ்ச..
“சார் போயிட்டு போகலாம் சார்...தன்னோட ரசிகர் மன்ற தலைவர் வீட்டு விழாவுக்கு ..நீங்க நேரில் போனதா நாளைக்கு எல்லா பேப்பர்லயும் நியூஸ் வரும்...அது நமக்கு ஒரு டிஆர்பி தான சார்..!” என்று கண்ணனும் சொல்ல...
“என்னா நடிப்புடா சாமி..!” என்று வியந்து போனான் மகேஷ்.
“ஓகே..நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால வரேன்..!” என்றபடி கண்ணனையும்,மகேஷையும் அழைத்துக் கொண்டு சென்றான் அஜய்.
இதையெல்லாம் வெளியே வந்து பார்த்த மருதாணிக்கு தலையை சுற்றியது.அவர்களுடன் உள்ளே சென்றவன்...இரண்டு எட்டு பின்னால் வந்து மருதாணியை...ஒரு விரல் நீட்டி அழைத்தான்.
அவள் வேகமாய் அவன் அருகில் வர...”நீ அவளுக்கு பிரண்டு தான..?” என்றான்.
“ஆ..ஆமா சார்..” என்றாள் திக்கித் திணறி.
“அப்ப...போய் அவகிட்ட சொல்லு...இந்த அஜய்யை தாண்டி அவளால ஆணி கூட புடுங்க முடியாதுன்னு..!” என்றான் கடுமையாய்.
அதைக் கேட்ட மருதாணிக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. அனால் அஜய்யோ...அசால்ட்டாய் அவர்களுடன் உள்ளே செல்ல..விக்கித்து நின்றாள் மருதாணி.
அன்றைய விழாவில் பாபுவையும்,சக்தியையும் மறந்து...அஜய்யையே அனைவரும் முன்னிறுத்த...அதைப் பார்த்த கண்ணன்...
“இவர் எங்கயோ இருக்க வேண்டியவர்..!” என்று மெச்சிக் கொண்டான்.
“வாங்க தம்பி..! நீங்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..!நாங்க உங்களை எதிர்பார்க்கலை...” என்று மகாலிங்கமும்..அவர் பங்குக்கு சொல்ல...அதை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு..சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல வந்தது.
“சக்தி...”
“சொல்லுடி...”
அவளை அமைதியாக பார்த்த மருதாணி...அஜய் சொன்னதை அப்படியே அச்சுப்பிசகாமல் சொல்ல....ஆத்திரமாக வந்தது சக்திக்கு.
“நான் பார்த்துக்குறேன்..!” என்பதோடு அவள் முடித்துக் கொள்ள....
“இன்னுமாடி நீ நம்புற...?” என்றாள்.
“நான் என்னை நம்புறேன்..!” என்றாள் சக்தி.
“மருதாணி..சக்தியை கூட்டிட்டு வாம்மா...!” என்ற பாப்பாம்மாவின் குரலில்...
“கூப்பிடுறாங்கடி..என்ன பண்றது..?” என்றாள் மருதாணி.
“வா போகலாம்..!” என்றபடி சக்தி அவளின் கைப் பிடித்துக் கொண்டு அழைத்து போக..
“இவன் எப்படி இங்க வந்தான்..?” என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சக்தி.
“ஹேய் சக்தி...அஜய் சார்டி..இப்ப எதுக்கு இங்க வந்திருக்காருன்னு தெரியலைடி...அங்க பாரு கூட்டத்தை..!” என்று மருதாணி வியக்க...
“எதுக்கு வந்திருப்பான்...கூட்டத்தை கூட்டி பந்தா காட்ட வந்திருப்பான்..!” என்றாள் சக்தி.
“எனக்கு என்னமோ..அப்படித் தோணலை சக்தி..அவர் ஏதோ பிளானோட தான் வந்திருக்கணும்..” என்றாள் மருதாணி.
“அவன் எவ்வளவு பெரிய பிளானோட வந்திருந்தாலும் சரி...என்கிட்டே அவன் பாட்சா பலிக்காது...நீ வா..” என்றபடி ஜன்னலை பட்டென்று சாத்தினாள் சக்தி.முகத்தில் அறை வாங்கியதைப் போன்று உணர்ந்தான் அஜய்.
நண்பர்கள் சொன்னதை கேட்டு...மாப்பிள்ளையும் வெளியே வர...அஜய்யை அங்கு கண்ட மாப்பிள்ளை அகம் மகிழ்ந்து போனான்.
வேகமாய் அங்கு ஓடி வந்தவன் அஜய்யைப் பார்த்து முகம் முழுக்க புன்னகையுடன் நிற்க....
“நீங்க பாபுதானே..!” என்றான் அஜய் சரியாக.
“ஆமா சார்..! சேலம் மாவட்ட அஜய் ரசிகர் மன்ற தலைவர் நான் தான் சார்...” என்று முகம் முழுக்க சந்தோஷமாக சொல்ல...கூடுதலாக கிடைத்த செய்தியில் மகிழ்ந்து போனான் அஜய்.
“போச்சு...இது வேறயா....?” என்று மகேஷ் மனதிற்குள் நொந்து கொண்டான்.
“சார்..நாங்க உங்களை இங்க எதிர்பார்க்கவே இல்லை சார்...ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..!” என்றான்.
“நீங்க என்ன பண்றிங்க..?” என்றான் அஜய்.
“பிஸ்நெஸ் பண்றேன் சார்...!” என்றான்.
“இங்க பக்கத்துல ஷூட்டிங்க்காக வந்தோம்.....உங்களைப் பார்த்துட்டு... இவர் சேலம் மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் பாபு தானேன்னு..சார் சரியா சொன்னார்...அதான் உங்களைப் பார்த்துட்டு போகலாம்ன்னு காரை நிறுத்த சொல்லி வந்தார்..!” என்றான் கண்ணன்...அஜய்யின் கண் அசைவில்.
“சார்..சார்...என்னைப் பார்க்க...என்னால நம்பவே முடியலை சார்...நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா..நானே உங்களைப் பார்க்க வந்திருப்பேன் சார்..இன்னமும் கூட என்னால் நம்ப முடியலை சார்..!” என்று அவன் திக்கித் திணறி..ஆச்சரியமும்,அதிர்ச்சியும் கலந்த குரலில் சொல்லிக் கொண்டிருக்க...
“அட லூசே..!” என்பதைப் போல் அவனைப் பார்த்து வைத்தான் மகேஷ்.
“ஓகே பாபு...அப்ப நீங்க கண்டினியு பண்ணுங்க...பாய்..!” என்றபடி அஜய் செல்ல எத்தனிக்க...
“என்ன சார் நீங்க...? இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள்ள வராம போறீங்க..!” என்று அவன் குறைபட..
“இது உங்க வீடு மாதிரி தெரியலையே..!” என்றான் அஜய்.
“சார்....இன்னைக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம் சார்..அப்படியே இன்னைக்கு தட்டு மாத்திடலாம்ன்னு இருக்கோம்..நீங்களும் வந்து கலந்துகிட்டா ரொம்ப சந்தோஷப்படுவேன் சார்..!” என்றான் அவன் காலில் விழாத குறையாய்.
“இல்லை பாபு..எங்களுக்கு ஷூட்டிங்க்கு டைம் ஆச்சு..!” என்று அஜய் கிளம்ப எத்தனிக்க...
“சார்..பிளீஸ்..சார்..கொஞ்ச நேரம்...” என்று அவன் மீண்டும் கெஞ்ச..
“சார் போயிட்டு போகலாம் சார்...தன்னோட ரசிகர் மன்ற தலைவர் வீட்டு விழாவுக்கு ..நீங்க நேரில் போனதா நாளைக்கு எல்லா பேப்பர்லயும் நியூஸ் வரும்...அது நமக்கு ஒரு டிஆர்பி தான சார்..!” என்று கண்ணனும் சொல்ல...
“என்னா நடிப்புடா சாமி..!” என்று வியந்து போனான் மகேஷ்.
“ஓகே..நீங்க இவ்வளவு தூரம் சொல்றதால வரேன்..!” என்றபடி கண்ணனையும்,மகேஷையும் அழைத்துக் கொண்டு சென்றான் அஜய்.
இதையெல்லாம் வெளியே வந்து பார்த்த மருதாணிக்கு தலையை சுற்றியது.அவர்களுடன் உள்ளே சென்றவன்...இரண்டு எட்டு பின்னால் வந்து மருதாணியை...ஒரு விரல் நீட்டி அழைத்தான்.
அவள் வேகமாய் அவன் அருகில் வர...”நீ அவளுக்கு பிரண்டு தான..?” என்றான்.
“ஆ..ஆமா சார்..” என்றாள் திக்கித் திணறி.
“அப்ப...போய் அவகிட்ட சொல்லு...இந்த அஜய்யை தாண்டி அவளால ஆணி கூட புடுங்க முடியாதுன்னு..!” என்றான் கடுமையாய்.
அதைக் கேட்ட மருதாணிக்கு அதிர்ச்சியில் வார்த்தையே வரவில்லை. அனால் அஜய்யோ...அசால்ட்டாய் அவர்களுடன் உள்ளே செல்ல..விக்கித்து நின்றாள் மருதாணி.
அன்றைய விழாவில் பாபுவையும்,சக்தியையும் மறந்து...அஜய்யையே அனைவரும் முன்னிறுத்த...அதைப் பார்த்த கண்ணன்...
“இவர் எங்கயோ இருக்க வேண்டியவர்..!” என்று மெச்சிக் கொண்டான்.
“வாங்க தம்பி..! நீங்க வந்ததில் எங்களுக்கு ரொம்ப சந்தோசம்..!நாங்க உங்களை எதிர்பார்க்கலை...” என்று மகாலிங்கமும்..அவர் பங்குக்கு சொல்ல...அதை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சக்திக்கு..சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல வந்தது.
“சக்தி...”
“சொல்லுடி...”
அவளை அமைதியாக பார்த்த மருதாணி...அஜய் சொன்னதை அப்படியே அச்சுப்பிசகாமல் சொல்ல....ஆத்திரமாக வந்தது சக்திக்கு.
“நான் பார்த்துக்குறேன்..!” என்பதோடு அவள் முடித்துக் கொள்ள....
“இன்னுமாடி நீ நம்புற...?” என்றாள்.
“நான் என்னை நம்புறேன்..!” என்றாள் சக்தி.
“மருதாணி..சக்தியை கூட்டிட்டு வாம்மா...!” என்ற பாப்பாம்மாவின் குரலில்...
“கூப்பிடுறாங்கடி..என்ன பண்றது..?” என்றாள் மருதாணி.
“வா போகலாம்..!” என்றபடி சக்தி அவளின் கைப் பிடித்துக் கொண்டு அழைத்து போக..