அத்தியாயம்-6 சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தங்கள் உடைமைகளுடன் கனடாவிலிருந்து இந்தியா வந்து இறங்கினர், நளன் மற்றும் வினோத் இருவரும். மனதில் ஏதேதோ எண்ணங்கள் பேரலையாய்த் தோன்ற, ஒருவித படபடப்புடன் நின்றிருந்தான் நளன். லக்கேஜ் பெல்ட்டிலிருந்து அவர்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜை எடுத்து இரு ட்ரொலிகளில் அடுக்கிக் கொண்டிருந்த வினோத் நளன் அருகில் வந்தான். நளன் நின்றிருந்த விதத்திலேயே அவன் மனநிலையை புரிந்து கொண்டவன், அவன் தோள் தொட்டு கண்களை மூடி திறந்தான் ஆறுதலாக. “டேய் நளா, […]
Readmoreஅத்தியாயம்-6 சோஃபாவில் கால்நீட்டி அமர்ந்து பொட்டேடொ சிப்ஸை கொரித்துக் கொண்டே டிவி சீரியல் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரா, ஒரு சீரியலின் பெயரைச் சொல்லி “அம்மா அம்மா ஓடி வா ***** சீரியல் போட்டுட்டான்”என்று கிச்சனில் இருந்த ரேணுகாவை அழைத்தாள். “இதோ வந்துட்டேன், அதுக்குள்ளே போட்டுட்டானா, ச்ச கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டான், இந்த தேங்கா சட்னியை தாளிக்க விடுறானா, படுபாவி” என்று சலித்தவர், “சரி இடைவேளை போடவும் வந்து தாளிப்போம்” என்று அடுப்பில் வைத்த தாளிப்பு […]
Readmoreஅத்தியாயம்-4 இடம்: டொரோண்டோ நேரம் இரவு ஏழு மணியைத் தொட்டிருக்க… அந்த பெரிய நட்சத்திர ஹோட்டலுடன் பாரும் சேர்த்து அமைக்கப்பட்டிருந்ததால் பார்க்கிங்கில் வாகனங்கள் நிரம்பி வழிந்தன. பார்க்கிங்கில் நான்கு சக்கர வாகனங்கள் அதிகமாக இருந்தாலும் அது அது அதற்கென்று ஒதுக்கப்பட்ட இரு மஞ்சள் நிற கோடுகளுக்குள் கனகச்சிதமாக பொருந்தியிருந்தது. வெள்ளிக்கிழமை என்றால் வீக்கெண்ட் மூடுக்கு சென்றுவிடும் அந்நாட்டவர்கள், அந்த வெள்ளிக்கிழமையிலும் ஆண், பெண் நண்பர் குழுக்களாகவும், இளம் மற்றும் வயது முதிர்ந்த காதல் ஜோடிகளாகவும், தனிமையில் சிலரும் […]
Readmoreநேத்ரா கூறியதை உண்மையென நம்பி தன் அறைக்குச் சென்ற நந்தகுமரன் அவன் போனை எடுத்துப்பார்க்க, அதில் நோ நோட்டிபிகேஷன் என்று இருந்ததில் கடுப்பானான். மீண்டும் உறுதி செய்துகொள்ள ரீசன்ட் கால் ஹிஸ்ட்ரியில் பார்த்தவன் அதில் சுலோச்சனாவிடம் இருந்து எந்த மிஸ்ஸுடு காலும் வந்த அறிகுறி இல்லாமல் இருக்கவும், “ச்ச இந்த குட்டி பிசாசு பொய் சொல்லீருக்கு, வெளிய வரட்டும் இருக்கு இன்னைக்கு” என்றவன் வேகமாக மற்றொரு குளியல் அறைக்கு செல்ல நினைத்தான், ஆனால் ஏற்கனவே அங்கு ஈஸ்வரமூர்த்தி […]
Readmoreவரம் நீயே 27 (final) ஒரு வாரம் சொந்த ஊரிலேயே தங்கி விட்டு, மதுரை சென்று சேர்ந்தனர். வைசாலியும் அரசனும். அங்கிருந்து இராமநாதபுரம் கிளம்பிச் சென்றனர். அங்கு வைசாலியின் சொந்தபந்தங்களை சந்தித்து, நண்பர்களோடு அளாவளாவி நாட்களை கடத்தினர். அங்கிருந்து கிளம்பும் போது, வைசாலி வேலையை விட்டுவிட்டு கிளம்பினாள். மீண்டும் மதுரை வந்து கொண்டிருந்தனர். அரசன் காரை ஓட்ட, வைசாலி தூங்கிக் கொண்டிருந்தாள். அரசனின் கைபேசி மெல்ல அதிர்ந்தது. பெயரை பார்த்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு எடுத்து […]
Readmoreவரம் நீயே 26 (pre final) மாதவன் தந்தையை பார்த்தபடி அமர்ந்து இருந்தான். மனம் எங்கெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. நேற்று மாலை வைசாலியின் திருமணத்தை நிறுத்தவென சென்றவன், மனம் நொந்து வெளியே வந்திருந்தான். அவனால் வைசாலி அரசனை காதலிப்பதை ஏற்கவே முடியவில்லை. மனம் முழுவதும் கோபம், ஆற்றாமை. வைசாலி வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால் இவ்வளவு கோபப் பட்டிருப்பானா? தெரியவில்லை. ஆனால் அரசனை அவளோடு பார்க்க முடியவில்லை. வைசாலியிடம் மேலும் பேசி மனம் நோகாமல் வெளியே வந்து […]
Readmoreஅடுத்த நாள் அதிகாலையில் வைசாலி எழுந்து பார்க்க, அப்போதும் மண்டபம் பரபரப்பாக இருந்தது. நேற்று இரவு பாதிக்கும் மேல் தூங்கவே இல்லை. வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மணமக்கள் மட்டுமே நிம்மதியாக தூங்கி எழுந்திருந்தனர். திருமண வேலைகள் மளமளவென ஆரம்பிக்க, முகூர்த்தபுடவையை கட்டிக் கொண்டு வந்து நின்றவளை, அரசன் பார்த்துக் கொண்டே இருந்தான். “பார்த்து கழுத்து சுழுக்க போகுது” என்று பார்த்தசாரதி அரசனின் முகத்தை திருப்பி விட, “பழி வாங்குறீங்களா அத்தான்?” என்று கேட்டான். “பின்ன? எங்க […]
Readmoreஅந்த மண்டபம் மொத்தமும் ஆட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் நிச்சயதார்த்தம். நாளை காலை திருமணம். மொத்தமும் மதுரையில் தான் ஏற்பாடாகி இருந்தது. சொந்தபந்தங்கள் நட்புக்கள் எல்லோரும் சேர்ந்து, ஆளுக்கொரு வேலையாக விழாவை கவனித்துக் கொண்டிருந்தனர். அந்த ஆர்பாட்டங்களை வெறுப்பாக பார்த்தபடி உள்ளே நுழைந்தான் மாதவன். திருமணத்தை நிறுத்தியே தீருவேன் என்று முடிவு செய்து சென்றவனை, எந்த வேலையும் செய்ய விடாமல் கட்டிப்போட்டது அவனுடைய தந்தையின் உடல் நிலை. ஆனால் இன்று நிச்சயதார்த்தம். நாளை […]
Readmoreவரம் நீயே 24 வைசாலி க்ளினிக்கில் அமர்ந்து இருந்தாள். பெரிதாக ஆட்கள் வராததால், தன் வேலையை பார்த்துக் கொண்டு இருக்க, நர்ஸ் வந்து நின்றாள். “மேடம்.. உங்கள பார்க்க யாரோ வந்து இருக்காங்க” “யாரு?” என்று வேலையை விடாமல் கேட்டவள், “நான்” என்ற குரலில் வேகமாக நிமிர்ந்தாள். நர்ஸ்க்கு பின்னால் மாதவன் நின்றிருந்தான். ‘இவன் எங்க இங்க?’ என்று அதிர்ந்தாலும், “உங்க வாங்க மாதவன். நீங்க போங்க” என்று நர்ஸை அனுப்பி வைத்தாள். மாதவன் உள்ளே வந்ததும், […]
Readmoreவரம் நீயே 23 மீனாட்சி வீட்டுக்குள் நுழைய, அகிலாண்டேஸ்வரி மட்டுமே அமர்ந்து இருந்தார். அதுவும் வருத்தமாக கோபமாக.. அதை கவனித்தாலும், கவனிக்காதது போல் உள்ளே சென்று உடை மாற்றிக் கொண்டு, தன் வேலைகளை ஆரம்பித்து விட்டாள். என்று சபையில் வைத்து தன்னை அப்படிப்பேசினாரோ, அன்றிலிருந்து அவரிடம் பேசுவதே இல்லை. அன்று அப்படி ஒரு அதிர்ச்சி கிடைத்த பிறகு, மீனாட்சிக்கு உயிரை விடும் எண்ணம் தான் பல முறை வந்து போனது. வீட்டிலும் அகிலா அதே போல் பேசி […]
Readmore