ரொம்ப கஷ்டமா இருக்குது, பெண்களோட நிலை என்னன்னு தெரியலை, பிள்ளைக்காக இரண்டாம் கல்யாணம் அக்கா கணவரை தங்கை கல்யாணம் பண்றது, எங்க தெருவுல இப்ப சமீபத்துல நடந்த விஷயம், அக்காவுக்கு இரண்டு குழந்தை இருக்குது, ஆனா அவுங்களுக்கு உடம்பு சரியில்லையாம், அதனால தங்கச்சிய இரண்டாம் கல்யாணம் கட்டிக்கிட்டாராம். இல்லை புரியலை, இதே மாதிரி பெண்களால செய்ய முடியுமா? அப்ப ஒரு குடும்பத்துல சம்பாதிக்கிற ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்கிற மாதிரி ஆகுது. இது சரியில்லை. அதைவிட தாம்பத்திய வாழ்க்கைங்கிறது எல்லாருக்கும் முழு திருப்தி தரதில்லை. ஆணுக்கு அது முழு திருப்தி தரலைன்னா அவர் ரொம்ப சுலபமா வெளில பார்த்துக்கிறாரு, இல்லைன்னா இந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறாரு. குடும்பத்துல இருக்குறவுங்க கிட்ட இந்த சூழ்நிலையை நான் பேசினப்ப, அப்பா, அண்ணா எல்லாரும் ஆணோட இந்த இரண்டாம் திருமணத்தை ரொம்ப சாதாரணமா எடுத்துக்கிறாங்க. பெண்கள்தான் இதை ரொம்ப எதிர்த்து பேசினாங்க. என்ன மனநிலை இது. எங்கே போயிக்கிட்டு இருக்கோம். எல்லாத்துக்கும் பெண்ணியம் பேசக்கூடாது. எல்லாத்துக்கும் அடிமையாகவும் இருக்க முடியாது. அந்தந்த சூழ்நிலைல என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்யனும். தேவியோட நிலை குழந்தை இல்லைங்கிறது. அதனால வாழ்க்கை முழுமையடயலை. சித்ராவோட நிலை கணவரோட அன்பு கிடைக்கலங்கிறது. அதனால அவுங்க வாழ்க்கையும் முழுமையடயலை. நான் ஒன்னு கேட்கிறேன். ஏன் நாம எப்பவுமே மத்தவுங்கள சார்ந்தே நம்மோட முழுமையை தேடுறோம். கண்டிப்பாக குழந்தைங்கிறது ரொம்ப முக்கியம்தான். முழுமை தர்றதுதான். ஆனா நமக்கு அது கிடைக்கலன்னா தேவி புரிஞசு விலகுறதுமாதிரி பரந்த மனசோட நாம செயல்படனும். முதல்ல பெண்களைப் பற்றி பெண்களே புறம் பேசுவதை நிப்பாட்டனும். ஒருத்தரோட சூழ்நிலைதான் அவுங்களோட செயல்களை தீர்மானிக்குதுன்னு நாம ஆண்களுக்கு சொல்லனும். நாம புறம் பேசுறதையும் குறை சொல்றதையும் நிப்பாட்டுவோம். அது நல்ல மாற்றத்தை கொண்டு வரும்னு நினைக்கிறேன்.