தொடர்கதையை வாசிக்கும் சகோதரிகள் தங்களது விமர்சனங்களை இதில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்கதை நிறைவு பெற்றதும் பிரமாதமான விமர்சனம் அளித்து எம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியமைக்கு இதயப்பூர்வமான நன்றிகள்அக்னி தீர்த்தம் .
வீரபாண்டியன் -தேவசேனா
சந்திரசேனன்-யமுனா
விநாயகம் -சகுந்தலா
ஸ்ரீநிதி
ஜெயக்குமாரி, விஷ்னுபிரியா, சங்கீதா .
அருணாசலம்
கதையின் ஆரம்பம் முதலில் இருந்து நிறைவு வரை எங்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி கதையை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள் சகோதரி.
வீரபாண்டியன் உண்மையில் ஊர் போற்றும் மன்னன் தான் அவனது சரி பாதி தேவசேனா மகாராணி தான் இருவரும் அவ்வளவு அழகான ஜோடிகள்.
வீராவின் ஒவ்வொரு செயலும் அதில் உள்ள நன்மைகளும் குடும்பம் மட்டுமின்றி சுற்றியுள்ள மக்களையும் செழுமையாக வைத்திருந்தது
வீரபாண்டியன் மனதின் காதல் தேவதையான தேவசேனாவை பல இன்னல்களைக் கடந்து திருமண பந்தத்தில் இணைந்து இன்று மகிழ்ச்சியுடன் வாழ்வதை காணும் பொழுது நெகிழ்ச்சியாக உள்ளது.
யமுனா சந்திரசேனனுடன் இறுக்கமான மனநிலையில் திருமண பந்தத்தில் இணைந்தாலும் பிறகு புரிதலுடன் வாழக்கையை வாழ்வது மகிழ்ச்சி .
ஜெயகுமாரி பிள்ளைகளை வீரத்துடனும், விவேகத்துடனும், கருணையுடனும் வளர்த்திருக்கிறார்.
விஷ்னுபிரியா தேவசேனாவை நன்முறையில் வளர்த்து அவளுக்கு பக்க பலமாக வாழ்ந்த தெய்வ தாய்.
அருணாச்சலம் என்ன சொல்ல கதையின் ஆரம்பத்தில் இவருடைய போக்கும் செயலும் கோபத்தை ஏற்படுத்தியது ஆனால் நண்பனால் ஏமாற்றப்பட்டு துரோகத்தால் அவருடைய வாழ்க்கையே புயலில் சிக்கியது போல ஆகிவிட்டது, மனைவிக்கு தான் செய்தது அநீதி என்று மனம் வருந்தி அவர் கதறிய பொழுது கண்கள் கலங்க செய்தது அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மகளுடன் இனியாவது நிம்மதியாக வாழட்டும் என்று நினைத்தபோது மகளின் வாரிசாக மகளின் அரவணைப்பில் வாழ ஆசை கொண்டு இறைவனடி சேர்ந்து மனதை கனக்க செய்து விட்டார்.
ஸ்ரீநிதி தங்க குட்டியின் மழலை மொழியும், அழகிய நடனமும், வீரபாண்டியன் மீது இந்த பிஞ்சு கொண்ட பாசமும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
கதையின் நிறைவு மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
@Anantha jothi சிஸ்டர் உங்கள் கதையை நான் முதன்முதலில் இப்பொழுதுதான் படிக்கிறேன் தெளிவான எழுத்து நடை சுவாரசியம் துளியும் குறையாமல் கதையை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள்
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மனமார்ந்த நன்றிகள் சகோதரிsuper story sis semaiya irunthuchu, romba intersting.