அருமையான கதை.ஆனந்தி யதார்த்தமானவர். நிவி சொல்லவே வேண்டாம், இந்த கதையின் ஆணிவேர், சந்துருவின் சின்ன பிள்ளைத் தனமான கோபம் யுகியின் நிவி மேலான பாசம் எல்லாமே சூப்பரோ சூப்பர்.
அழகான நிறைவான முடிவுடன் கதைக்களம் மனதை மகிழ்ச்சியாக்கியது...
அழகர் என்ற ஒருவரின் செயல் இரு நல்ல பெண்மணிகள், இரு பிள்ளைகள் என அனைவருக்கும் ரணத்தையும் சொல்லில் அடங்கா ஏமாற்றத்தை கொடுத்தாலும் அவரவர் நியாயம் அவரவர்க்கு என்ற முறையில் நியாயங்கள் அனைவருக்கும் நிறைவானதாக இருந்தது... வலியும் வேதனையும் தனக்கு வந்தால் தான் புரியும் என்ற நிலையில் சந்துருவும், யுகியும் வலியை அனுபவித்தவர்கள்...
சந்துருவும், யுகியும் அவரவர் துணையுடன் நிறைவான வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள்