Saala ivana yethuka koodadhu shalini ivana vida koodadhuஎன்னடா உங்க சமூக அமைப்பு - இதுதான் ultimate line இன்னிக்கி.
ஷாலினி இனிமேல் தான் தப்பை சரியா பண்ணப்போறா. அவ நினைக்கறதெல்லாம் அப்படியே நடக்கட்டும். இந்த இரவு ராணி தான் இனிமேல் பிரகாஷ்க்கு பகல் பிசாசாகவும் இருக்கணும். கழுத்துல இருக்குற கயிறு இறுக்கம் தாங்காமல் பிரகாஷ்கு மூச்சு முட்டணும் ஆனாலும் கயிறை கழட்ட முடியாத அளவுக்கு முடிச்சு strong -ஆ இருக்கணும் இவனுக்கும் ஷாலினிக்குமான பந்தத்துல.
ஷாலினி தவறு இழைத்தவள் தான். ஆனாலும் பிரகாஷ் செஞ்சது சாலா ஷாலினி ரெண்டு பேருக்குமே பெரிய துரோகம்.
சொந்தக்காரப் பொண்ணு, வயசுல சின்ன பொண்ணு, விவாகரத்தாகி வாழ்க்கையை இழந்த நிலையில் இருக்கும் பொண்ணு - அவளே சபலப்பட்டு இவனை முதலில் மயக்கினதா இருக்கட்டும். இவனோட வயசு முதிர்வுக்கும் சாலா மாதிரி ஒரு நல்ல மனைவி அமைஞ்சுதுக்கும் இவன் தானே மனவுறுதி குலையாமல் ஒழுக்கம் தவறாமல் இருந்துருக்கணும். அவளை திருத்த கூட வேண்டாம் விட்டு ஒதுங்கி போய் இருக்கலாமே. சாலா கிட்ட சொல்லி இருந்தா அவ அதை அழகா செஞ்சுருப்பாளே. அதையெல்லாம் செய்யாத பிரகாஷ் தான் அதிக பட்ச தண்டனையை அனுபவிக்கனும். முக்கியமா அவனுக்கு இனிமேல் சாலாவோட இளைப்பாற்றும் நிழல் கிடைக்கவே கூடாது. ஷாலினியோட அருகாமை மட்டும் தான் கிடைக்கணும்.அது அப்படியே அவனை சுட்டு பொசுக்கி அவன் தன் மனைவிக்கு செஞ்ச துரோகத்தை மறக்க விடாமல் செய்யணும். ஆனால் சட்டப்படியாச்சு இவனோட சாம்பாத்தியம் பிள்ளைங்களுக்கும் சரியான விகிதத்தில் போய்ச் சேரணும்.
அம்மா சாலா, உங்க அம்மா, மாமியாரு, ஏன் உன்னைப்.படைச்ச இந்த ஆத்தரே சொன்னாக்கூட நீ மட்டும் மனசு மாறி அந்த பிரகாஷை மன்னிச்சுடாதம்மா.