நான் எங்கையுமே ஷாலினியை நல்லவன்னு சொல்லலியே. பிரகாஷ் படு மோசமானவன் என்று மட்டும் தான் சொல்லறேன்.
அது என்னங்க middle age crisis என்று சொல்லி அவனோட ஈனச்செயலுக்கு ஒரு மெலிதான நியாயம் பூசறீங்க.
Moreover புருஷன் கூட இருக்க முடியாமல் வந்தவளுக்கு அப்பிடின்னு ஷாலினிக்கு அவளோட past marriage breakup-கான காரணமே தெரியாமல் அவதான் முன்னாடியும் தப்பானவளா இருந்துருப்பான்னு நாம எப்படி அவளை judge பண்ணலாம்.
அப்படிப்பார்த்தால் அவ மட்டும் இல்லை இன்னிக்கு நிலைமைக்கு சாலாக்கும் அதே label பொருந்துமே. அப்ப சாலா பாண்டியம்மா சொல்லற மாதிரி புருஷனை அனுசரிச்சு அவனை தன் முந்தானையில் முடிஞ்சு வெச்சுக்க தெரியாத ஏமாளி தானா.
ஏங்க விவாகரத்தான சின்ன பொண்ணு தெளிவா தன் சலனத்தை அடக்கணும். நல்ல வாழ்க்கை அமைஞ்சு ரெண்டு teenage பிள்ளைகளோட இருக்கற அப்பா அவரோட middle age crisis -க்கு தீனி போடுவாரு. என்னங்க நியாயம்.
இழந்தவங்க ஏக்கத்தை இருக்கறவங்க exploit பண்ணுவது தான் பெரிய குற்றம். அதுக்காக நான் அவ சாலாக்கு துரோகம் செஞ்சதை மறுக்கலை. பிரகாஷ் செய்ய துணிஞ்ச துரோகத்தை குற்றவுணர்ச்சியே இல்லாமல் இவ தனக்கு சாதகமாக்கிட்டா.
அவளோட safety-க்கு அவ அவன் கிட்ட எதெல்லாம் அடைய முடியுமோ அதையெல்லாம் வாங்கிக்கறா. அவ கோணத்துல அவ சரி தானே.
எல்லாருமே மாதவி மாதிரி கோவலனோட அன்பு மட்டுமே போதும் என்று இருப்பாங்களா என்ன? (கண்ணகி நகைகளை பெற்றுக்கொண்டது மாதவி உடன் இருந்தவர்கள் தான். அவள் கணிகையர் குலத்தில் பிறந்தும் கோவலனுக்கு மட்டுமே உரியவளாய் வாழ்ந்து மறைந்தவள் )
அது மட்டுமில்லை. இனிமேல் தான் பிரகாஷ்-ஷாலினி உறவுல கசப்பு கூடி வெறுப்பும் கூடும் இருவருக்குமே. அந்த தண்டனை கண்டிப்பாக ஷாலினிக்கு வேண்டும். அது தான் அவ சாலாக்கு செஞ்ச துரோகத்துக்கு தண்டனை.
இத்தனை வயசுக்கு மேல இவங்க ரெண்டு பேருக்குமே பிள்ளை பொறக்கறதுக்கு chance கம்மி. அப்படியே பொறந்தாலும் பிரகாஷ் பாடு சூப்பரா இருக்கும்.
இவன் தன்னோட உன்னதமான பொண்டாட்டிக்கு செஞ்ச துரோகத்துக்கு, சரியில்லாத துணைவியால வரும் கஷ்டம் எல்லாத்தையும் அனுபவிக்கட்டும். அது தான் நீங்க சொன்ன-அவனுக்கு வந்த middle age
crisis -கான மருந்து.