முன்னாடி ரெண்டு மூணு யூடி எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியல அதான் கமெண்ட் பண்ணல. இந்த/பாஸ்ட் யூடில நடக்கறத எதிர்ப்பார்த்தாலும் தாங்கலப்பா. இந்த ப்ரகாஷு நாயிக்கு மன்னிப்பு கேட்ட உடனே கிடைச்சிடணும் இல்லனா தற்கொலை (ட்ராமா) செய்வான். ஏன் சகுந்தலா புள்ளைங்கள கரையேத்த சாலா எந்த அடிப்படையில எந்த டாஷூக்காக நகைய அடமானம் வெச்சா. இவங்களுக்கு தான் நன்றி இல்லை. இவங்க மாதிரி தான இவங்க புள்ளையுமிருப்பான். அப்பன் பிள்ளைகளுக்கு செய்யறது நன்றி கடன்ல வரும்னா அம்மா செய்யறது? ஏட்டிக்கு போட்டி வேணும்னு சொல்லல.குடும்பங்கற அமைப்புல கணவன் எவ்ளோ முக்கியமோ மனைவி அவ்ளோ முக்கியம். ஆனா இத பெண்களே எவ்ளோ உணர்ந்துருக்காங்க? அதுவும் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அப்பா/அம்மா ஆன பிறகு நிறைய பாரபட்சம். இதே விஷயத்தை அம்மா செய்தால் புள்ளைங்களுக்கு இதே மனப்பான்மை இருக்குமா? எங்க வீட்ல சாப்பிடும் பண்டங்கள தவிர எது செய்வது என்றாலும் (அப்பாவிடம் சிபாரிசிற்ககு சென்றாலும்/ அப்பாவே வாங்கி தருவதாக இருந்தாலும்) அம்மா ம் என்றால் தான் வாங்க முடியும். கணவன்/மனைவியாக இருப்பவர் அடுத்தவருக்கான மரியாதையை பிள்ளைகள் தருவதை உறுதி செய்ய வேண்டும். அதற்க்கு இருவருக்கும் பரஸ்பரம் மரியாதையிருக்க வேண்டும். குணக்கேடான காரியங்களை தவிர புறக்காரணிகள் மரியாதையின்னமக்கான காரணமாக இருக்க கூடாது. சாலா இதுல கரெக்டா இருக்கா. நாம நினைக்கறத நடக்க வைக்க எந்த எல்லைக்கும் போகறது தான் மனுஷ மனசு. சிலர் அத ஒதுக்கி தள்ளுவாங்க. நெறைய பேர் மாட்டிப்பாங்க. குமரன் தேவிகிட்ட வரதும், பேசறதும் அடுக்காது. இதுலலாம் மனுஷங்க குறிப்பா பிரகாஷும் குமரனும் ஒண்ணு தான். அவன் தன்னை பாவமா காட்ட ட்ரை பண்றான்னா, இவன் அடாத பழி சொல்றான்.ஒருத்தன ஒருத்தன் மிஞ்சறாங்க. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற. பசங்கள ஒருத்தர் கண்டிக்கும் போது இன்னொருத்தர் அவங்க முன்னாடி பார்ட்னர தப்பு சொல்லக்கூடாது. வீட்லயே இதனால நியாயம்,தேவை இதெல்லாம் அனாவசியம்ங்கற மெண்டாலிட்டிய உருவாக்கிடறாங்க. இப்ப சாலா விட்டு கொடுத்து போறாளே இவங்களுக்காக, இதனால இவளுக்கு கஷ்டமும் பசங்களுக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சியும் தான் மிச்சம். வக்கீல் செமயா டெஸ்ட் வச்சி நிதர்சனத்த புட்டு வச்சு,தெளிவாக்கி தேவிக்கு வழி சொல்லிருக்கார். அருமை.