Nice update ma
ஆமாங்க, வெற்றி எவ்வளவு நல்ல மனுஷன்…அடப்பாவி வெற்றி அவ
சொன்னது மாதிரி வீடு கட்டி
என்ன பிரயோஜனம்
பால் அம்மாவ காய்ச்ச
சொல்லிட்டு இப்படி
கடைக்கு போறானே
சேலை எடுக்க
என்னைப் பொறுத்த வரை அபி பிள்ளைகள் இருப்பதை மறைப்பதில் தான் பிழையே அல்லாமல் அவளின் மேல் வேறு தவறில்லை…முட்டாள் என்று சொல்லலாம்.சரண்யா வெளிய வர வரைக்கும் எப்படி சமாளிக்க போறோமோ என்று பயம் இருந்தது இப்போ எதையும் சமாளிக்கும் தைரியம் வந்திடுச்சு
குழந்தைங்க சாப்பாட்டு கூட ஏங்குறதை பார்த்து எவ்வளவு தவிச்சிருப்பா ஆனால் இப்போ அவளோட உழைப்பில் குழந்தைங்களுக்கு பிடிச்சதை வாங்கி கொடுத்து அவங்க சந்தோஷ படுறதை பார்க்கிறது மனசுக்கு அவ்வளவு நிறைவு கொடுக்கும்
சரண்யாவோடு சேர்ந்து வாழணும் என்கிற எண்ணம் இல்லையாம் ஆனால் அவ எப்படி இருக்கிறாள் என்று தெரிஞ்சுக்கணுமாம் ஏன் அபி கூட வாழும் போது அவ வந்து பிரச்சினை பண்ண கூடாது என்று பயமா
அபி மனசுல கள்ளம் இல்லையா இப்போ அவ மனசுல இருக்க காதலே கள்ளம் தான் அடுத்தவ புருஷன் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா அவன் மேல் இருக்குறது கள்ள காதல் தான் சரண்யாவ கல்யாணம் செய்யுறதுக்கு முன்னாடி வரை தான் அது பேர் காதல்
வசதி இல்லை என்று பொண்ணு கொடுக்கல இப்போ வசதி வந்ததும் அடுத்தவ புருஷனா இருந்தாலும் பரவாயில்லை என்று பொண்ணை கொடுக்க தயாராக இருக்காங்க எவ்வளவு மானமுள்ள குடும்பம் இது
இன்னைக்கு அபி மூஞ்சை கறுக வச்சது தான் வெற்றி வாழ்க்கையில் செஞ்ச ஒரு சின்ன உருப்படியான விஷயம்
என்னங்க இது சரண்யா குழந்தைகளோடு எதிர்ல வந்திருந்தால் நல்லா இருந்து இருக்கும்
அடுத்த எபில இந்த திவ்யா எப்படி வீட்டு வேலை செய்றா என்று காட்டுங்க
அவனுக்கு பிள்ளைகள் இருக்கிறதை மறைக்கிறது மட்டும் இல்லை அவனை கல்யாணம் செய்யணும் என்று அலையுறா இதுக்கு பேரு முட்டாள் தனம் இல்லை ஒழுக்க கேடு . எப்போ வெற்றிக்கு கல்யாணம் ஆனதோ அப்பவே அவனை விட்டு விலகி இருக்கணும். அவ வேற ஒரு கல்யாணம் செய்யறதும் செய்யாததும் அவ விருப்பம். ஆனால் கொஞ்சம் கூட ஒழுக்கமே இல்லாமல் அவன் குடும்பத்தையே கைக்குள்ள வச்சிகிட்டு கல்யாணத்தை நடத்த அலையுறா .. இதுல வெட்கமே இல்லாமல் வீடு பால் காய்ச்ச முதல் ஆளாக போய் நிற்குறா ..என்னைப் பொறுத்த வரை அபி பிள்ளைகள் இருப்பதை மறைப்பதில் தான் பிழையே அல்லாமல் அவளின் மேல் வேறு தவறில்லை…முட்டாள் என்று சொல்லலாம்.
இங்கு மிகப் பெரிய குற்றம் செய்தவனே வெற்றி தான்…அதன் பிறகு அவன் குடும்பம்.
திவ்யா தான் வேலை செய்யும் போது இல்லை ஒரு வேலைக்காரியை வைத்து அவளுக்கு சம்பளம் கொடுக்கும் போது தான் சரண்யாவும் பிள்ளைகளும் ஒசிக் கஞ்சி குடிக்கவில்லையென்று புரியணும்.