Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அப்டேக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு விஷயம் நான் தெளிவுபடுத்திக்கறேன் அன்பூஸ்.

நான் வேணும்னு நேரம் தாழ்த்தி அப்டேட் போடலை. உங்களை காக்க வைக்கனுன்றதுக்காகவும் இல்லை. ப்ளீஸ் இதை புரிஞ்சுக்கோங்க.

என் பையனுக்கு எக்ஸாம் ஸ்டார்ட் ஆகிடுச்சு. பைனல் எக்ஸாமுக்கு முன்னாடி ஒவ்வொரு டெஸ்ட்ன்னு போட்டு படுத்தறாங்க. கூடவே இருந்து பார்க்கவேண்டி இருக்குது. சம்டைம்ஸ் அப்டேட் டைப் பண்ணவே லேட் ஆகிடுது.

அதனால உண்டாக்கற தாமதம் தான் ஏழு மணி எட்டு மணின்னு அப்டேட் போடறது.
கிடைக்கிற கொஞ்சம் நேரத்துல டைப்பண்ணி வந்திடறேன்.

எல்லாரும் உரிமையா கேட்கறீங்க. எனக்கும் சந்தோஷம் தான். அப்படியே என்னையும் கொஞ்சம் நீங்க எல்லாரும் புரிஞ்சிக்கிட்டா சந்தோஷமா இருக்கும் :)

டெய்லி பதிவு உங்களுக்கு எப்படி பழக்கமாகிடுச்சோ எனக்குமே அப்படி தான். உங்க கமெண்ட்ஸ் மூலமா உங்களோட நான் அப்படி ஒரு கனெக்டிங்ல இருக்கேன். :)

முக்கிய குறிப்பு :- இன்னைக்கு ரெண்டு பதிவா போடறதா இருந்தேன். டைம் இல்லை. அதனால நாளைக்கு அந்த அப்டேட்டை போடறேன். சரியா :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 8 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

அடடா ஜோதிக்கு கொடுக்கு முளைச்சுடுச்சே......
நல்லா பேசுறானே....... மச்சான் காத்து இங்கே வரை வீசுது......

அப்போ இந்த புல்லை ஓகே னு சொல்லி தான் தாலி கட்டியிருக்கான் வாத்தி..... அப்புறம் என்னவாம்..... ஏன் அவனோட போகலை???
'என்னமோ அவர் என்னை .....' அப்புறம் என்னய்யா???
ஜனநாயக நாட்டில் சொல்லவிடுறாங்களா இந்த சரண்.........

மூத்தவன்னா என்ன வேணும்னாலும் பேசலாம் முடிவு பண்ணலாமா??? ஒருத்தனையும் மனுஷனா மதிக்கிறதில்லை......
மருமகன் கிட்ட தலையை தலையை ஆட்டிகிட்டு இப்போ நிறுத்தாறாராம்.......
60க்கு மேலதான் கிறுகிறுப்பு...... 60 ஆச்சா இல்லையா???

சகலையை வச்சி என்னப்பா பண்ணுவ???
ஆகமொத்தம் விஜய் கூட பேக் பண்ணி அனுப்பியாச்சு பவியை.......
போன் வேற இல்லை....... இனி நோ PG???

 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

சீ இந்த வசந்தியெல்லாம் ஒரு பொம்பளைதானா?
அம்மாங்கிற சொல்லையே களங்கப்படுத்துறாளே

நிஜமாவே பவித்ராவை இவள்தான் பெற்றாளா?
இல்லை யாருடைய குழந்தையையாவது எடுத்து வளர்க்கிறாளா?

கூமுட்டைத்தனமா வேலை செய்தாலும் தங்கையை இப்போவாவது பரஞ்ஜோதி காப்பாற்றினானே

ஜெகநாதன் ம்ம்ம்........ சொல்லவே வார்த்தையில்லை
அருமை அருமையான மிகவும் அருமையான மனிதன்

மச்சினிச்சி ஊருக்கு கிளம்பியதைக் கேட்டதிலிருந்து பாடுபடுவதென்ன?
டிரைவர் நெம்பர் பிடித்து பவியிடம் பேசுவதென்ன?
விஜய்யிடம் அவளை சேர்ப்பது வரை ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து யோசிச்சு அருமையாக வேலை செய்திருக்கிறான்

டம்மி பீஸ் பழனியப்பனும் டெர்ரர் பீஸ் எருமைநாயகம் நோ நோ அருமைநாயகமும் ஜெகனின் காலில் பூப்போட்டு வணங்க வேண்டும்

ஹா ஹா ஹா
பவித்ராவின் வாழ்க்கையை வளமாக்கவே மழை வந்ததா?

"மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே
வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே
மழை போல் நீயே...........
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???பவித்ரா படிக்க போகாம,இங்கே இருந்து தப்பிச்சா போதும்னு போறதை போல இருக்கா???.ரெண்டு நாள் லீவுக்கு ஊருக்கு வந்த பொண்ணுட்ட நாலு வார்த்த நல்லதா பேசி,புடிச்சது செஞ்சு கொடுக்காம இப்படி கரிச்சு கொட்டிட்டு இருந்தா அப்படி தான் நெனப்பா???.இது பேசுன பேச்சுல பவித்ரா போனை எடுக்காம போயிட்டாளே????.

வசந்தி ஆடுன ஆட்டத்தை பார்த்து பரஞ்ஜோதிக்கே கோபம் வந்துடுச்சு???.வசந்தி செய்த தவறை சொல்பவன்,அம்மாவை இப்படி வச்சிருக்கதால தான் மதிக்க மாட்டேங்கறாங்கனு அருமை செய்த தவறையும் சுட்டிக்காட்ட தவறவில்லை???வசந்தி,அருமை திருந்தாத ஜென்மங்கள்??

அருமை,வசந்தி இருவரும் அப்பு படிக்க செல்வதை விரும்பாததை புரிந்து ஜோதி அவளை ஊருக்கு அனுப்ப,விஷயமறிந்த ஜெகன் மிட்நைட் ஆகும் என கோபப்படுபவன், விஜய்யை அழைத்து வர சொல்லி கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் பயன்படுத்தி ஜெகன் கலக்கறார்???.

மழையால் பவித்ராவை பிஜிக்கு அழைத்து செல்ல முடியாததால் வீட்டுக்கு அழைத்து போவதாக விஜய் சொன்னதை கேட்டு ஜெகன் இன்ப அதிர்ச்சியில் இருக்க,விஜய்,ஜெகனுடன் சரளமாக பேசுவதை கண்டு என்னடா நடக்குது என அதிர்ச்சியில் அப்பு????.

ஒரு வழியா பவித்ரா, விஜய் வீட்டுக்கு போகப் போறா???.மழை,இரவு நேரம், போனும் இல்லாமல் ஊருக்கு செல்பவளை எண்ணி தவிப்பில் இருந்தவனுக்கு ,அப்பு,விஜய்யின் வீட்டிற்க்கு செல்வதை கேட்ட மகிழ்ச்சியில் ஜெகன்????.
 
Last edited:
Top