இந்த பதிவிலிருந்து ஒன்று தெரிகிறது தப்பு பண்ணிவிட்டோம் என்று தெரிந்தவுடன் ஆண்கள் மான அவமானம் பார்க்காமல் உடனே மன்னிப்பு கேட்பது மாதிரி பெண்களால் ஏன் முடிவதில்லை? இதை ஒரு பெண்ணாக இருந்து கொண்டு என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை...உதயா மாதிரி பெண்களால்தான் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று சொல்கிறார்கள்? இதயா மனம் கலங்கி பேசுவது மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் சரண்.. ருக்மணியும் சிவசுந்தரமும் காலம் கடந்து திருந்தியிருக்கிறார்கள். கலெக்டர் இப்போதுதான் சரியாக பேசியிருக்கிறார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு இனி அவர் இதயாவுடன் குடும்பம் நடத்துவார்?
இனி இதயா என்ன செய்யபோகிறாள் என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம் வேலவன் சொன்னது மாதிரி இதயா இன்னமும் அவள் வாழ்க்கையை வாழாமல் ஏன் வீண்டித்துக்கொள்ள வேண்டும்?
மிக அருமையான பதிவு.