ஆனா, இங்க தான் நமக்கு கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுது!ஜாலியா அனுபவித்து வாழ்ந்த துரியோதனுக்கு நம்ம கோயில் கட்டி கும்புடல. கொஞ்ச நாள்ல மறந்துட்டோம்.
கஷ்டப்பட்ட பாண்டவர்களுக்கு தான் மதிப்பு கொடுத்து, சாமியா கும்புடுறோம். கடவுளே ஆனாலும் கஷ்டப்பட்டு தான் ஆகனும். வேற வழியில்லை.
முக்கியமா குழந்தை வளர்ப்பில்!
நாம் கேட்டு வளர்ந்த இந்த மாதிரி மாரல்களையும் எத்திக்ஸ்களையும் சொல்லி வளர்த்தால், இப்ப இந்த ஜெனரேசன் ஆட்கள் unfit for society என்கிறார்கள்!
எல்லா அயோக்கியத் தனத்தையும் செய்து விட்டு அதற்கு ஸ்மார்ட் ஒர்க் என்று அழகு பெயர் வைத்துக் கொள்கிறார்கள்! Survival of the fittest என்கிறார்கள்!
நேர்மையாக இருந்தால் பைத்தியக் காரன் பட்டமும், பிழைக்க தெரியாதவன் பட்டமும், நேர்மை யாக தப்பை எடுத்து சொன்னால், நக்கீரர் பரம்பரை என்று கிண்டல்!
சரி என்று காலத்திற்கு ஏத்த மாதிரி கெட்டது சொல்லிக் கொடுக்கவும் மனசு வர மாட்டேங்குது!
இப்போது பேரன்டிங் கொஞ்சம் கஷ்டம் தான்!