Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

“அண்ணியா?? யார் அண்ணி உனக்கு?? என்னை ஒருதடவை அப்படி சொல்லிருப்பியா.. என்னை விட சின்னவ அவ உனக்கு அண்ணியா..?” என்று ஆங்காரமாய் கத்திக்கொண்டு வெளியே வந்தாள் பமீலா.

“ஷ்...!!!” என்று வனமாலி நெற்றியைத் தேய்க்க, அவனின் மறுகரமோ கமலியின் கரத்தினை பற்றியிருந்தது ‘நீ எதுவும் பேசிடாதே..’ என்று சொல்வதாய்.. கமலியும் அது புரிந்தவள் போல அப்போதைக்கு பேசாது இருக்க, மணிராதாவோ இருவரையும் பார்த்தவர் “வந்தனா சாப்பிட எடுத்து வை..” என்றார்.

“நாங்க சாப்பிட்டோம் ம்மா..” என்றவன் “என்ன சத்தம்...” என்றான் பொதுவாய்..

இந்திரா வந்தவரோ இவர்கள் இருவரையும் பார்த்து ஒன்றும் சொல்லாது இருந்துகொள்ள, “அத்தை நீங்க இன்னும் எங்களுக்கு ஆசிர்வாதம் செய்யலை..” என்று வனமாலி சொல்லியபடி எழ, அவனோடு சேர்ந்து கமலியும் எழுந்தது அனைவர்க்கும் புதிதாய் இருந்தது.

சண்டை அவள் மூலமாய் வரும் என்று பார்த்தால், இங்கே நடப்பது எல்லாமே வேறாக இருந்தது. வனமாலி கமலியைப் பார்த்தவன், இந்திராவின் அருகே செல்ல “ம்மா நீ அவங்களுக்கு எதுவும் செய்யக் கூடாது...” என்று பமீலா நடுவே வந்தாள்..

‘ச்சே என்ன இந்த பெண்..’ என்று மணிராதா அவளை “பமீலா என்ன இதெல்லாம் என்னாச்சு உனக்கு..” என்று திட்ட,

“அடேங்கப்பா.. என்ன ப்ளேட் மாறுதோ.. அப்போ உங்க பொண்ணு வாழ்க்கைய இவ கெடுத்துடுவான்னு பயந்து எல்லாத்துக்கும் சும்மா இருப்பீங்க.. நாங்க எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பாக்கனுமோ..” என்று கத்த, வந்தனா அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எரிச்சலோடு உள்ளே சென்றுவிட்டாள்.

கமலியின் கரங்களை பற்றியிருந்த வனமாலியின் பிடியோ இறுக, கமலியின் பார்வை அப்போதும் வனமாலியிடம் தான் இருந்தது.

“இப்போ உனக்கு என்ன வேணும் பமீலா..” என்று அவன் பமீலாவிடமே கேட்க,

“இவ இருக்கிற இந்த இடத்துல நான் இருக்க மாட்டேன். எங்க பங்கு சொத்தை பிரிச்சு கொடுங்க. நாங்க தனியா போறோம்..” என்றாள் கமலியின் முகத்தினை வெறுப்பாய் பார்த்து.

“ம்ம் அப்புறம்..”

“என்ன வனா மாமா நான் கதையா சொல்றேன்.. எங்களுக்கு சேர வேண்டியதை பிரிச்சு கொடுங்க.. நாங்க போறோம்..”

“எங்க போவீங்க??”

“எங்க போவோமா.. ஏன் போக இடமில்லையா என்ன?? எங்கப்பா வீடு கடல் மாதிரி இருக்கே...” என்றாள் பமீலா எகத்தாளமாய் கமலியைப் பார்த்து.

ஆக இதெல்லாம் கமலியை சீண்டவும், தூண்டி விடவும் தான் என்று வனமாலிக்கு நன்கு புரிய, கமலியைப் பார்த்தவன் “அதோ அதான் நம்ம ரூம் நீ போய் ரெஸ்ட் எடுக்கிறதுன்னா எடு.. எனக்கு வெளிய வேலை இருக்கு..” என்று நகரப் போக,

“எனக்கு பதில் சொல்லாம எங்கயும் போகக்கூடாது..” என்றாள் பமீலா.

வனமாலி இந்திராவைப் பார்த்தவன் “இவளுக்குத்தான் புரியலை.. உங்களுக்குமா எதுவும் தெரியாது. ஏன் அத்தை இப்படி இருக்கீங்க??” என்றான்.

அவரோ “இல்ல வனா.. அது.. அது வந்து...” என்று தயங்கினார்.

“என்ன வனா...” என்று மணிராதா கேட்க,

“ம்மா இது உனக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலை.. ஆனா மாமாவோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆனப்பிறகு தான் இதை சொல்லனும்னு மாமா உயில் எழுதி வச்சிருக்கார்..” என்றவன்,

கமலியின் திகைத்த முகத்தினைப் பார்த்து “இது எனக்கும் தெரியாது சங்கிலி தாத்தா நேத்து காலைல தான் சொன்னார்..” என, “தாத்தாவா..??!!” என்றாள் கமலி வியந்து.

“ம்ம்.. பெரிய வீடு சிவகாமி அத்தைக்கும் கமலிக்கும்.. பின்னாடி தெருவில இருக்க இன்னொரு வீடு தான் இந்திரா அத்தைக்கும் பமீலாவுக்கும் மத்தது எல்லாம் பாதி பாதின்னு எழுதிருக்கார்..” என, இது மணிராதாவிற்கே புதிய விசயமாய் இருந்தது.

“என்ன அத்தை உங்களுத் தெரியும் தானே..” என்று வனமாலி கேட்க,

“ம்ம்..” என்றார் இந்திரா.

“ம்மா.. என்ன இது?? ஏன் என்கிட்டே சொல்லல நீ??” என்று பமீலாவின் மொத்த கோபமும் இப்போது அவளின் அம்மா மீது திரும்ப,

“எ.. எனக்கு இப்போதான் இவங்க கல்யாணத்துக்கு முதல்நாள் தெரியும்..” என்று இந்திரா சொல்ல, ஆக இதை சொல்லித்தான் சங்கிலிநாதன் அனைத்து ஏற்பாடுகளும் செய்தாரோ என்று அனைவர்க்கும் புரிந்தது.

“இல்ல.. இல்ல.. இல்ல.. அது என் வீடு.. நான் பிறந்து வளந்த வீடு.. அதை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.. முடியவே முடியாது.. நோ...” என்று பமீலா பைத்தியம் பிடித்தவள் போல கத்த, கமலிக்கோ ‘இதென்னட...’ என்றுதான் ஆனது.

வனமாலியோ ‘எல்லாம் உங்களால் தான்..’ என்று மணிராதாவைப் பார்க்க,

அவரோ “இந்திரா அவளை உள்ள கூட்டிட்டு போ..” என,

“நான் ஏன் போகணும்?? ஏன் போகணும்?? முடியாது.. இதுவும் என் வீடு.. அதுவும் என் வீடு.. நான் போகவே மாட்டேன்..” என்று அப்படியே தரையில் சம்மணம் இட்டு அமர்ந்துகொண்டாள் பமீலா.

அவளைப் பார்க்கும்போதும், அவள் பேசுவதைப் பார்க்கும்போதும் இவள் இயல்பாய் இல்லையோ என்றே நினைக்க முடிந்தது கமலிக்கும் வனமாலிக்கும்.
Nice Ep
 
Top