அத்தியாயம் – 26 அந்த விண்கலம் ஆர்ட்டர் கிரகத்தை நெருங்கிக் கொண்டிருக்க, நால்வரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். லூனாவுக்கும் அந்தக் கிரகத்தின் பெயர் மட்டுமே தெரியுமே ஒழிய, அதைப்பற்றிய விபரம் ஏதும் தெரியாது. இப்போது அவர்களது கண்களுக்கு முன் அந்த அதிசயம் விரிந்திருந்தது. ‘ஆர்ட்டர்’ என்பது ஒரு கிரகமாய் அல்லாமல் ஐந்நூறு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருப்பது போல அவர்களுக்கு தென்பட்டது. இதில் எந்த இடத்தில் இறங்கி, எங்குச் செல்வது என்று அவர்களுக்குப் புரியவில்லை. சிறிது […]
Readmoreஅத்தியாயம் – 25 அந்த இடத்தில் கனத்த அமைதி நிலவியது. நந்தினி, ஆரியன், ஆதி மூவரும் சிறிதளவு கூட அசையாமல் நின்றிருந்தனர். அந்த ஆயிரக்கணக்கான வீரர்களும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிற்பது என்று நினைத்த நந்தினி, ஓரடி முன்னால் எடுத்து வைக்க, வீரர்களும் தங்களது ஆயுதங்களைத் தூக்கினர். அதைக் கண்ட நந்தினி பின்வாங்கினாள். ஆரியன், “இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே நிக்கிறது ?” என்று கேட்டு சலிக்க, ஆதி, “ஏன் […]
Readmoreஅத்தியாயம் – 24 நந்தினிக்குத் தலை மிகவும் பாரமாக இருப்பதைப் போல உணர்ந்தாள். மெல்ல சுயநினைவுக்கு வந்தவள், எழுந்து அமர்ந்தாள். தன்னை சுற்றிப் பார்க்க, ஏதோ ஒரு பனிப் பிரதேசத்தில் இருப்பதைக் கண்டாள். அந்த இடம் முழுவதும் பனியால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மெல்ல மெல்ல அவளுக்கு அப்போது தான் சற்று முன் நடந்தது அனைத்தும் வரிசையாக ஞாபகம் வந்தது. வேகமாக எழுந்து ஆரியனையும் ஆதியையும் தேடினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியாமல் போக, வேறு […]
Readmoreஅத்தியாயம்- 23 கிரகம் : கயா இடம் : வெலாரிஸ் கோட்டை ப்ரொமேத்தியஸ் அந்தக் கோட்டையில் இருந்த தோட்டத்தில் தனித்து அமர்ந்திருந்தான். ஆனால், அவனது முக பாவனைகளை வைத்துப் பார்த்தால், அவன் அதற்காக வருத்தப்படுவது போலத் தெரியவில்லை. மாறாக அவன் கண்கள், அவன் ஏதோ யோசனையில் மூழ்கி இருப்பதைக் காட்டியது. எவ்வளவு நேரம் அவ்வாறு அமர்ந்திருந்தானோ தெரியவில்லை. திடீரென்று அவன் தோள் மீது ஒரு கை படவே டக்கென திரும்பிப் பார்த்தான். அங்கு அவனை விட […]
Readmoreஅத்தியாயம் – 22 மண் துகள்கள் சரியச் சரிய, மூவரின் இதயத்துடிப்பும் எகிறிக் கொண்டிருந்தது. அதே நேரம் அவர்களது கால்கள் ஈரத்தை உணர, அப்போது தான் தரையைப் பார்த்தனர். கடிகாரத்தில் மண் துகள்கள் சரிய ஆரம்பித்தவுடன், சுவரில் இருந்த சிறு துளைகள் மூலம் தண்ணீர் வர ஆரம்பித்ததை உணர்ந்தனர் ஆரியனும், ஆதியும். அவர்கள் ஏதோ சொல்ல வருவதற்குள், நந்தினி, “இரண்டு பேரும் கொஞ்ச நேரம் வாயைத் திறக்கவே கூடாது” என்று அழுத்தமாகக் கூறினாள். அதற்குள் பாதி நேரம் குறைந்திருக்க, […]
Readmoreஅத்தியாயம் – 21 ஆரியன், “அந்த விடுகதையை அப்புறம் பார்க்கலாம். இப்ப மொதல்ல இந்த டிரெஸ்ஸ மாத்தணும்” என்றான். மற்ற இருவருக்கும் அது சரியெனப் படவே மூவரும் உடைமாற்றி வந்தனர். மூவரும் எவ்வளவு முயன்றும் முதல் இரண்டு வரிகளைத் தவிர மற்ற வரிகளுக்குப் பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆரியன், “Hail the searchers we say அப்படின்னா அந்த கல்ல தேடுறவங்கள பாராட்டுறாங்க. அப்புறம் இன்னும் ஆறு கதவுகள் இருக்குன்னு போட்டிருக்கு” என்றான். மற்ற இருவரும் அவனை முறைத்துப் […]
Readmoreஅத்தியாயம் – 20 அந்த பார்ச்மென்ட்டை சுற்றி மூவரும் அமர்ந்து இருக்க, அவர்கள் எண்ணங்களோ பல்வேறு இடங்களைச் சுற்றிக் கொண்டிருந்தன. ஆரியன் அந்த பார்ச்மென்ட்டை பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, நந்தினி, “ஒவ்வொரு வரிக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு. நாங்க ஆறு பேரும் தனித்துவம் மிக்கவர்கள், அழியா சக்தி கொண்டு தொடர்ந்து வருவோம்-னு இருக்கு” என்றாள். ஆதித்யன், “ஒருவேளை இது அந்தச் சிற்றரசர்கள குறிக்குதா ? ஆனா, […]
Readmoreஅத்தியாயம் – 19 Morse code மோர்ஸ் கோட் என்பது டெலெகிராப் ( Telegraph ) என்னும் தொலைத்தொடர்பு சாதனத்தில் பயன்படுத்தக் கூடிய குறியீடுகளாகும். இதில் வெறும் இரண்டு வகையான குறியீடுகள் மட்டுமே இருக்கும். அவை புள்ளி (Dits) மற்றும் கோடுகள் (Dahs). ஆங்கிலத்தில் உள்ள இருபத்து ஆறு எழுத்துக்கள், அரபு எண்கள் போன்ற அனைத்திற்கும், தனித்தனியாக குறியீடுகள் உள்ளன. Telegraph-ஐ உருவாக்கிய Samuel Morse என்பவரின் நினைவாக, இந்தக் குறியீட்டுக்கு Morse code என்று பெயரிடப்பட்டது. […]
Readmoreஅத்தியாயம் – 18 நினைவுகளில் கூட அந்தப் பேரரசரைப் பார்க்கும் போது, ஒரு கம்பீரம் தென்பட்டது. சிறிது சிறிதாக அந்த நினைவலைகள் சிதற, மீண்டும் ஆதித்யன், ஆரியன் மற்றும் நந்தினியின் நினைவுகள் விண்வெளி வாகனத்தில் இருந்த அவர்களது உடல்களுக்குள் திரும்பின. அவர்கள் தன்னிலையை அடைவதற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. முதலில் நந்தினி, “டைட்டன் மிகப் பெரிய புத்திசாலி தான். ஆனால், வல்கன் அவரைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ?” என்று கேட்டாள். பொசய்டன், […]
Readmoreஅத்தியாயம் – 17 அவன் பாடியதை மெய் மறந்து கேட்டவள், அந்தப் பாடலின் வரிகளின் பொருளில் மூழ்கிப் போனாள். ஒரு பாடலிலே தன் காதலை எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டான் என்று வியந்தாள். அவன் பாடி முடித்த பின்னர், “நீ இவ்ளோ நல்லாப் பாடுவியா ஆதி ?” என்று கேட்க, “நீ ஒரிஜினல் வெர்ஷன் கேட்கலமா, அதான் இப்படி சொல்ற” என்று சிரித்துக் கொண்டே கூறினான் ஆதி. “எனக்கு இதுதான் புடிச்சிருக்கு” என்று புன்னகையுடன் கூறினாள் நந்தினி. […]
Readmore