Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kollai Nila

கொள்ளை நிலா – 19 (3)

“அவ சொன்னாளா என்னை கொண்டுபோய் புருஷன் வீட்டுல விடுன்னு….” “சரி நீ கூப்பிடு?…” என வெற்றி சொல்ல, “அவளா தானே போனா. நான் கூப்பிட மாட்டேன். தானா வரட்டும்…” என்றவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் வெற்றி இருக்க, “இன்னும் என்னடா?…” என்றான் அவன். “நான் வேணும்னா இந்த ட்ரிப்க்கு போறேனே சூர்யா…” “ஒன்னும் தேவை இல்லை. இப்போ ஜெய் பக்கத்துல நீ இருக்கறது தான் ரொம்ப முக்கியம். நான் போய்ட்டு வரேன். பத்து நாள் தானே? […]


கொள்ளை நிலா – 19 (2)

“என்னாச்சு அப்படியே சைலன்ட் ஆகிட்டீங்க? இதை ஈஸியா எடுத்துக்கனும் மிஸ்டர் மெக். சும்மா சும்மா சூடாகிட்டு…” என சிரித்தவள், “ஆனா அந்தம்மாவுக்கு ஒரு நாள் இருக்குது. என்கிட்டே வசமா சிக்கின பின்னாடி என் பக்கமே வராம போகும் பாருங்க…” என சொல்ல இத்தனை விளக்கத்திற்கு பின்னும் அவன் முரண்டுபிடித்து தான் அமர்ந்திருந்தான். “நீங்க முன்னாடி கேட்ட சில்லி சிக்கனை இப்போ செஞ்சு தரவா? கொஞ்சம் கூல் ஆவீங்க…”  என்று கிண்டல் பேச, “ஒன்னும் வேண்டாம் போடி…” என்று […]


கொள்ளை நிலா – 19 (1)

நிலா – 19 அந்த ஒருமாதமும் மிக சுவாரசியமாகவே நகர்ந்தது. ஹரிணியின் புகுந்த வீட்டில் ஓரளவு இறங்கி வந்து தன் பையன் மற்றும் மருமகப்பெண்ணை அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனாலும் அவர்கள் குடும்பத்தில் ஹரிணியின் மாமியார், மாமனார் மட்டும் வரவில்லை என சொல்லிவிட வற்புறுத்த முடியவில்லை. மற்ற சடங்குகள் எல்லாம் உறவினர்களை வைத்து செய்துகொள்ள ஓரளவு சுமூகமாகவே முடிவு செய்தனர் இருதரப்பினரும் சேர்ந்து. இன்னும் இரண்டு நாளில் ஹரிணியை அழைத்து வரலாம் என்றிருக்க அந்த நேரம் […]


கொள்ளை நிலா – 18 (2)

கீழிருந்த அனைவருக்கும் அவர்களின் இந்த விளையாட்டில் புன்னகை தோன்றியிருக்க மகளை பார்த்த மோகனா, “என்ன பாலா இது?…” என்று கேட்டு கீழே இருந்த அறைக்கு அழைத்து சென்று ஒன்று போல புடவையை நீவி கட்டிவிட்டார். எதையும் கவனிக்கும் நிலையில் பாலாவும் இல்லை. பூஜை நல்லபடியாக முடிந்து நல்ல நேரத்தில் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கும் நடைபெற அஸ்வினி அதை லைவாக ஹரிணிக்கு காட்டிக்கொண்டு இருந்தாள். ஹரிணிக்கு பாலா அண்ணியாக வந்ததில் எந்த ஒரு வருத்தமும் இல்லை. பாலாவை […]


கொள்ளை நிலா – 18 (1)

நிலா – 18 பாலா சாப்பிட்டு முடித்ததும் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கீழே செல்ல போக, “வெளில வச்சுடு. மார்னிங் எடுத்துப்பாங்க…” “இப்படி வச்சா அதுக்கு எல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்களா உங்க வீட்டுல?…” “வாட்? உங்க வீடா?…” என அவன் முறைக்க அவளும் முறைத்தாள். “இனி இதுதான் உனக்கும் வீடு. இப்படி உங்க வீடுன்னு சொல்லி பேசாத. புரியுதா?…”  என்றதற்கு பாலா தலையை ஆட்ட, “எதுவுமே நானா தான் கேட்டு தெரிஞ்சுக்கனுமா உன்கிட்ட? நீயா சொல்லமாட்டியா பாலா? அத்தனை […]


கொள்ளை நிலா 17 (2)

பழக்கவழக்கங்கள் என்றதுமே தனது குடும்ப வழக்கங்கள் வரிசையாய் ஞாபகம் வந்தது. கண்டிப்பாக அர்ச்சனா அதற்கு ஆரம்பிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் பாலாவால் முடியுமா? இதுதான் அவனின் யோசனை. “லைன்ல இருக்கீங்களா? இதுவும் பழக்கமோ? கால் பண்ணிட்டு பாதி பேச்சுல சைலன்ட் ஆகிடறது?…” என பாலா சிரிக்க, “இருக்கேன். எங்கயும் போகலை. உன் கூடதான் இருக்கேன். பேசிட்டு இருக்கேன்…” என்றான். “வேலை இருக்குன்னு சொன்னீங்களே?…” “ப்ச், நான் விட்டாலும் நீ விடமாட்டியோ? ரிலாக்ஸா பேச விடுடி…” […]


கொள்ளை நிலா – 17 (1)

நிலா – 17 அப்போது தான் பிளாட்டிற்குள் நுழைந்து வாங்கி வந்ததை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு உணவை ஓவனில் சுட வைத்துக்கொண்டு இருந்தார்கள் பாலாவும், சூர்யாவும். அர்ச்சனா மீண்டும் சூர்யாவிடம் கேட்டதும் அவனும் இருப்பதே போதும், மறுநாள் பார்த்துக்கொள்ளலாம் என்றுவிட அவராலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. பாலா சொல்லியதை போல நிறையவே இருந்தது உணவு. வேண்டாம் என்றிருந்தால் நிச்சயம் வீணாகி தான் போயிருக்கும் என நினைத்தான் சூர்யா. “இங்க இருந்தே போட்டுக்கலாம். இல்லைன்னா ஒண்ணொண்ணா எடுத்துட்டு வரவேண்டியதா இருக்கும்…” […]