அப்போது கதவை தட்டினார் மோகன். கதவை திறந்தாள் நந்தினி. தன்னுடைய வீட்டில் தான் வந்தவுடன் நந்தினி வந்து கதவை திறப்பதை எதுவோ கனவு போல பார்த்து கொண்டிருந்தார் மோகன். அவர் பார்வைக்கு பதில் பார்வை கொடுக்க முடியாமல் நகர பார்த்த நந்தினியை அவர் குரல் தடுத்து நிறுத்தியது. “இங்க நீ வருவேன்னு நான் நினைக்கவே இல்லை. தேங்க்ஸ் நந்தினி. உன்னை இங்க பாக்குறது எனக்கு சந்தோசமா இருக்கு” “பொய் சொல்லாதீங்க. நான் […]
“சரி பா. இப்ப மணி எத்தனை?”, என்று கேட்டு கொண்டே சோம்பல் முறித்தான் “மணி நாலு தான் ஆகுது”, என்று சொல்லி கொண்டே அங்கு இருந்து போனாள் வள்ளி பாட்டி. “அட பாவிகளா எட்டு மணிக்கு வர போற மனுசனை கூப்பிட என்னை இருட்டுக்குள்ள எழுப்பி விட்டுருக்கீங்க. இதுக்கு குடும்பமே கூட்டு என்ன? உங்க பாசத்துக்கு அளவு இல்லையா?” “ஒரு முன்னேற்பாடு தான் பார்த்தி”, என்று சிரித்து கொண்டே நந்தினியும் சென்று விட்டாள். […]
அத்தியாயம் 5 சிரித்து கொண்டே அவன் பின்னே அமர்ந்த மித்ரா, “இன்னைக்கு பெருசா பூகம்பம் கிளம்பும்”, என்று நினைத்து கொண்டாள். வீட்டுக்கு போன பார்த்தி “அம்மா அம்மா”, என்று கத்தினான். அவன் சத்தத்தில் எல்லாருமே வெளியே வந்து விட்டார்கள். “எதுக்கு பார்த்தி இப்படி சத்தம் போடுற?”, என்று கேட்டாள் பார்வதி. “ஆமா பேங்க் போனியே, என்ன ஆச்சு பார்த்தி?”, என்று கேட்டார் மகேந்திரன். “என்ன ஆகுறது? இங்க வந்துருக்காளே ஒருத்தி. இவ தான் எதையோ பேசி அவரை […]
அத்தியாயம் 4 “என்ன விசயம் பா?”, என்று மகேந்திரனை பார்த்து கேட்டான். “நீயும் எத்தனை நாளைக்கு தான், இப்படி தருதலையா, வெட்டியா சுத்திகிட்டு கிடப்ப. ஒரு சோலிக்கும் ஒழுங்கா போறது இல்லை. ஊருல இருக்கிறவன் எல்லாம் கேக்கான் உன் மகன் என்ன பண்ணுறான்னு. அதுக்கு தான் டவுனுல எதோ பூச்சி மருந்து கடை தொடங்கணும்னு சொல்லிட்டு இருந்தல்ல. பேங்க்ல கடன் கேட்டேன். சரினு அந்த மேனேஜர் சொல்லிட்டாரு. நீ போய் என்ன செய்யணும்னு கேட்டு […]
“இது எங்க அத்தைக்கு சொந்த கார பொண்ணு. சும்மா ஊரை சுத்தி பாக்க வந்துருக்கு” “சரி மாமா, அடிக்கடி வீட்டு பக்கம் வாங்க என்ன?” “சரி வள்ளி”, என்று சொல்லி விட்டு நடந்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு மித்ராவை பெருமையாக பார்த்தான் பார்த்திபன். அவள் அதை கவனிக்காமல் நடந்தாள். அடுத்தும் அவர்கள் ஊரில் உள்ள சுப்பு என்ற பெண்ணும் இதே போல பேச, அவளிடமும் “நீ தான் என் கனவில் வந்த”, […]
சிறிது நேரத்தில் காபி குடித்து முடித்து விட்டு “ரூம்க்கு போகலாம்”, என்று நினைத்து எழுந்தவன் முன்னே வந்து நின்றாள் மித்ரா. “ஹாய் பார்த்திபன்”, என்றாள் மித்ரா. அவளை முறைத்து விட்டு நடக்க பார்த்தான். “என்ன ஆச்சு? முகத்தை திருப்பிட்டு போறீங்க? நில்லுங்க “ அதுக்கும் பேசாமல் நடந்தான். “டேய் நில்லுடா”, என்று சொன்னாள் மித்ரா. “என்னது டேயா?”, என்று அதிர்ச்சியாக திரும்பினான் பார்த்திபன். “பின்ன நான் எவ்வளவு […]
அத்தியாயம் 3 “பாருங்க அத்தை எப்படி திமிரா போறான்னு? என்னங்க நீங்களும் பேசாம இருக்கீங்க? அவளை எதுக்கு உள்ள விட்டீங்க?”, என்று கேட்டாள் பார்வதி. “விடு பார்வதி. அந்த பொண்ணு வந்த பிறகு, நந்தினி முகத்துல இருக்குற சந்தோசத்தை பாத்தியா? அம்மா நீங்களும் எதுவும் சொல்லாதீங்க. மோகனோட பொண்ணு, எதுக்கு இப்ப இங்க வந்துருக்கான்னு மெதுவா கண்காணிப்போம். உள்ள வாங்க”, என்று சொல்லி விட்டு நடந்தார் மகேந்திரன். “என்ன அத்தை உங்க பிள்ளை […]
“ஐயோ நான் அப்படி சொல்லவே இல்லை மா” “என்ன இருந்தாலும் இப்படி சொல்லலாமா பார்த்தி, அம்மாவை பத்தி. மருமகளே உன் பையன் எப்படி சொல்லிருக்கான் பாரு? அவனை விடாத”, என்று ஏத்தி விட்டாள் வள்ளி. “ஐயோ கிழவி ஏத்தி விடுதே. எல்லாம் இவளால தான். என் மானமே போகுது”, என்று நினைத்து கொண்டு மித்ராவை முறைத்தான். அவன் முறைப்பு புரிந்தாலும் “இது தான் நீங்க சொன்ன சகுனி கிழவியா?”, என்று அடுத்த கேள்வியை […]
அத்தியாயம் 2 “என்னை காப்பாத்த எனக்கு தெரியும். வேணும்னா இங்க விழுந்து கிடக்கானே, அவனை காப்பாத்துங்க” “ஏன் அவனுக்கு என்ன ஆச்சு? உங்க கிட்ட தப்ப நடந்து கிட்டானா? எப்பவுமே இவன் இப்படி தான். உங்களுக்கு ஒன்னும் ஆகலையே? ஆமா மணி எதுக்கு எந்திக்க முடியாம படுத்து கிடக்கான்? ஏலே என்ன ஆச்சு?”, என்று கேட்டான் பார்த்திபன். இவனை பார்த்ததும் “பார்த்தி காப்பாத்துடா”, என்று சொன்னான் அங்கு கிடந்த மணி. “என்கிட்டயே […]
சீட்டில் தலை சாய்ந்து படுத்தாள் மித்ரா. “போகும் காரியம் நல்லதா நடக்கணும் கடவுளே. அங்க இருக்குறவங்க எல்லாம் எப்படி இருப்பாங்களோ? என்ன சொல்லுவாங்களோ? அந்த ஊர் எப்படி இருக்குமோ? அப்பா பட்டிக்காடுன்னு சொல்றாங்க. கொஞ்சம் அவரச பட்டு கிளம்பிட்டேனோ? அப்பாவையும் கூட்டிட்டு வந்துருக்கலாமோ? ச்ச ச்ச என்ன மித்ரா நீ? அதுக்குள்ளே ஜெர்க் ஆகலாமா? போற, நினைச்சதை சாதிக்கிற”, என்று தனக்குள் சொல்லி கொண்டாள். பஸ் சென்னையை விட்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. மெதுவாக […]