Nice
இதை கதைன்னு பாக்க முடியலை அதான் authoroda வெற்றிExcellent writing.
வக்கீல் வீராவோட வாய்மொழி அப்படியே ஏதோ கீதோபதேசம் மாதிரி இருந்தது.
தேவியோட தெளிவு அருமை. அவளுக்கு இனிமேலாவது வாழ்க்கையில் அவ மனம் விரும்பும் நிம்மதி கிடைக்கணும்.
பொறுக்கி குமரன். இவனையெல்லாம் சாப்பாட்டுல விஷம் வெச்சு கொன்னுடனும். அவன் தேவி கிட்ட நடந்துகிட்ட முறையையும் போதையில் அவள் மீது சுமத்திய பழிகளையும் அப்படியே சித்ரா கிட்ட சொல்லி (இன்னும் ரெண்டு extra bits போட்டு ) அவளை விட்டே இவன் சோலியை முடிக்கணும். ஹும் ஆனால் சித்ராகிட்ட அந்த தெளிவெல்லாம் எதிர்பார்ப்பது வீண்.
தேவிக்கு கிடைச்ச மாதிரி (கிடைச்சிடும் தானே?) சாலாக்கும் விமோச்சனம் கிடைக்காதா? அவ குழந்தைகள் பத்தி பேசவே பிடிக்கலை.
இதுங்கல்லாம் internet பார்க்கறப்ப மட்டும் தான் வயசுக்கு மீறிய வளர்ச்சியோட இருக்கும். மத்தபடி ஒன்னும் புரியாத பச்சை மண்ணுங்க மாதிரி தான் நடந்துக்குங்க. இதுகளும் சொகுசு வாழ்க்கை பழகிய சுயநலவாதிகள் தான். பிரகாசுக்கு பிறந்ததுங்கன்னு நிரூபிக்குதுங்க.
சாலா ஏன் தேவியோட வீட்டுல இருக்கக்கூடாது? சோறு தானே தேவை. சமயக்கார அம்மா தயவுல போட்டு தொலைச்சுட்டா போச்சு. மத்தபடி கண்ணுக்கு கண்ணா பார்த்து வளர்க்க தான் திருந்தி வந்த அப்பா கூடவே இருக்காறே. பக்கத்து தெரு தானே. ஏதாவது அவசரம் என்றால் வந்து போக முடியுமே. தங்களோட சந்தோஷத்திற்கு அம்மா தான் எப்பவுமே விலை கொடுக்கணும் என்று நினைக்கும் மக்களுக்கும் ஒரு கொட்டு வைக்க தான் வேணும்.
ஏதோ crime novel படிக்கற மாதிரி இருக்கு. சாலாக்கு இது தான் விதியா எப்படியாவது ஒரு நிரந்தரமான நேர்மறை மாற்றம் அவ வாழ்க்கையில் வராதான்னு ஒரு குடைச்சல் மனதுக்குள் வருது. (கதை படித்து முடித்த பின்னரும் இதே எண்ணம் தான் ஓடுது )
ஆமாம் ஷாலினியும் வந்திட்டா double குஷி
இவன் ஒரு ஆணியையும் புடுங்க வேணாம். இவனை நம்பி நம்மளும் சாலா மாதிரி ஏமாற வேணாம். அப்பன் கொடுத்த ரெண்டு லட்ச ரூபா கடிகாரத்தை வாங்கிக்கறப்பவே எனக்கு doubt வந்துச்சு. இப்ப confirm ஆகிடுச்சு.
ஒரு எபில இவன் ஷாலினி கிட்ட பேசுவதை வைத்து அம்மாவோட moral support இவன் தான்னு நம்பி ஏமாந்துட்டேன்....இவன் ஒரு ஆணியையும் புடுங்க வேணாம். இவனை நம்பி நம்மளும் சாலா மாதிரி ஏமாற வேணாம். அப்பன் கொடுத்த ரெண்டு லட்ச ரூபா கடிகாரத்தை வாங்கிக்கறப்பவே எனக்கு doubt வந்துச்சு. இப்ப confirm ஆகிடுச்சு.
இப்ப 18 வயசு வளர்ந்துருக்குற இந்த கேடி அஜய் கிட்டத்திட்ட மூணறை வருஷமா, இவன் நல்லவனா கெட்டவனா சந்தர்ப்பவாதியான்னு அனுமானிக்க முடியாமலேயே என்னை குழப்பிகிட்டு தான் இருந்தான். ஆனால் இன்னிக்கி தெளிவாயிடுச்சு.
"Men will always be men"- commumity குள்ள அஜயும் உறுப்பினராக்கிட்டான்.
இவனுக்கும் இவன் அப்பனை மாதிரியே ஒரு வாழ்க்கை துணை அமைஞ்சா தான் சாலாவோட வலி புரியும். (சாலா சபிக்க மாட்டா ஆனால் நானும் சபிப்பேன்).