சரண்யா இப்படி தான் ஒரு முடிவெடுப்பான்னு நினைச்சேன். ஆனால் குழந்தைகள் அவளை விட்டுட்டு எப்படி இருப்பாங்க? அவ ஒரு மகளா, உடன்பிறப்பா, மருமகளா, மனைவியா, தாயா இப்படி எல்லா பரிமாணத்திலும் தன்னோட idealness-ஐ நிரூபிச்சிட்டே இருக்கா.
புற அழகு உடனே கண்ணுக்கும் கருத்துக்கும் புரிந்து விடும் எல்லாருக்குமே. ஆனால் அக அழகு வெற்றி மாதிரியான சில முட்டாள்களுக்கு காலம் காட்சிப்படுத்தும் கடினமான சூழ்நிலையில் தான் புலப்படும். இப்ப அப்படி ஒரு தெளிவு வந்து தான் இவ காலில் விழுந்துட்டான்.
கசப்பான வினோதம், சுகுமாரன் மாதிரி ஒரு(பல) கேடுகெட்ட ஆண்(கள்) இடம் இருந்து தப்பிக்க, தன்னையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள பெயரளவுக்கு மட்டுமே புருஷனா இருக்கும் வெற்றி மாதிரி இன்னொரு கேடுகெட்டவனோட துணை அவசியமாகிடுது.