தனம் நீங்க பேசுறது கொஞ்ச நஞ்சம் இல்ல.... சரண் சொல்லுற மாதிரி புதைத்ததை தோண்டி எடுத்த நாற தான் செய்யும்.... பொண்ணு கொடுக்க இஷ்டம் இல்ல இப்போ மட்டும் எதுக்கு கொடுக்க முன்ன வரீங்க...
சரண்யா இனி கடந்த காலத்தை பத்தி நினைச்சு சண்டை போட்டு இப்போ இருக்க நிம்மதி சந்தோஷத்தை இழக்க தயாரா இல்லை நாலு வருஷத்துக்கு முன்னாடி பக்குவம் இல்லாத சின்ன பொண்ணு அதான் கோவத்தில் முடிவு எடுத்து ஏதேதோ செய்தாள் இப்போ வாழ்க்கை அவளை நல்லா பக்குவபடுத்திடுச்சு
இந்த தனம் அதோட வயசுக்கு இன்னும் பஜாரியாவே சுத்தி கிட்டு இருக்கு
பாசமலர் கூட்டமே உங்க அண்ணன் அபியை தான் விரும்புறான் என்று சரண்யாவை துரத்துனீங்களா கொஞ்சம் மனசாட்சி இருந்தால் சரண் கர்ப்பமா இருக்கா என்று தெரிஞ்ச போதே உங்க அண்ணனை சரண் கூட வாழ சொல்லி இருக்கணும்
வெற்றி அப்பா தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் அடிச்சு தாலி கட்ட வச்சிடலாம் ஆனால் அதுக்கு பிறகு காலம் முழுக்க மிரட்டியே வாழ வைக்க முடியுமா இவர் கொஞ்சம் நிதானமா இருந்து இருக்கலாம்
வெற்றி இவனை முதல் எபில இருந்து பதினெட்டு எபி வரைக்கும் அடிச்சு துவைச்சு அலசி பிழிந்து காய போட்டு அயர்ன் பண்ணி வச்சாச்சு அதனால் இனி இவனை விட்டுடலாம்
தனம் ஆட்டம் எப்போ அடங்குமோ தெரியல...... ஆனா இவங்க பேச்சுக்கு அவசரப்பட்டு தானும் எதிர்வினை ஆற்றுற நிதானமில்லாத சரண் இப்போ இல்லை.... ரொம்பவே தெளிவு... சூப்பர் சரண்....
வேல்முருகன் பிடிவாதத்துக்கும் ரோசத்துக்கும் இந்த கல்யாணம் நடந்துருக்கு....
வெற்றி நல்ல திட்டம் தான்... அப்பாவோட அடிக்கு பயந்துகிட்டு பொண்ணு பார்த்து கல்யாணம் வரைக்கும் வந்துட்டு கடைசி நேரத்துல அந்த பொண்ணைத் தவிக்க விட்டுட்டு காதலியோட ஓடுறது.... கடைசில நல்லா மாட்டுனியா...
வேல்முருகன் கட்டி வச்சத்தோட கடமை முடிஞ்சுடுச்சுன்னு நினைச்சுட்டாரோ...