சரண்யாவோட அக்காவெல்லாம் ஒரு அக்காவா. சரண்யாவோட உச்சகட்ட அவலத்துக்கு தொடக்கமே பிரியாவோட பேச்சும் அவ தங்கைக்கு தந்த அறிவுரையும் தான்.
இது போதாதுன்னு, அவ வார்த்தையை ஒரு பொருட்டா மதிச்சு, அந்த வீட்டுல இருக்குற கேடு கெட்டவனும் அவன் பெத்த அறிவுகெட்டவனும் சேர்ந்து சரண்யா வாழ்க்கையில் பெரிய சதியை பண்ணி அவளோட தன்மானத்தையே விமர்சனத்துக்கு உள்ளாக்கிட்டாங்க . அதை நல்லா சிங்காரிச்சு கொண்டாட்டிட்டா அந்த தனம்.
வயத்துல பிள்ளையோட நிக்கற பொண்ணை பார்த்த பின்னும் அவளோட புருஷன்கிட்ட ஆறுதல் தேடுறா இந்த அபிராமி. அத்தனை காதல் இருந்தா பெத்தவங்களை மீறி வரேன் கல்யாணம் செய்து வைங்கன்னு வெற்றியோட அப்பாகிட்ட கேட்க வேண்டியது தானே இவ. இவளோட வீட்டுல தானே இவளைத் தர மறுத்தாங்க.
வெற்றிகிட்ட ஒரே ஒரு கேள்வி தான். நீ பேசாமல் ஆம்பளை தான்னு அபிராமியோட சேர்ந்தே prove பண்ணி இருக்க வேண்டியது தானே. எதுக்கு அதுக்கு சரண்யாகிட்ட போன?
போனவன் எதுக்குடா அவகிட்ட உன்னோட காதலைப்பற்றி எதுவுமே சொல்லாம குடும்பம் நடத்தின. உன் நிலைமையை அப்பன்கிட்ட விளக்கறதுக்கு பதிலா சரண்யாகிட்ட விளக்கி இருக்க வேண்டியது தானே. அவ தன்னோட பெத்தவங்க கிட்ட சொல்லி உன்னை விவாகரத்து கூட செஞ்சுருக்க வாய்ப்பிருக்கு. இல்லை உன் மனசு மாறும். என்று கொஞ்சம் பொறுத்திருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்படி எதுவும் செய்யாமல் அவளை pregnant ஆக்கிட்டு, அப்புறம் அபிராமியையும் கட்டி பிடிக்கறையே. இதை கொஞ்சம் அப்படியே vice versa-ல யோசிச்சு பாரு. அப்ப புரியும் உன்னோட கயமையின் ஆழமும் சரண்யாவின் நியாயமும்.
ஆத்தரே, தனத்துக்கு தனியா, atleast ஒரு பத்து பெரிய episodes வரும் அளவுக்கு மரண படலம் எழுதி இந்த கிளி கதைக்கு ஒரு annexure கொடுங்களேன். கதையோட epilogue இவளுக்கு இல்லை.
ஏன்னா epilogue சரண்-வெற்றி with கிளிகளோட மகிழ்வையும் நிறைவையும் காமிச்சா தான் நல்லா இருக்கும்.