அங்க வச்சு தனியா வான்னு சொன்னா,அத்தனை பேரையும் வச்சு எப்படி வரன்னு கேட்கறவனுக்கு அத்தனை பேர் முன்னாடி சொல்ல முடியாத பேச்சை உத்ரா பேசியதால தான் அடிவாங்குனான்னு இந்த லூசுக்கு புரியலையா????.
அதென்னங்க ரோஷத்துக்கு மட்டும் பொண்டாட்டி வேற,அக்கா வேறன்னு தெரியுது???.உங்க வேலையிலாவது நடுநிலையா இருங்கன்னு நல்லா நாக்க புடுங்கறதை போல சொன்னா????.
உத்ரா பேசுனது தெரிஞ்சா மகன் அவ உறவே வேணாம்னு சொல்லிடுவான்,மருமகன் இங்கேயே விட்டுட்டு போய்ட்டா என்ன பண்றதுன்னு ருக்மணி வாய தொறக்காம இருந்துட்டு,இதயாவையும் கண்ணன் கிட்ட எதுவும் சொல்லலையேன்னு கேட்குதே மனுசியா இவ???.
பொண்ணா பெத்து வச்சிருக்கீங்கன்னு கேட்டு யசோதா, ருக்மணியையும்,சிவசுந்தரத்தையும் உண்டு இல்லைன்னு பேசி ஒரு வழி பண்ணிட்டாங்க???. தீப்திக்கு பதிலா யசோதா இங்கே இருந்து இருந்தா நேத்தே உத்ரா பேசுனதுக்கு தொவைச்சு தொங்க விட்டிருப்பாங்க????.
வேலைய விட்டு வரனுமா இதயா,கோச்சுக்கிட்டு போன பொண்டாட்டிய சமாதானம் தான் பண்ணலைனா,கூப்பிடற அழகு அதுக்கு மேலே???.பேச வேண்டிய நேரத்துல பேசாம இருந்துட்டு,எழுந்து என்ன பேசுவாளோன்னு இப்ப யோசிச்சு பிரயோஜனம் இல்லை தம்பி???.